26/11- மற்றும் ஒரு கணக்கு...  

Posted by Matangi Mawley




இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினம் ஒரு குடும்பம் தன் தலைவனை இழுந்தது. அந்தத் தலைவன்- ஒரு கணவன், ஒரு தந்தை, ஒரு தமையன்- ஒரு மாமன்... இன்னும் அவன் என்னவெல்லாமோ இருந்திருக்கக் கூடும். ஆனால் அப்படி நடக்க அவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதை விதி என்கிறார்கள், ஒரு சிலர். ஜென்ம பயன் என்கிறார்கள்- இன்னும் சிலர். காலம்- என்கிறார்கள் மற்றும் சிலர். என்னைப் பொறுத்த வரையில்- அன்று அந்த இடத்தில்- வேறு ஏதோ ஒன்று செயல் பட்டுக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் மீரியதொன்று. அதை என்னவென்று என்னால் இன்று வரையிலும் விவரிக்க முடிந்ததில்லை. அது- என்னை ஓர் பாடத்தை உணரச் செய்தது. "பயங்கரவாதம்" எனப்படுவது ஒன்று- மேடைப் பேச்சு வீரர்களின் கோர்வை மொழியின் ஒரு அங்கம் இல்லை, என்று. குட்டிச் சுவற்றின் மீது வெட்டிப் பேச்சும், உலகின் மீது போலிக் கோவம் கொண்டு சினிமா பட ஹீரோக்கள் போன்று ஆகத் துடிக்கும் இளைகனின் மனக் கோட்டையின் ஒரு செங்கல்லும் இல்லை- இந்த "பயங்கரவாதம்". இது- ஒரு உணர்வு. இதைப் பற்றி பெசுவதினாலோ, அல்லது இதைப் பற்றிப் படிப்பதினாலோ உணர்ந்து விட முடியாத ஒரு உணர்வு. அதை எப்போது நாம் உணருகிறோம்- என்று ஒரு கேள்வி உதிக்கிறதோ? உணர்ந்தேன். 200 , 300 என்று தொலைக்காட்சிப் பெட்டியில் சடலங்களை கூறு போட்டுக் கொண்டு எண்ணிக் கொண்டிருந்த பொது- அந்த கணக்குகள் வெறும் கணக்கல்ல- நான் அதில் யாரோ ஒருவரை நான் வாழ்ந்த காலத்தில் அறிந்திருக்கிறேன் என்று எந்த நொடியில் உணர்ந்தேனோ- அந்த நொடியில் உணர்ந்தேன். உலகெங்கும் பரவியிருக்கும் ஒன்றை அந்நாள் வரையிலும் நான் ஒரு வாக்கியமாகவே எண்ணியிருந்தேன். அதன் உணர்ச்சியை- அது என் வீட்டு கதவை இடித்த போது தான் உணர்ந்தேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக- அவ்வபோது செய்திகள் இல்லாத நேரங்களிலோ- அல்லது யாரோ சில பிரபலங்கள் அதைப் பற்றி பேட்டி கொடுத்திருந்தபோதோ- தொலைக்காட்சிப் பெட்டியில் என்னையும் மீறி என் மனம் லயித்தது. ஏன்? எதற்கு நானே என் அறிவை கொறை பட்டுக் கொள்கிறேன்? இரண்டு ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரச்சனைகள் தீரும் என்று எப்படி என்னால் எண்ண முடிந்தது? ஆனால்- இப்படிப்பட்ட கேள்விகளை சிறிது நேரம் மறக்கத் தோன்றியது. மறுப்பு, வாக்கு, என்பது போன்ற- கேட்டுக் கேட்டு அலுத்துப் போன அதே சொற்கள். இது இல்லை என்றால்- பிடிபட்ட குற்றம் சாட்டப் பட்டிருக்கும் அந்த ஒரே நபருக்கு பழைய சினிமா பாடல்களைப் பாடப் பிடிக்குமாம்! ஒள்ளூர என் அறிவின் வெற்றியை என் புத்தி பாடி மகிழ்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் என் மனத்தின் பங்கு இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரிந்தவர்களின் ஜீவன் மெழுகுச்ச் சுடர்களை தீயிட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி வைத்துக் கொள்வோமே. இன்னும் 20 வருடங்கள் கழிந்து- என்றோ ஒரு நாள்- "நீதி" என்பதற்கு சற்று அருகாமையில் வசிக்கும் ஏதோ ஒரு வார்த்தையின் அர்த்தம்- இந்த "பயங்கரவாதப்" பிரச்சனைக்கு தண்டனையாக அளிக்கப் படுகிறது என்று வைத்துக் கொள்வோமே! ஆனால் அன்றைய தினம்- அந்த "நீதி"யை கேட்டு ஆனந்தம் கொள்ளும் ஜீவன்களின் எண்ணிக்கை குறைந்து போயிருக்கும். அன்றைய தினம்- இன்று நான் உணருகின்ற அந்த 200 , 300 என்ற கணக்குகள்- மீண்டும் ஒரு முறை- உணர்வில்லா கணக்குகளாக இதிஹாச புத்தகங்களின் பக்கங்களில் பதிந்து போயிருக்கும். ஜாலியன்வால பாக் மற்றும் ஹீரோஷீமா/நாகாசாகி போன்ற ஒரு இதிஹாச நடப்பு. அதைப் படிக்கின்ற வருங்கால குழந்தைகளுக்கு- அந்த கணிதங்கள்- வெறும் பதில்கள்- வினாத்தாளில் கேட்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள். அவை உணர்ச்சி அல்ல. வெறும் கணக்கு...

இது தானா நடக்கும்? உயிர் - உயிராக மதிப்பிடப்பட வேண்டும். கணக்காக அல்ல. அந்த நாள் வந்துத் தான் ஆக வேண்டும். அதை எதிர் பார்த்துக்கொண்டிருப்பேன்...


பி. கு.: எனக்குத் தெரிந்த அந்த ஒருவர் (mum's younger brother).

ப்ளாஸ்த்ரி  

Posted by Matangi Mawley


எனக்கெல்லாம் ஒரு ஒடம்புன்னு படுத்துக்கறதே பிடிக்காது! இதுக்கு எங்கேர்ந்து தான் வருதோ இந்த புத்தி! எல்லாம் அவராத்து வகயராகள்லேர்ந்து தான் வந்துருக்கும்னு நெனைக்கறேன். எங்க பாத்தாலும் ஒரே "வீரத் தழும்புகள்". "எப்டி அடி பட்டுது"? ன்னா தெரியாது! எங்கப் பாத்தாலும் ஒரு ப்ளாஸ்த்ரி ஒண்ண ஒட்டிண்டு school கு போணும். யாராது என்ன ஆச்சுன்னு கேக்கணும். அத சொல்றதுல இதுக்கொரு பெரும!

இதுகூட ஒரு கொழந்த படிச்சுது. அது பேரு மறந்து போச்சு! இது, அத விட எதோ 2 mark அதிகமா வாங்கிடுத்தாம். அதனால அந்த பொண்ணுக்கு இது ஒரு 'Leader'. இத யாராது "நாதான் Leader" ன்னுட்டா போரும். எதோ பெரிய கிரீடம் வெச்சா மாதிரி தான். அது எதோ ஒரு நா Homework எழுதலயாம். இது ஏன் எழுதலன்னுத்தாம். அந்த பொண்ணு ஒடனே- "இத பாஆஆஆஆஆ ரூஊஊஊஊ" ன்னு எதோ தங்கச்சி sentiment dialogue பேசர Hero மாதிரி பேசிருக்கு, அது. இது ஒடனே "ஐயோ பாவம்"னு மன்னிச்சுடுத்தாம். "என்ன ஒரு நல்ல மனசு, எம்பொண்ணுக்கு"ன்னு நெனச்சிண்டிருந்தேன். ஆனா இப்போ தானே தெரியறது- இதெல்லாம் எங்கேர்ந்து வந்துதுன்னு!

இது என்ன ஒரு 2nd std. படிக்கும். யாரோ "தலவலி" ன்னு சொல்லி கேட்டுருக்கு. கெட்டியா புடிச்சுண்டுடுத்து அந்த வார்த்தைய! "Homework பண்ணுடா"ன்னா- "போ மா... ஒரே தலவலி" ங்க வேண்டியது! 2nd std. கும் தலைவலிக்கும் என்ன சம்பந்தம்னு இன்னி வரைக்கும் புறியல!

யாருக்காது அடி பட்டு ஒரு Band Aid மாட்டிண்டு வந்துட கூடாது! "எனக்கும் இப்போவே Band Aid போட்டுவிடு" ன்னு அழுது தீக்கும், அத மாட்டி விடற வரைக்கும்! இவருக்கு fever வந்து பத்து போட்டு விட்டாலும் சரி. "நானும் போட்டுப்பேன்" ன்னு ஒரே அடம். ஐவரும் அதுக்கு நெத்தில, கன்னத்துல, மூக்கு மேல ன்னு கொஞ்சம் ஈஷி விடுவார். ஒடனே கண்ணாடில வேற பாத்துக்கும் தன்ன தானே! அதுல எதோ ஒரு அல்ப சந்தோஷம் இதுக்கு!

அதுலயும் நெஜமாவே fever வந்துடப்டாது! அவ்வளவுதான்! ரெண்டு நாள்ஜம்முன்னு மட்டம் போடும் school-கு. அதுக்கப்றம் இருப்பே கொள்ளாது ஆத்துல! மூணாவது நாள்- எப்படா school- கு போய் எல்லார் முன்னாடியும் colour-colour- மாத்தர சாப்படலாம்னு உக்காண்டுருக்கும்!

இது class யாருக்கோ "Madras Eye" வந்துடுத்து. அந்த கொழந்த "cooling glass" போட்டுண்டு வந்துருக்கு, class- கு! நானும் "cooling glass" போட்டுப்பேன்-ன்னு ஒத்த கால்- நின்னு கொஞ்ச நேரம் போட்டுண்டு லாத்தித்து!

"வரேன்...வரேன்... என்ன அம்மா-க்கு"? ன்னு கேட்டுண்டே நொழஞ்சேன்- இது எதோ கூப்படரதேன்னு. "அப்பா-க்கு ஓம்பு செப்படல"-ன்னுது! ரெண்டு கஞ்சிக்கு கொதிக்க வெக்கணும்...

தீபாவளி வந்தாச்சு!  

Posted by Matangi Mawley

ரொம்ப சின்ன வயசில லாம் வெடி வேணும் னு அப்பா கிட்ட அடம் பிடிப்பேன்! ஒரு மத்தாப்பூ Packet வாங்கிண்டு வந்து கைல கொடுத்துட்டு ஏதோ வெடி கடையே வெச்சி கொடுத்தாப்ல சந்தோஷப் படுவார் என் அப்பா! ('கத்தையா கொடுப்பருன்னு பாத்தா ஒத்தையா கொடுக்கறாரு' ன்னு நெனச்சதுண்டு!) இப்பவும் அப்படித்தான்!

எவ்வளோவோ memories இப்படி.. ஒவ்வொரு தீபாவளியும் குடும்பத்துடன் கொண்டாடரெச்ச நமக்கு கெடைக்கறது!
புது நினைவுகள் கொடுக்கும் நாள் வந்தாச்சு! எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....


அடுத்த பதிவோட உங்கள எல்லாம் விரைவில் சந்திக்கற வரைக்கும்....


பி.கு: கிறுக்கல்கள்- MS-Paint- இல்...