புழுதி  

Posted by Matangi Mawley


மணல் கோபுரங்கள். கற்களும், இரும்பும் இல்லாத போதிலும் அழியாநினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும் நினைவுக் கட்டிடங்கள். காலங்காலமாக, காற்றுக்கு இரையாகி, கொஞ்சம்கொஞ்சமாக அதனுடன் கலந்து- இல்லை மற்றும் சரகுகளுடன் இணைந்து; பூமி, ஆகாயம்; இவை இரண்டிற்கும் மத்தியில் சஞ்சரித்துக்கொண்டிருன்தது- புழுதி.

***

கதிரவனின் கிரணங்கள் பூமியை தகித்துக்கொண்டிருந்தது. உயிர்நீர், உடலினுல்லிளிருந்து, அக்கிரனங்களை காணும் பொருட்டு வெளிவரத் துவங்கும் நேரம். காற்றும் அப்போதுதான் அங்கிருந்த ஓரிரு இலைகளை அசைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

***

அந்த காற்றின் மென்மை, உயிர்நீரின் மீது மேவிய பொது, ஆழ்கடலின்ஆழத்திற்கே போய்வந்தார்போன்ற ஓர் உணர்வு. பஞ்சபூதங்களும் இணைந்த அந்த தருணம். மெதுவாக துவங்கிய அந்த காற்றின் ஆற்றல், வலுவடைந்து கொண்டது. திடீரென்று, எங்கிருந்தோ கிளம்பிவந்த அந்த புழுதி- என் கண்களில் நினைவுகளாக மாறிப் படர்ந்தது.

***

என் ஒவ்வொரு பாதத்துளியும் அப்புழுதியின் சீற்றத்தை அதிகரித்தது. கடந்துபோன காலத்தின் நிழல் உருவங்கள். என் கண்கள் அதைக் காண விரும்பாத போதிலும், கட்டாயமாக என் மூடிய கண்களை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

***

அப்புழுதியின் சீற்றத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல்- அந்த காற்றின் திசையைஎதிர்த்து, வருங்காலத்தை நோக்கி விரைந்தேன்...

***
புழுதி "யூத்புல் விகடனில்"- http://youthful.vikatan.com/youth/Nyouth/puzhuthi100510.asp