மாதர் தம்மை இழிவு செய்யும்...  

Posted by Matangi Mawley


பத்மா வ பத்தி இன்னிக்கு தான் பேச்சு வந்தது. 4 வருஷம் ஆச்சு. அவ என்ன ஆனா, எப்படி இருக்கா- ஒரு தகவலும் கிடையாது. 9th உம் 10th உம் என் கூட, என் class ல படிச்சா. என்ன நல்ல handwriting தெரியுமா? எல்லா miss உம் அவள தான் board ல எழுத சொல்லுவா. School prayer பாடுவா. ரொம்ப அழகா பரதநாட்யம் ஆடுவா. 4 வருஷத்துக்கு அப்புறம் அவள பத்தி நான் கேள்வி படர news இப்படியா இருக்கணும்?

11th / 12th கு வேற school மாறி போனா. Commerce படிச்சப்ரம், சென்னை ல ஒரு BPO ல வேலைல சேர்ந்தா. சென்னைல ஒரு Software company ல வேல பாக்கற பையன் கூட கல்யாணம் ஆச்சு-ன்னு 4 வருஷத்துக்கு முன்னாடி தெரிய வந்தது. இன்னிக்கு, என் கூட படிச்ச இன்னொரு friend மூலமா அவள பத்தின அந்த செய்தி கிடைச்சது. Recent ஆ அவளுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்துதாம். "ஆஹா- எவ்வளவு நல்ல news" னு நினச்சேன். "பெண்" குழந்தை பிறந்ததுக்கு அவ தான் காரணம்-னு அவள அவ in-laws வீட்டுல, வீட்ட விட்டு அனுப்பிட்டாங்களாம். அவ husband உம் எந்த support உம் தரலியாம், அவளுக்கு!

இப்போ என்ன ஆச்சு அவளுக்குன்னு எனக்கு தெரியல! அவ contact எதுவும் என்கிட்ட இல்ல. ஆனா இந்த news கேட்டதிலேர்ந்து எனக்கு ஒரே கோவம்!

இப்போவே அவளோட in-laws வீட்டுக்கு போய், அவங்களையும், அவ husband யும் எல்லார் முன்னாடியும் அறையணும் போல இருக்கு! அவ mother-in-law வோட அம்மாவ யாரும் ஏன் வீட்ட விட்டு ஒதிக்கி வைக்கல? கிராமங்கள்-ல சரி- படிக்காத மக்கள், விவரம் தெரியாம நடக்கறாங்க-ன்னு விடலாம். Haryana, Jharkhand, Rajasthan, Maharashtra போன்ற இடங்கள்-ல ரொம்பவே common இந்த மாதிரி சம்பவங்கள். ஆனா town ல? படிச்ச சமுதாயத்துல? அந்த fellow B.Tech ஆம். அவனுக்காவது அவன் அம்மா/அப்பா சொல்றது தப்பு, "XX"/"XY" ய நிர்ணயம் பண்ணற சக்தி யாரு கைலயும் இல்ல ங்கற sense வேண்டாம்? There is no person in this world who does not get “Fooled by Randomness”.

இத்தன Acts இருக்கே! Domestic Violence, Sexual Harassment, Trafficking? International Women's Day வேற ஒண்ணு இருக்கு. என்ன use? சமுதாயம் முழிச்சுக்காத வரைக்கும் என்ன இருந்தும் use இல்ல! ஒரு சமுயாததொட சாபக்கேடு இது. நம்ப அக்கம் பக்கத்ல இத போல ஒரு விஷயம் நடக்கறது தெரிஞ்சா, அத தட்டி கேட்கறது நம்ம கடமை. அக்கம் பக்கத்து வீட்டுல யாராவது ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க? At least half a dozen reasonable and respectable people living in the same street , இந்த வீட்டுக்கு போய் இந்த முட்டாள்கள் கிட்ட ஞாயத்த பேச வேண்டாமா? நம்ம தெருவுல இப்படி நடக்கறது நம்ம எல்லாருக்குமே அவமானம்-னு நினைக்க வேண்டாமா? Social pressure build up பண்ணனும். Legal action must be the last resort. ஏன்னா அவங்க ஒரு case அ முடிக்கறதுக்கே 20 வருஷமாகும்! சம்பந்தப்பட்டவர்களுக்கு ஞாயம் கடைக்கர வாய்ப்புகளும் குறைவு தான்!

பத்மா வுக்கு அவ அக்கம் பக்கத்ல இருக்கறவங்க support கடைக்கும் னு நம்பறேன். Meanwhile, friends யாராவது இத படிச்சா- பத்மா contact details இருந்தா எனக்கு தெரிய படுத்தவும்...

PS : நிறையா English sentences /வார்த்தைகள் பிரயோகத்தை தவிர்க்க முடியல. எழுதணும்-னு plan பண்ணி எழுதல. எங்கயாவது இத சொல்லணும் போல இருந்தது. தோணினத அப்படியே எழுதினேன்... Please bear with me ...