மைத்துளிகள் ...  

Posted by Matangi Mawley


அன்றோர் தினம், அலுவலகத்தின் ஓர் மூலையில், வேலை ஏதுமில்லாமலும், ஆனால் வெளியேவும் செல்ல முடியாத ஓர் அவதி நிலையில், திடீரென்று தோன்றிய சிந்தனையே இந்த "மைத்துளிகளுக்குக்" காரணம்.

ஏழுத்து, கருத்து- எல்லாவற்றிலும் பிழைகள் இருக்கக்கூடும். அதில் மறுப்பு ஏதும் இல்லை. பிழைகளை திருத்திக்கொள்ளலாம். ஆனால் கருத்துக்களுக்கு இது பொருந்தாது! இது ஓர் எச்சரிக்கை மட்டுமே!

"எங்கே தமிழ்?" என்ற தர்கத்தில் எனக்கு எந்தவித ஈடுபாடும் கிடையாது. "தமிழ் என் மூச்சு/பேச்சு" என்ற கோஷங்களும் என்னைச் சாராது. தமிழை வாழ வைப்பதற்கான முயற்சி என்றும் இதைச் சொல்ல இயலாது! தமிழை வாழவைப்பதில் எனக்கு எந்தவித ஆர்வமும் கிடையாது! நாகரீகம் என்ற பெயரில், நுணி நாக்கில் தமிழ் பேசும் கும்பலை எதிர்க்கவும் எனக்கு பொறுமை கிடையாது! "தமிழ் தெரியாது" என்று தமிழர்களே கூறும் கூற்றை பார்ப்பதால் எனக்கு எந்த விதமான உணர்ச்சிப் பெருருக்கும் ஏற்படுவது இல்லை!

பிறகு ஏன் இந்த எழுத்து? இதைப் படிக்க ஒரு கூட்டம் கூட்டுவது எதற்கு?

இது ஒரு முயற்சி மட்டுமே!

நான் ஒரு உயிர். இந்த பிரபஞ்சந்த்தின் பல்லாயிரக்கணக்கான உயிர்த்துளிகளில் எனக்கும் ஒரு இடம் உண்டு. இங்கு வீசும் காற்றிலும், பொழியும் மேகத்துளிகளிலும்- அனர்கதிர்களிலும், பறந்து விரிந்த பூமியிலும் எனக்கும் பங்கு உண்டு. இங்கே மிதக்கும் அனைத்து ஜீவராசிகளின் சிந்தனைச் சொட்டுகளின் மத்தியில் என் சிந்தனைகளுக்கும் பரவ ஒரு வழி உண்டு.

இது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...