GR - Degree காபி 1  

Posted by Matangi Mawley


முன் குறிப்பு 1: Degree காபி-ல decoction மட்டும் தான் இருக்கும்.
முன் குறிப்பு 2: Rahman கு நான் பூஜ பண்ணினாலும், அவருக்கு முன்னாடி இருந்தவர்கள தான் எனக்கு இவருக்கு முன்னாடி தெரியும்.


"ஓமன திங்கள் கிடாவோ..." ன்னு என் பாட்டியோட தாலாட்டு பாட்டு கேட்டு தான் நான் தூங்குவேன், சின்ன வயசுல. ஒரு சில நாட்கள்-ல, cassette ல பாட்டு போட்டு தூங்க பண்ணுவா. அது usually, MKT பாட்டுகளாதான் இருக்கும். அப்போலேர்ந்து பழக்கம் இந்த cinema, பாடல்களோட எனக்கு. அந்த காலத்துல, majority யான பாடல்கள் எல்லாமே கர்நாடக சங்கீதத்த மையமா கொண்டு தான் அமைக்க பட்டிருக்கு. ஹாஸ்ய பாடல்களும் சரி, romantic duets உம் சரி- எந்த மாதிரியான situation கும் ஏற்ற ராகமும், பாடலும் அந்த காலத்துல இருந்தது. சின்ன வயசுல, "இத நம்மால மேய்க்க முடியாதுன்னு"- பாட்டி ஆத்துல VCR ல பழைய cinema க்கள் போட்டு விட்டு "பாரு"ன்னு உக்காத்தி வெச்சுடுவா. "அசோக் குமார்" லேர்ந்து "மணாளனே மங்கையின் பாக்கியம்" வரைக்கும் நான் அங்க தான் பாத்தேன். அந்த படங்கள எல்லாம் இப்போ பாக்க பொறுமை இருக்காது. ஆனா- அப்போ நான் அத பாத்த விளைவுதான் இந்த "தமிழ் blog" னு என் அவிப்ராயம்.

கர்நாடக சங்கீதத்த சினிமாவில மிக அருமையா கையாண்ட பல music directors ல முதல் இடம், என்னை பொறுத்த வரைக்கும்- பாபநாசம் சிவனுக்கு தான். அவரோட பாடல்கள், வெள்ளித் திரையிலிருந்து மேல் எழும்பி மேடைக் கட்சேரி களிலும் இடம் பிடித்தாலும், ரிக்ஷா ஓட்டும் ஒரு சாதாரண மனிதனுக்கும் சினிமா பாடல்களின் மூலம் கர்நாடக இசையை எடுத்துச் சென்ற பெருமை- இவரையே சாரும். "MKT" ங்கறது எவ்வளவு பெரிய "phenomenon" அப்டீங்கறது, எனக்கு ஜெயகாந்தனோட "இருளில் ஒரு துணை" படிச்சதுக்கு அப்புறம் தான் தெரியும். அந்த "icon status" அவருக்கு கிடைத்ததுக்கு பாபநாசம் சிவனோட பாடல்களுக்கும் ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. ஒவ்வொரு வார்த்தை மற்றும் ராகத்தினுடைய குணாதிசயங்கள மனதில் வைத்துக் கொண்டு இசை அமைத்திருக்கர், இவர்- என்பதில்- என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய ப்ரமிப்பு தான். அப்படிப்பட்ட ஒரு பாட்டு தான் 'சிவகவி' சினிமாவில் வரும் இந்த "வசந்த ருது மன மோகனமே" ங்கற இந்த பாட்டு. வசந்தா-குந்தலவராளி-யதுகுலகாம்போதி-சுருட்டி-ன்னு ராகத்தினுடைய பெயரும் பாட்டிலேயே வரும். ரெண்டு வரி தான் ஒரு ராகத்துக்கு நாலும்- அந்த ராகத்தோட முழு சாரமும் அந்த ரெண்டு வரியில் இருக்கும்!

"மன்மத லீலை வென்றார் உண்டோ"- ங்கற 'ஹரிதாஸ்' சினிமா பாடலா இருக்கட்டும், "பூமியில் மானிடன்"-ங்கற 'அசோக் குமார்' சினிமா பாடலா இருக்கட்டும், இன்னிக்கு வரைக்கும், remixes மூலமா உயிர் பெற்று இருக்குன்னா- அதுக்கு பாபநாசம் சிவனுடைய இசையின் பெருமை தான். சிவாஜி/பானுமதி 'அம்பிகாபதி'க்கு முன்னாடியே 30s ல MKT /MS. சந்தானலட்சுமி நடிச்ச ஒரு 'அம்பிகாபதி' உண்டு. என்னதான் அத Ellis Dungan போன்ற பெயர் பெற்ற Director direct பண்ணினாலும்- இன்னிக்கு 'அம்பிகாபதி'ன்னா அது சிவாஜி/பானுமதி நடித்தது தான் நமக்கு நினைவில் இருக்கு. இதுக்கு, அந்த சினிமா-வின் பாடல்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

G. ராமநாதன் என்ற ஒடனே- "classical music" தான் இவர் போடுவார்-னு ஒரு எண்ணம் நமக்கு வந்துடலாம். அனால்- அந்த காலத்லேயே- western music அ நம்ம சினிமா பாடல்கள்-ல ரொம்ப அழகா இவர் புகுத்திருக்கார். என்னை பொறுத்த வரையில்- இது 'inspiration' and ஒரு 'stroke of innovation'. இப்படிப்பட்ட சில மாற்றங்களினால்தான்- நம் சினிமா இசை-க்கு மீண்டும் ஒரு புது வடிவம் கிடைச்சது. உதாரணமா- 'ஆரவல்லி'ங்கற சினிமா-ல வரும் "சின்ன பெண்ணான போதிலே' ங்கற பாட்டு- 'Que Sera Sera' ங்கற western song ஓட ஒரு 'inspiration'. அதையும் அவர் மிகவும் 'acceptable' ஆ கையாண்டிருப்பார். ஆனா- 'அம்பிகாபதி'யினால் தான்- அவர நாம இன்னி வரைக்கும் நினைவில் வைத்திருக்கோம். அந்த பாடல்களில்- கேட்பவர்களை ஈர்க்கும் ஒரு கவர்ச்சி! "மாசிலா நிலவே" பாடலோட- மிகவும் அருமையான 'progress' மாண்டு ராகத்திலேர்ந்து- நடை மாறி 'அன்பே இன்பம்'கு வந்து- பின்பு புன்னாகவராளி-யா ராகம் மாறி 'வானம் எங்கே'ன்னு முடியும். அந்த கால சினிமா பாடல்கள்-ல இது ஒரு பெரிய சாதனை தான். ஆனா எனக்கு 'அம்பிகாபதி'ல ரொம்பவும் பிடித்தமான பாட்டு- 'கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே'-ங்கற பாட்டு தான். அப்படி ஒரு பீம்ப்ளாஸ் ராக பிரயோகம் நான் கேட்டது இல்ல! Sheer creativity! பானுமதி அவர்கள் பாடினதா? GR ஓட இசையா? ன்னு சொல்ல முடியாது! கல்யாணி- predominantly ஒரு உச்ச ஸ்தாயி ராகமா பயன்படுத்தப் பட்டுவந்த அந்த காலத்துல- 'சிந்தனை செய் மனமே' ஒரு அருமையான change. அனாலும் என்னோட list -ல 'துணிந்த பின் மனமே' ங்கற 'தேவதாஸ்' பாட்டுக்கு தான் முதல் இடம்.

GR பத்தி பக்கம் பக்கமா எழுதிட்டு "உத்தம புத்திரன்" பத்தி ஒண்ணுமே சொல்லேன்னா எப்புடி? "இவரா-- carnatic தான் போடுவார்" ங்கற misconception அ மாத்தி, எல்லாரையுமே இன்னி வரைக்கும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல்- "யாரடி நீ மோகினி". சிவாஜி-ய பாக்கறதா, Helen அ பாக்கறதா, பாட்ட கேக்கறதா? ன்னு எல்லாமே A1! ஆனா- அந்த சினிமாவிலேயே best பாட்டு- 'உன் அழகை கன்னியர்கள் கண்டதனாலே' ங்கற பாட்டு தான். பாட்டு, லயம், picturisation ன்னு எல்லாமே அந்த பாட்டுல மிக அருமையா இருக்கும். கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கும் இந்த சினிமாவில் பஞ்சமில்ல. கானடா-ல 'முல்லை மலர் மேலே' லேர்ந்து 'காத்திருப்பான் கமல கண்ணன்' ங்கற அருமையான P. லீலா பாட்டு- பத்மினி-ராகினி dance ஓட ன்னு இந்த சினிமா வில வரும் பாட்டு எல்லாமே- இசைக்கு ஒரு சமர்ப்பணம் தான்.

'மதுரை வீரன்' ல யும் இவரோட அற்புதமான இசை வெளிப்பட்டிருக்கு. அனாலும் 'ஏச்சி பிழைக்கும் தொழிலே' பாட்டிற்கும் 'தீன கருணாகரனே நடராஜா' ங்கற 'திருநீலகண்டர்' ல வர பாபநாசம் சிவனோட பாடலுக்கும் இருக்கும் ஒற்றுமைய பத்தி என்னால எழுதாம இருக்க முடியல. இதுவே கூட சிவன் லேர்ந்து GR கு வர துக்கு ஒரு காரணமா இருக்கலாம்! 'கட்ட பொம்மன்' லேர்ந்து 'இன்பம் போனகம் வெண்ணிலா', 'கப்பலோட்டிய தமிழன்' லேர்ந்து 'காற்று வெளியிடை கண்ணம்மா' ன்னு GR ஓட புகழ அடுக்கிண்டே போகலாம். என்ன பொறுத்த வரைக்கும் GR இன்றைய திரை இசையோட முன்னோடி. GR , அவரோட பாடல்களிலும், அதன் ஆத்மாவிலும்- என்னை போன்ற degree காபி ரசிகர்கள் மனதிலும் என்றும் நிற்கிறார்...

Degree காபி  

Posted by Matangi Mawley


Engineering படிக்கற பொது- இந்த final year ல Project - Project னு ஒண்ணு பண்ணுவா. 6 மாசம், college கு போகாம, வேற ஊருக்கு பொய் கொட்டம் அடிக்க ஒரு நல்ல வாய்ப்பு அது. என்னோட போறாத காலம், என்கூட கூட்டு சேந்துண்ட கேசெல்லாம் "படிக்கற" கும்பல்! அஷோக் நகர் ல ஒரு firm ல "project" பண்ணினோம். பக்கத்லையே ஒரு hostel ல room எடுத்துண்டு மூணு பெரும் தங்கினோம். "போணும், படிக்கணும், வரணும்"- னு எனக்கு என் நண்பி உபதேசம் பண்ணித்து. என்னோட இந்த சொகக்கதைல எனக்கிருந்த ஒரே ஆறுதல்- hostel சாப்பாடு தான்.

Hostel சாப்பாடெல்லாம் பொதுவா நன்னா இருக்காது ன்னு ஒரு ஐதீகம் நம்ப மக்கள் மத்தில உண்டு. ஆனா, என் ஜாதக விசேஷம்-னு நெனைக்கறேன்- எங்க போனாலும் எனக்கு சாப்பாடு பிரச்சன மட்டும் இருந்ததே இல்ல. ஒரு பாட்டி-தாத்தா தான் சமையல். 4 am கு எழுந்துண்டு எல்லா பசங்களுக்கும் சமைப்பா. காரைக்குடி style சமையல். "எம்.ஜி.ஆர் வூட்டுல சம்சிருக்கேன்" ன்னு அந்த பாட்டி பேசறதையும் காத கொடுத்து கேக்கற ஒரே ஜீவனான என்கிட்ட சொன்னா அந்த பாட்டி. அதுக்கப்றம், ரசமாட்டம் கார கொழம்ப தாராளமா உடுவா அந்த பாட்டி, எனக்கு மட்டும்!

சரி. இப்போ இந்த விஷயமெல்லாம் OK. ஆனா, என் சோக கதையோட இன்னொரு அங்கம்- இவளோ சாப்பாடெல்லாம் நன்னா இருந்தும், coffee கு வழியில்ல. "எல்லாம்- இது போதும்"னு என் கூட இருந்ததுகள்-லாம் அந்த instant coffee ய எப்புடி தான் குடிச்சுதுகளோ, ரங்கனுக்கு தான் வெளிச்சம். ஒரு வாய் கூட என்னால குடிக்க முடியல. "Hindu Paper + Degree காபி + 8:45 A.I.R கச்சேரி" கேக்க வெச்சு வளத்தாளே- எல்லாம் அவாள சொல்லணும்!

எப்படியோ 15 நாள் ஒட்டிட்டேன். ஒரு நாள் evening, hostel வர வழில - அஷோக் நகர் "ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்" வாசல்-ல, ஒரு நிமிஷம் அப்பிடியே நின்னுட்டேன். Usually, அந்த area வந்தாலே நான் சீக்கரமா நடப்பேன். ஏன்னா அங்க ஒரே நெய் smell வரும் - எனக்கு தல வலிக்கும். But அப்ப தான் அந்த "கும்பகோணம் Degree காபி இங்கு கிடைக்கும்"னு எழுதி வெச்சிருந்த board என் கண்ணுல பட்டுது. "தவிச்ச வாய்க்கு coffee கொடுத்த" அந்த கட நன்னா இருக்கணும்-னு மனசுல நெனைச்சுண்டு, கூட இருந்ததுகளையும் "நான் sponsor" பண்ணறேன் னு (இல்லேன்னா வராதுகள்) அழஷிண்டு பொய் 15 days கு அப்புறம் ஒரு நல்ல coffee சாப்டேன்! நல்ல coffee சாப்ட effect ஓ என்னவோ, அதுகளுக்கும் அந்த hostel காபி அதுக்கப்றம் பிடிக்கல. Daily evening , அங்க பொய் coffee சாப்டுவோம் நாங்க.

ஸ்ரீரங்கம் கோவில் வாசல்-ல "முரளி காபி"ன்னு ஒண்ணு உண்டு. நானும். என் அப்பாவும் சும்மாவே அங்க பொய் coffee சாப்டுவோம். Excellent Quality ! 5 ரூபாய்-லேர்ந்து படி படியா 8 ரூபாய் ஆச்சு இப்போ. ஆனா அதே நல்ல standard maintain பண்ணறா. அதே போல, சத்திரம் bus stand ரகுநாத் hotel லையும், ரவா தோசை and coffee ரொம்ப நன்னா இருக்கும். அர சக்கர போட்ட சுத்தமான degree coffee குடிக்க முடியலன்னா என்ன சம்பாதிச்சு என்ன ப்ரயோஜனம்?

"நன்னா வளந்திருக்கு இந்த பொண்ணுக்கு நாக்கு"ன்னு நீங்க நினைக்கலாம். "சத்து மாவு" பால் ஒரு tumbler அ கைல வெச்சுண்டு 1.5 மணி நேரம் ஒயட்டுவேன். "இது கிளம்பினா போரும் டாபா" ன்னு "ஒரு மொணர்" திருட்டு coffee கொடுப்பா என் அப்பா எனக்கு. அதோட result தான் இது.

என்னதான் Narasu 's /Bru /Nescafe /Coffee Day /Udhayam னு ஏகப்பட்ட Coffee market ல இருந்தாலும், தஞ்சாவூர்-ல "Nathan's " னு ஒண்ணு உண்டு. அந்த Coffee போல வேற எங்கயுமே கிடையாது அப்டீங்கறது என்னோட expert opinion! விளையாட்டுக்கு சொல்லல. எப்பயாவது தஞ்சாவூர் போனாலோ, இல்ல அங்கேர்ந்து தெரிஞ்சவா வந்தாலோ, வாங்கிண்டு வர சொல்லி Coffee போட்டு சாப்டு பாருங்கோ. அப்புறம் தெரியும் என் taste பத்தி!

சரி. இப்போ திடீர்னு ஏன் Coffee பத்தி இந்த post னு நீங்க கேக்கலாம். "Degree காபி" ங்கறது "Metaphor " ஆ சங்கீதத்துக்கும் உபயோகப் படுத்தற வழக்கம் உண்டு. Music Blog ஒண்ணு வெச்சுக்கணும் னு எனக்கு ரொம்ப வருஷமா ஆசை. ஆனா, அத start பண்ணி, அதுக்கு readership ஏற்படுத்தரதெல்லாம் முடியுமான்னு தெரியல. அப்புறம், "Music , Method and Madness" னு ஒரு group blog ல அழுத எனக்கு தெரிஞ்சவா அழைச்சா. அப்புறம் அங்க யாருமே இல்லாத கடைக்கு நாங்க கொஞ்சம் பேர் மட்டும் டீஆத்திண்டு.... sorry ... காபி ஆத்திண்டு இருந்தோம். அதுக்கப்றம் தான், "நம்ம கிட்ட தான் இங்க 2 blog இருக்கே"ன்னு தோணித்து. சரி- அதெல்லாம் இதுல ஏதாவது ஒண்ணுத்துல போட்டுக்கலாம்-னு decide பண்ணினேன். அப்டிதான் இந்த "Degree காபி" genre எனக்கு தோணித்து. அப்போ அப்போ ஏதாவது music related என்னோட ideas இந்த genre கீழ வரும், "மைத்துளிகள்"ல. எல்லாரும் படிக்கலாம். (செலபா, "காதலிக்க நேரமில்லை"ல ஒரு dialogue சொல்லுவார்-"நான் என்ன எடுக்கறேனோ அதான் படம். நீ என்ன நடிக்கறியோ அதான் நடிப்பு. இந்த ஜனங்க பாத்து தீரணும், அது அவங்க தலை எழுத்து..." ன்னு. ஏதோ தோணித்து, திடீர்னு...) கூடிய சீக்கரம், என்னோட ஒரு "Degree காபி" post -ஓட உங்கள சந்திக்கறேன்...

பொங்கல் வாழ்த்துக்கள்...  

Posted by Matangi Mawley


MS-Paint கிறுக்கல்...

"Mobile வாங்கலையோ, Mobile"!  

Posted by Matangi Mawley

<-- 31st Dec -->

நான்: New Year -கு புதுசா நான் ஏதாவது பண்ணனும்.
<-- வீட்டில் ஒரு அமைதி -->
நான்: எனக்கு என்ன வாங்கி தர போற, New Year -கு?
அப்பா: <--Hindu Paper லேர்ந்து கண்ணை வெளியில் எடுத்து--> அப்படியெல்லாம் ஒரு வழக்கம் நம்மாத்துல கிடையாதே!
நான்: ஆனா இந்த New year கு எனக்கு புதுசா ஏதாவது பண்ணனும் போலவே இருக்கே!
அப்பா: நீதான் வேலைக்கு போற, சம்பாதிக்கற- என்ன வேணும்னாலும் வாங்கிக்கோ...
நான்: <--தரைய 15 நிமிஷம் உற்று பார்த்து யோசித்த பின்--> நான் ஒரு புது Mobile வாங்கிப்பேன்!
அம்மா: <--சமையலறையிலிருந்து--> அதானே பாத்தேன்!
அப்பா: ஆஹா வாங்கிக்கோ! இப்ப இருக்கற Mobile வாங்கி எத்தன நாளாச்சு?
நான்: நாளெல்லாம் ஒன்னும் இல்ல. நிறையா மாசமாச்சு. இந்த Mobile அ நான் ஒன்னும் கொடுக்க போறதில்ல...
அப்பா: ஓஹோ!
நான்: நான் "flip " mobile வாங்கிப்பேன்...
அப்பா: அப்படீன்னா?
நான்: நான் college ல படிக்கும் பொது தொரக்கரா போல ஒரு mobile வெச்சிருந்தேன்-இல்ல? நீ கூட அந்த mobile அ தொலச்சிட்டியே... அத போல...
அம்மா: <--ஆசையான குரலில்--> நீ வாங்கிக்கோடா, ஒரு நல்ல mobile ஆ...

<-- Internet ல புது mobile தேடல்-ling -->
<-- அப்பா escape -->

அம்மா: ரொம்ப ஜாஸ்தி செலவு பண்ணாதடா...
நான்: இல்ல-மா! ஆனா இப்ப ஒரே confusion !
அம்மா: எதுவா இருந்தாலும் பாத்து செலவு பண்ணுடா...
நான்: அம்மா- இத பாரேன்...
<-- Select பண்ணியிருக்கற mobile அ காட்ட- ling -->
அம்மா: பாக்க ரொம்ப அழகா இருக்கு. ஆனா, நீ இப்போ வேச்சிண்டுருக்கறதும் ரொம்பவே அழகா இருக்கு...
நான்: அது இல்ல மா... இதுல எவ்வளவோ- வோ- வோ- வோ " features " இருக்கு தெரியுமா?
அம்மா: எனக்கு எங்கடா தெரியும் அதெல்லாம்?
<-- இன்னும் கொஞ்ச நேரம் internet தேடல் -->
நான்: அனா இந்த புது mobile ஒன்னும் அவ்வளவு நன்னா இல்ல. ரொம்ப சின்னதா இருக்கு!
அம்மா: <-- --- -->
நான்: ஆனா நான் இந்த mobile வாங்கிப்பேன்... நாளைக்கு அப்பா-வ என்கூட mobile வாங்க வர சொல்லு...
அம்மா: ஓ...

<-- 1st மற்றும் 2nd Jan அப்பா எங்க கை-ல சிக்கவே இல்ல! -->
<-- 1st Jan : நிறையா mobile அலசி கடேசியில் Ipod வாங்கலாம் னு Decide பண்ணியாச்சு! -->
<-- 2nd Jan : நிறையா Ipod அலசி கடேசியில் less features இருக்கும் "flip" mobile வாங்கலாம் னு Decide பண்ணியாச்சு! -->

<-- 3rd Jan -->

நான்: அம்மா, Ipod - எல்லாம் வேண்டாம்-னு decide பண்ணிட்டேன். அதெல்லாம் office ல allowed இல்ல. தவிர mobile ஒண்ணு, Ipod ஒண்ணு - லாம் கை-ல வெச்சுண்டு அலைய முடியாது!
<-- அம்மா/அப்பா No Reaction -->
நான்:
"Flip" mobile அவ்வளவா "features" ஏ இல்ல! என் mobile ஓட நல்ல mobile , ரொம்ப வெல ஜாஸ்தி! New year பொது அவ்வளவு செலவு பண்ண வேண்டாம்-னு decide பண்ணிட்டேன்! நான் என் B 'day கு costly mobile வாங்கிப்பேன்...
அம்மா:
நீ சொன்னா சரி...
அப்பா:
இந்த Luxury லாமே இப்படி தான்! Higher Version போக போக Lower Version பிடிக்காது-தான்...
அம்மா:
ரொம்ப செலவு பண்ணாம பாத்துக்கோ டா...

Friends
, இந்த அப்பா-அம்மா, நம்ம எவ்வளவுதான் support பண்ணறத போல பேசினாலும், கடேசியில் அவங்க நினைச்சதத்தான் நம்ம மூலம் நடத்திக்கறாங்க! Trivial expenses, time கொடுத்து குறைக்கலாம். Diplomacy- decision making -ஓட அவசியமான பகுதி!
Mobile எனக்கு கடைச்சதோ இல்லையோ-- இவங்க "Parenting Technique"
நல்லாவே புரிஞ்சது!


45 நிமிடங்கள்...  

Posted by Matangi Mawley

ஒரு வருஷம் போனதே தெரியல! புது வருஷம் வந்தாச்சே- ன்னு நானும் போன வருஷம் உருப்படியா என்ன நடந்தது-ன்னு 45 நிமிஷமா ceiling அ பாத்து யோசிச்சதுல, சொல்லும்படியா ஒண்ணுமே நடக்கல-ன்னு தான் தோணித்து. ஆனா- அதுக்கப்றம் யோசிச்சு பாத்த போது- நான் வாழ்ந்த வாழ்க்கைல 365 நாள் நான் என்ன பண்ணினேன்-ன்னு கூட எனக்கு நெனவு இல்லன்னா- அது கூட நெனவு இல்லாம நான் என்ன பண்ணி கிழிச்சேன்-ன்னு நெனக்க தோணித்து? இன்னும் ஒரு முயற்சியா- 2010 பத்தி யோசிச்ச போது- இந்த 3 விஷயம் கிடைச்சுது!

மைத்துளிகள். போன 2009 25th Dec . அன்னிக்கு- office ல வேல ஏதும் இல்லாம இருக்கும் போது- பொழுத
போக்கறதுக்காக- ஒரு கிழிஞ்சு போன 'காகிதத்துல' என் பெயர தமிழ்-ல எழுதி பாக்கும் போது- அது, எனக்கு தமிழ் தெரியுமா-ன்னு சோதிச்சு பாத்துக்கற ஒரு முயற்சியா தான் இருந்தது. இன்னிக்கு வரைக்குமே- 'மைத்துளிகள்' எப்படி start ஆச்சு- இன்னி வரைக்கும் அது எப்படி ஓடிக்கொண்டிருக்கு? இது எதுவுமே எனக்கு புரியல! 'காகிதம்'னு நான் அன்னிக்கு எழுதின கட்டுரை- தான் என் வாழ்கைலையே முதல் முதலா நான் தமிழ் ல எழுதின எதோ ஒண்ணு! இது ஒரு எதிர் பாராத பயணம் தான். ஆனா- ஒரு சுவையானதும் கூட! Jan 28th ஓட ஒரு வருஷமாகும் இந்த blog start பண்ணி. உங்க எல்லாருக்கும்- இந்த blog அ இன்னி வரைக்கும் ஓட வெச்சதுக்கு ரொம்ப ரொம்ப பெரிய "Thank you " ஒண்ணு சொல்லிக்கறேன்!

துப்பாண்டி. எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பூனை வளக்கணும்-னு ஆசை. எங்க அம்மா-க்கு இந்த விஷயத்துல லாம் உடன்பாடு இல்ல. ஆனா- இவன் எப்ப எங்க வீட்டுக்கு வந்தான், எப்போ ஜன்னல் வழியா ஏறி உள்ள குதிச்சான், எப்போ sofa அடீல பூந்துண்டான், எப்போ iron பண்ணி வெச்சிருந்த எங்க அப்பா ஓட dress கு மேல சொஹுசா நாலு காலையும் மேல தூக்கி வெச்சுண்டு படுத்டுண்டான்- எங்க யாருக்குமே நெனவு இல்ல! அவனோட curiosity உம் , ஒரு சில சமயங்கள்-ல அவனோட சோம்பேறித்தனமும்- கூட எங்க எல்லாரியுமே அவன் பக்கம் இழுத்துடுத்து! பேச ஒரு விஷயமும் இல்லேங்கற சமயத்திலும்- அவன பத்தி பேசலாம். எங்க எல்லார் life லேயும் ஒரு 'புன்னகை' அவன்!

"The Banyan Trees ". நிவி, thebanyantrees.com னு e -zine ல எழுத Nov 2009 ல எனக்கு mail போட்டிருந்த போது- எனக்கு அத பத்தி ஒரு
எண்ணமும் இல்ல. என்ன எழுத போறோம்? எப்படி எழுத போறோம்-னு. Saturday மதியம் Office லேர்ந்து அந்த mail அ படிச்சதனாலோ என்னவோ! ஆனா- அதுக்கப்றம் "The Other son of Ganges" உருவாச்சு. May 2010 லேர்ந்து கிட்ட தட்ட தொடர்ந்துஅந்த தொடர்-அ அந்த magazine ல எழுதறேன். எனக்கு ஒரு நல்ல அனுபவம் அது.

எவ்வளோவோ நிகழ்வுகளோட ஒவ்வொரு வருஷமும் வருது- போறது. ஆனா- அந்த எல்லா நிகழ்வுகளிலும் ஒரு சிலது தான் நமக்கு நினைவில் இருப்பது! புது வருஷம் நம்மை வரவேர்க்கற தருணத்துல- நமக்கு வேணும்கறத அந்த வருஷத்திலிருந்து எடுத்துக்க வேணும்- ங்கற எண்ணம் தான் எனக்கு இந்த 45 நிமிஷமா ceiling பாத்ததுல கிடைச்ச பாடம்!


எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. Have a great year ahead ...