BUSHY - EPISODE 5  

Posted by Matangi Mawley

இதுக்கு இதே வேலையா போச்சு! எங்கயாவது போய், யார் கிட்டயாவது வாலாட்ட வேண்டியது. அவா குடுக்கற அடி, கடியெல்லாம் வாங்கிண்டு இங்க வந்து "மியாவ் ...." ங்க வேண்டியது! கழுத்து கிட்ட-லாம் ஏதோ கடி. முன்ன போல இல்ல, துப்பாண்டி. ஆகாரம் போறல. நாங்க குடுக்கரதையாவது திங்கணும். மேல் மாடியாத்து "Sunday Special" சாப்பாடு தான் வேணும்-னா நான் என்ன பண்ண முடியும்? நாள் முழுக்க அங்க நின்னுண்டு கத்தி என்ன ப்ரயோஜனம்? ஏதாவது தேரித்தா? திரும்பி வால தூக்கிண்டு இங்க தானே வந்த!

அதுவே இந்த Bushy -ய பாரு! எவ்வளோ சமத்து! "டா"ன்னு வந்து கேக்கறது.
கொடுக்கறத சாப்படறது. கடிகாரத்த முழுங்கினாப்ல நாலு-ன்னா நாலு, ஆறு-ன்னா ஆறு மணிக்கு வந்து கேக்கும். 4:10 கு வந்து அதட்டும். என் ப்ரமையோ என்னவோ- கடிகாரத்த வேற காட்டி-காட்டி அதட்டராப்ல தோணும்.

கொஞ்ச நாளா பத்தியம்
வேற. முறுக்கு- cup cake லாம் நப்பாச பிடிச்சு திங்கற பழக்கதெல்லாம் விட்டுடுத்து, Bushy! அதோட "புளியங்கொட்டை" cat food மட்டும் தான். வயறு வேற ஒரு தினுசா இருக்கு. முன்ன மாதிரி gate ல இடுக்குல நுழைஞ்சு வர முடியறதில்ல. வயறு இடிக்கறது. வெளீலேர்ந்து குரல் கொடுக்கும். Gate அ தொறந்து விடணும்.

இதுகிட்ட சொன்னா கேக்கறதா பாரு! அந்த "Pet Shop" கடைக்காரி என்ன
சொன்னா? "குட்டி போட்டா அளகா இருக்கும். 2 மாசத்துக்கு ஒரு தடவ குட்டி போட்டுகிட்டே இருக்கும்"னு சொன்னாளா இல்லையா? பூனை பண்ணையா போய்டும் நம்பாம். அத இப்போவே எங்கயாவது விட்டுட்டு வந்தா தேவல. ஆனா பாவம், சாப்ட ஏதாவது கிடைக்குமோ, கிடைக்காதோ! ஸ்பஷ்டமா "ங்கா..." ங்கும், என் முகத்த பாத்து!

அது வயறு, அத விட பெருசா இருக்கு! அத தூக்கிண்டு அத்தன படி ஏறி "ஜிங்கு-ஜிங்கு"ன்னு ஓடி வரும்! பயம்மா இருக்கும், எனக்கு. அன்னிக்கு ஒரு நாள், அந்த கொழுப்பெடுத்த நாய் ஒண்ணு- Bushy ய பாத்து "உர்..." னு உறுமறது. பாவம் Bushy! எங்காத்லேர்ந்து அடுத்தாத்து மதில்- அத்தன உயரத்துல தாவறது! கீழ-கீழ விழுந்து ஏதாவது ஆச்சுன்னா?! என்ன தைரியம்!

ஒரு சில சமய
த்துல, ரெண்டு நாய் படுத்துண்டுருக்கும். அதுகளுக்கு இடுக்குல பூந்து- இது வருது-ன்னு அந்த நாய்கள் கவனிக்கரதுக்குள்ள ஆத்துக்கு ஓடி வந்து "ங்கா.." ங்கும்! இந்த துப்பாண்டி- "வே...ஓ...ங்...வ்..." ன்னு ஒரு வித்யாசமா ஒரு குரல் கொடுக்கும். நம்ப பொய் நாய்கள விரட்டி விடணும். அதுகள் போயிடுத்தா-ன்னு 5 நிமிஷம் நின்னு பாத்துட்டு- அப்புறம் ஜம்முன்னு மினுக்கிண்டு வரும்!

ஈஷிக்கரதோட சரி! காரியத்துல ஒண்ணும் காணும். ஆனா B
ushy- "கொஞ்சரியா? கொஞ்சிக்கோ... தூக்கரியா? தூக்கிக்கோ... ஆனா எல்லாம் பண்ணினப்ரம்- ங்கா- கொடுத்துடு..." ன்னு காரியத்துல தான் இருக்கும், அது கண்ணு!

மே 1st . நானும் வெளீல போயிருந்தேன். இவரும், எங்கயோ "லோ-லோ". இது மட்டும் தான் இருந்துது, ஆத்துல. Bushy ஒரே பொலம்பல். இதுக்கு என்ன பண்ணறதுன்னே தெரியல. ஆச்சு குட்டி போட போறது போலருக்கு. கொஞ்ச நாளாவே இடம் பாத்துண்டுருந்துது. Shelf குள்ள பொய் உக்காந்துண்டு வெளீல வரவே மாட்டேங்கறது! அத எப்படியோ வெளீல துரத்தி விட்டாச்சு. ரொம்ப நேரம் ஆத்து வாசல்ல நின்னுண்டு கத்திண்டே இருந்துது. அப்புறம் போய்டுத்து. எனக்கு வேற ஒரே கவலை!

அடுத்த நாள்- பழைய படி ஆய்டுத்து, வயறு. "ங்கா"- ங்கறது! புடுங்கி எடுத்துடுத்து. அதோட வயிர நிரப்பி அனுப்பினா போய்டும்-னு ஆய்டுத்து. அது குட்டி போட்டுதா? இல்லையா? ஒண்ணும் புரியல.


கொஞ்ச நாளா- சாப்டு-சாப்டு வெளீல ஓடி போய்டறது! குட்டிய எங்கயோ பத்தரமா ஒளிச்சு வெச்சுருக்கு போலருக்கு. இவருக்கு ரொம்ப தேவை! Bushy ய தூக்கி வெச்சுண்டு கொஞ்சராராம்! "உன் குட்டியலாம் அழைஷுண்டுவாடா... பாக்கணும் னு ஆசையா இருக்கு..." ன்னு ஒரே கொஞ்சல்.

அன்னிக்கு சாயந்தரம். எப்படி வந்துது? எப்ப வந்துது? ஒண்ணும் தெரியல. ரெண்டு குட்டிய தூன்க்கிண்டு வந்து, ஒரு மர பலகைக்கு இடுக்குல போட்டுருக்கு. இது வேற ஒரே "தை-
தை"... "Photo எடுக்கறேன்.... Facebook ல போடறேன்..." ன்னு! "செத்த அமைதியா இரு"ன்னா கேக்கரதுகளா பாரு, ரெண்டும்! அது எத்தன கஷ்ட பட்டுதோ! இன்னும் கண்ணே சரியா தொறக்கல. நடக்க கூட தெரியல, அந்த குட்டிகளுக்கு! குரல் கூட எழும்பல! ஒண்ணு- துப்பாண்டி, Bushy-யாட்டமா கருப்பு-வெள்ள. ரொம்ப அழகா இருக்கு! பாட்டிய கொண்டுருக்கு... இன்னொண்ணு, அட்ட கரி! அது கண்ணு மட்டும் தான் தெரியறது! மீதி சமயத்துல அது இருக்கறதே தெரியல. அதுவும் அழகு தான்!

ரெண்டுத்தையும் கொண்டு வந்து இங்க போட என்ன அவஸ்த பட்டுதோ- Bushy! ஒவ்வொரு குட்டியா, ரெண்டு தடவ- மதில தாவணும், மாடில ஏறணும்! "ங்கா"... ன்னுது. தடவி கொடுத்தேன். அமைதியா செத்த நேரம் மூச்சு வாங்க படுத்துண்டுருந்துது. அதுவே குட்டியா இருக்கு! அதுக்கு ரெண்டு குட்டி! பாவம்... "ங்கா" தானே? தோ தரேன்...

PS:
குட்டிகள் விளையாடற video பாக்க-- click here.
குட்டிகளை சுவீகரிக்க இஷ்ட பட்டால்- பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...

நத்தை  

Posted by Matangi Mawley


என்னுடைய மூன்றாவது வயதில், பள்ளியின் ஏதோ ஒரு மூலையில் கும்பலோடு முட்டி மோதிக்கொண்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். அதுதான் நான் முதல் முறையாக நத்தை கண்டது. 'கொளுக்-கொளுக்' என்ற உடலுக்கு, ஒரு ஓடு நிழல் தர அது கடந்து வந்த பாதையை எத்தனை ஆண்டுகளாகக் கடந்து கொண்டிருந்ததோ- என்று பல நாள் யோசித்ததுண்டு. யோசிப்பதுண்டு...

இலையின் அடிப்புறத்தில் ஒட்டிக்கொண்டு, அந்த இலை அசையும் தருணங்களில் அதை விட்டு விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும், அந்த நத்தை. "இந்தச் சிறியதொரு உருவிற்கு இத்தனை வலுவா"? என்று எண்ணி வியந்ததுண்டு. எத்தனை வருடங்கள் ஆயினவோ, அந்த இலையின் மீதிருந்து கீழே இறங்கி வர! கீழே- உடைந்து கிடந்த நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள் அதன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

எத்தனை-எத்தனையோ கல்பங்கள் கடந்து வந்த புவியில், அற்ப காலத்தில் தோன்றிய மனிதன் மட்டும் எவ்வாறு வேறுபடுகிறான்? எதற்காக அவன் அவனையே இவ்வாறு உயர்த்திக் கொள்கிறான்? சொற்ப காலத்தைத் தவழ்ந்து வந்து, தற்காலத்தைப் பிடித்துக்கொண்டவன், அவன். பல்வேறு பிரளயங்களையும், அதன் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களையும் தனக்குச் சாதகமாகச் சித்தரித்துக்கொண்டு, பூமியில் தன்னைத் தானே பிரதானித்துக் கொண்டு திகழ்கிறான். அவனே உருவாக்கிக் கொண்ட, பல்வேறு விதமான ஆக்கங்களாலும், அழித்தல்களாலும்- அசைந்துகொண்டும் கசிந்துகொண்டும் இருக்கும் பூமியின் மேல் தன்னையும் ஒட்டவைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.

கடலின் ஆழத்திற்கும், மலைச் சிகரங்களுக்கும், நிலப்பரப்பின் எல்லைகளுக்கும் உரிமை சம்பாதித்துக் கொண்ட மனிதன், விண்வெளிக்கும் சென்றான். ப்ரபஞ்சத்தை விலை பேசினான். அவன் தக்கப் பிடித்துக் கொண்டிருக்கும் பூமியின் வறுமை பொறுக்காமல்- அதை உதறிவிட்டுச் சென்று, வேறொரு இடம் தேடி, ப்ரபஞ்சத்தில் மிதந்துகொண்டிருக்கிறான். மனிதனின் ஆறாம் அறிவின் ஆற்றலுக்கு முன்னால், ப்ரபஞ்சம் எம்மாத்திரம்?!- என்று இருமாந்திருக்கிறான்.

விண்ணிர்க்கப்பாலும், மண்ணிர்க்கடியிலும் வளர்ந்து நிற்கிறது- ஒரு சக்தி. கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தியின் நாடி எவ்விடத்தில் இருக்கிறது- என்பதை ஆராய எண்ணியிருக்கிறது- மனிதனின் ஆறாம் அறிவு.

நத்தையின் வேகம்- அதனை உற்று நோக்கிக்கொண்டிருப்பவர்களை பொறுமை இழக்கச் செய்துவிடும். அதற்க்கு உதவி செய்யும் பொருட்டு- அதை ஒரு இலையின் மீது வைத்து, சற்று தொலைவில் விட்டு விடுவதற்குத் தூண்டிவிடும், அந்த நத்தையின் வேகம். ஆனால் அப்படிக் கொண்டு விடப்பட்ட நத்தை, உண்மையில் எங்கே செல்ல எத்தனித்திருந்தது? - என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்? அந்த நத்தையின் விருப்பம் இல்லாமல் அதைக் கொண்டு சேர்பித்த இடம்- அந்த நத்தைக்கு உவந்ததா? அதனால் அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் இயங்க இயலுமா? அதற்க்கு அந்த இடம் பழக்கப் பட்டு விடுமா? - என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

விண்ணிற்கும், மண்ணிற்கும், அதற்கப்பாலும்- உயர்ந்து நின்றிருக்கும் அந்த சக்தியும்- கிட்டத் தட்ட அப்படித்தான் எண்ணியிருக்க வேண்டும். எனவேதான்- நாடித் துடிப்பின் சப்தம் மட்டும் கேட்டிருக்கும் மனிதனால், அந்த நாடியின் நாதம் குடிகொண்டிருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. அப்படி அந்த இடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டால், புறியாத கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போல- மனிதன் திணறிப் போகக் கூடும். சரியான கேள்விகளையே கேட்டிராத மனிதனுக்கு- விடையைக் காண்பித்து, பூமிக்கு ஏற்பட்ட நிலையை தானும் அடைய வேண்டாம், என்றுதான் நினைத்துக் கொண்டதோ, அந்த சக்தி.

கேள்விகளைத் தேடிக்கொண்டிருக்கும் மனிதனுக்குக் கிட்டியதேன்னவோ- ப்ரபஞ்சத்தின் ஒரு துளி கண்டத்தில் அவன் அடைந்த ப்ரமிப்பு ஒன்றே தான்! அந்த ப்ரமிப்பின் தாக்கத்தினால்- அங்கேயே மிதந்துகொண்டிருக்கிறான்.

நத்தை ஓடுகளுக்கு மத்தியில், மீண்டும் இரண்டு நத்தைகள்- அதன் பயணத்தைத் தொடர்ந்தன...

Baby மா...  

Posted by Matangi Mawley


ஒரு தடவ என்னாச்சு, எங்க அப்பா ஒரு white paint டப்பா வாங்கிண்டு வந்தா. Daily daily கோலம் போட வேண்டாம் வாசல்ல, அந்த paint ஆல permanent ஆ போட்டுடலாம்- அப்டீங்கற idea. First of all, என் அம்மா-கு கோலம் லாம் போட தெரியாது. ஒரு star இல்ல- ஒரு star சுத்தி வட்டம். இவ்வளவு தான் என் அம்மா-கு தெரிஞ்ச கோலம். Paint -லாம் நமக்கு தான் கொஞ்சம் நன்னா வரும்-ங்கறது நால என்ன நன்னா motivate பண்ணி வெச்சிருந்தா வாசல்ல வரைய...

நான் college லேர்ந்து வந்து பாத்தா- LKG கொழந்தைள்லாம் sketch பேனா வால கிருக்குமே- அந்த மாதிரி யாரோ வாசல்-ல Paint -ஆல கிறுக்கி வெச்சிருக்கா! நான் கூட எங்க என் cousin கும்பல்-தான் ஏதாவது பட எடுத்துண்டு வந்துருக்கோ-ன்னு நினைச்சேன்.

"டேய்... sorry டா! Paint டப்பா வ பாத்தா ஆசையா இருந்துது. பாத்தேன். போ! இதென்ன பெரிய வேல-ன்னு நானே போட்டுட்டேன்..." ன்னா என் அம்மா!

எதித்தாத்து aunty அப்போ தான் ஆத்துக்குள்ள நுழையறா. "என்னங்க இது! மாதங்கி பண்ணின வேலையா..." ? ன்னு எங்க அம்மா கிட்ட சிரிச்சுண்டே கேக்கறா...

என்ன போல ஒரு பொண்ண, எங்க அம்மாவால மட்டுமே வளர்த்திருக்க முடியும். என்னதான்- எவ்வளவு தான் திட்டினாலும்- அந்த திட்டு நால தான் என் blog இத்தன காலமா ஓடிண்டு இடுக்கு!

அதுக்காக அம்மா, Happy Mothers' Day ....!