மி மராத்தி - Degree காபி 2  

Posted by Matangi Mawley


கொஞ்ச காலமாவே- நான் நிறையா மராத்தி பாட்டுகள் கேட்டுக்கொண்டு இருக்கேன். நம்ம ஊர்ல இப்போ almost நிறையா பேருக்கு அருணா சாய்ராம் புண்யத்துல நிறையாவே மராத்தி பாட்டுகள் பரிச்சயம் ஆகிக்கொண்டுருக்கு, அபங்கம் மூலமா. But நான் இங்க சொல்லறது cinema பாட்டுகள பத்தி. எனக்கு மராத்தி எல்லாம் தெரியாது. எதோ subtitles புண்ணியத்துலயும், பாஷ தெரிஞ்ச சில friends மூலமாகவும்- lyrics கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன். ஒரு சில lyrics லாம் கேக்கும் போது பாரதியார் சொன்னது- 'சிங்க மராத்தியர் தம் கவிதை ...' தான் நினைவிற்கு வருது. அத்தன அழகா இருக்கு. ஆனா- அது நல்லதா கேட்டதா தெரியல, எனக்கு என்னிக்குமே Music தான் முதல் favourite. ஒரு சில சமயங்கள்-ல 'lyrics' புரியலேன்னாலும்- பல பாஷைகளோட பாட்டோட இசை-ய நம்ம அந்த இசையினோட ஈர்ப்பினால தான் ரசிக்கறோம். என்ன இருந்தாலும்- அந்த இசை தான் நம்ம அந்த lyrics நோக்கியும் இழுத்து செல்லும் ஒன்று ங்கறது என் கருத்து.

நான் school ல படிச்ச காலத்துல, radio ல ராத்திரி-ல ஒரு programme போடுவான். அது பேரு மறந்து போச்சு. But அது ரொம்பவே நல்ல concept. Doordharshan ல Sunday அன்னிக்கு மத்த பாஷ ல award வாங்கற படங்கள் போடறாப்ல இது radio ல ஒரு programme. இந்தியா ல இருக்கற பல மாநினங்களிலேர்ந்து வந்த நல்ல நல்ல பாட்டெல்லாம் போடுவான். நாங்க தமிழ் பாட்டு போடறானா-ன்னு பாக்க அந்த programme regular ஆ கேப்போம். அப்படி கேட்ட ஒரு பாட்டு- பாட்டோ, அந்த வார்த்தைகளோ, ஏன்- அது என்ன பாஷன்னு கூட நினைவில்ல. ஆனா ரொம்ப நாள் அந்த இசை மட்டும் மனசில இருந்தது. ஒரு சில சமயம் தோணும்- Google ஆண்டவர் கிட்ட நம்ம hum பண்ணி, அந்த tune கு matching பாட்ட அவர் தேடி தர கூடாதோ-ன்னு! ரொம்ப வருஷம் கழிச்சு, ஒரு reality show ல யாரோ அந்த பாட்ட பாடினா. அப்போ தான் அது மராத்தி பாட்டு ன்னு தெரியும். அப்படியும் வெறும் த்வனி தான் காதில் விழுந்ததே தவிர- lyrics ஒண்ணுமே புரியல. இன்னும் நிறையா வருஷம் கழிச்சு, You Tube புண்ணியத்துல, எதோ தேட போக- இந்த பாட்டு வந்து நின்னுது! ஒரே குஷி!

இவ்வளோ build-up குடுத்த அந்த பாட்டு- ஒரு Kholi song. அதாவது நம்ம 'செம்மீன்' மலையாள படத்துல 'கடலினக்கர போனோரே' பாட்ட போல ஒரு மீனவ பாட்டு. இது ரொம்பவே பழைய பாட்டு. ஆனா ரொம்ப famous கூட. நீங்களும் இத எப்பவாவது கேட்டிருக்க வாய்ப்புண்டு. Hridaynath Mangeshkar music ல லதா வும் ஹேமந்த் குமாரும் பாடின பாட்டு. இதெல்லாம் நான் சமீப காலத்துல கண்டு பிடிச்சது தான். இத்தன வருஷமா என்ன haunt பண்ணின அந்த tune 'Mi Dolkar' (click here).

தேடல்கள் மூலமா நான் கண்டு பிடிச்ச இன்னொரு பாட்டு- 'Gaarva' ன்னு ஒரு Album song. இத Milind Ingle பாடிருக்கார். அத்தன ஒரு மெதுவான, இனிமையான tune. இதே போல இல்ல. ஆனா- இந்த மாதிரி ஒரு சாயல்-ல ஒரு அழகான மலையாள பாட்டு கூட உண்டு. அது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு- 'பீலி ஏழும் வீசி வா...' ன்னு 'பூவினு புதிய பூந்தென்னல்' ங்கற மலையாள சினிமா பாட்டு. அத நாலையோ
என்னவோ- இந்த மராத்தி பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு! 'Gaarva' பாட்டு கேக்க- click here...

இத போல எத்தனையோ பாட்டுகள். மராத்தி பாடல்கள்-ல ரொம்பவே interesting aspect - லாவணி.

அந்த காலத்திலேர்ந்து ஆரம்பிச்சு- இப்போ வரைக்கும், இந்த லாவணி ங்கறது மராத்தி பாடல்-களோட ஒரு தனி எடத்த பிடிச்சிருக்கு. நம்ம 'ஹே ராம்' படத்துல கூட ஒரு லாவணி பாட்டு வரும். ஒரு பழைய- ஆனா ரொம்பவே பிரபலமான லாவணி பாட்டு Jeyashree Gadkar பாடினது கேக்க click here. இந்த பாட்டு எனக்கு ஒரு music forum மூலமா தெரிய வந்தது. Recent -ஆ, 'Zee Talkies' banner ல மராத்தி ல ''Natrang" நு ஒரு படம் வந்தது. அதுல் குல்கர்னி நடிச்ச அந்த படத்த- நான் recent ஆ பாத்தேன். ரொம்பவே சோகமான படம். அதனாலேயே அது ஒரு நல்ல படம். அந்த cinema ல வர பாட்டெல்லாம் ரொம்பவே அற்புதமா இருக்கு. ஒரு ரெண்டு லாவணி பாட்டு, அதுல. Lyrics, இசை- எல்லாமே A1!

Bela Shinde பாடின 'Apsara aali' ங்கற இந்த பாட்டு (click here) 'மாயா மாளவ கௌள' ராகத்தில இருக்கு. இப்படியும் இந்த ராகத்த பயன் படுத்த முடியும்-நு நினைக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது! இந்த பாட்டுல ஒரு அற்புதமான 'passion'. 'passion' கொஞ்சம் strong ஆன வார்த்த. 'Suggestive' இல்ல 'provocative' நு சொல்லலாமோ என்னவோ. simple ஆ சொல்லலும்-னா ரொம்ப அழகான பாட்டு. அந்த லாவணி dancer அ வருணிக்கறது போல எழுதப்பட்டிருக்கு. புரியணும்-னு கூட இல்ல. கூர்மையா கவனிச்சாலே அழகா புரியும் போல எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். ஆனா fortunately subtitles இருக்கற video வே இங்க இருக்கு.

அதே படத்துல வரும் இன்னும் ஒரு பாட்டு இது. 'jau dya na ghari' (click here) ங்கற இந்த பாட்டையும் Bela Shinde தான் பாடிருக்காங்க! போன பாட்டுல இருக்கும் 'sensuousness' இந்த பாட்டுல வேற ஒரு உருவம் எடுக்கறது. கேக்க இன்னும் 'captivating' ஆகவும் enjoyable ஆகவும் இருக்கு!

'Mi Radhika mi premika' (click here) ங்கற இந்த பாட்டு பாடினது- Aarti Ankalikar- Tikekar. இது 'maalkauns' ஆ 'basant mukhari' யா ன்னு எனக்கு சரியா தெரியல. அத்தன அழகான பாட்டு. கேட்டாலே 'Radha - Krishna' saga வ மையமா கொண்ட பாட்டு-ன்னு தெரியும். வார்த்தைல என்ன இருக்கு? எனக்கு இந்த பாட்ட கேட்டா 'எல்லா கோபிகா கூடவும் ஒரு கிருஷ்ணன் dance பண்ணுவானே'- அந்த scene mind ல வரும். சோகத்துலையும் சுகம் தேடும் tune. சோகம், சுகம், பிரேமை, பிரிவு, தடை போடப்பட்ட ஆசைகள்-னு எல்லா விதமான emotions கும் இந்த ராகமும், இந்த பாடலும் ஒரு 'திறக்கப்பட்ட கதவு' போல தோணும், இந்த பாட்ட கேக்கும் போது, எனக்கு! இதுவே கூட 'பக்தி' ன்னு சொல்லலாமோ என்னவோ!

இத போல எத்தனையோ மொழிகள்-ல எத்தனையோ பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் நம்மள ஒரு வேறு விதமான உலகிற்கும், கலாசாரத்துக்கும் அழைத்துச் செல்லுகிறது! அந்த அடுத்த கட்டத்துக்கு போக முதல் அடி ஒண்ணு தான் நாம எடுக்கணும். தேடல்கள் தொடர்கின்றன...

நடுநிசி நாய்கள்  

Posted by Matangi Mawley


- 'இது Movie Review கிடையாது"

ஒரு season ல என்னோட book shelf முழுசா crime stories ஆ இருக்கும். அங்கேர்ந்து கொஞ்சம் உயர்ந்து thriller movies கு என்னோட progression ஏற்பட்டது. தமிழ்-ல நான் முதல் முதலா பார்த்த thriller 'பொம்மை' ன்னு ஒரு S. Balachander படம். ஆனா அந்த cinema எனக்கு அவ்வளவா நினைவு இல்ல. எதோ ஒரு பொம்மை உள்ள bomb இருக்கும். அதுக்கப்றம் அந்த cinema நான் பாக்கவும் இல்ல. அதுக்கப்றம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு thriller movie, அதே director எடுத்த 'அந்த நாள்'. பாட்டு எல்லாம் இல்லாம, characters ஓட psychological aspect அ ரொம்பவே subtle ஆ 1954 ல எடுத்தது- நிஜமாகவே ஒரு ரொம்ப பெரிய விஷயம். அதுக்கப்றம் எவ்வளவோ books, movies ... இந்த 'Unsolved True Crime Stories' ல வர கதையெல்லாம் படிச்சு அவ்வளோ ரசிச்சிருக்கேன்.

'Detective' னு ஒரு Arthur Heily யோட novel. அந்த book ல தான் முதல் முதலா Serial Killers பத்தி படிச்சேன். எந்த field பத்தி தெரிஞ்சுக்கணும்-நாலும் அத பத்தின Arthur Heily book படிச்சா போரும்-னு என் அப்பா மட்டுமில்ல, நிறையா பேர் சொல்லி கேள்வி பட்டிருந்தேன். ஒரு Crime investigation, serial killing ல இருக்கற pattern பத்தி- என்னவெல்லாம் ஒருத்தருக்கு தெரியனுமோ- அத்தனையும் அந்த book படிச்சா ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அதுக்கப்றம்- Alfred Hitchcock. எப்படி mafia movies எல்லாத்துக்கும் 'Godfather' தான் inspiration ஓ, அதே போல thriller எல்லாத்தக்கும் இவரோட movies.

Gautham Menon ஓட 'நடுநிசி நாய்கள்' cinema இன்னிக்கு பாக்கும் பொது எனக்கு தோணினது- Hitchcock ஓட 'Psycho' movie ய ரொம்பவே சுமாரா - சுமார் கூட இல்ல, ரொம்பவே மட்டமா தமிழ் ல எடுத்த ஒரு படம் னு தான் நினைக்க தோணித்து. Menon 'Psycho' வ மட்டும் அவரோட inspiration ஆ எடுத்திருந்தா கூட பரவாயில்ல. 'Psycho' மற்றும் 'சிகப்பு ரோஜாக்கள்'- ரெண்டையும் சேத்ததுதான் இங்க பிரச்சனையே. 'Psycho' எப்படி ஒரு phenomenon ஓ, அதே போல 'சிகப்பு ரோஜாக்கள்' உம் ஒரு phenomenon. 'சிகப்பு ரோஜாக்கள்' ஒரு அருமையாக எழுதப்பட்ட/execute செய்யப்பட்ட ஒரு படைப்பு. Crime Thrillers ல interest இருக்கற எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பெயர்- 'Ted Bundy'. Ted Bundy யோட 'charm', அவனோட trial போது கூட அத்தன பெண்களோட கவனத்த அவன் தரப்பு ஈர்த்தது. இது history. America வோட one of the most notorious serial killers ல இவனுக்கு தான் முதல் இடம். அவன் எத்தன பேரை கொன்னான் ங்கறது இப்போ வரைக்கும் ஒரு mystery தான். Serial killers கு இருக்கற ஒரு main advantage- அந்த element of surprise தான். Unassuming ஆன- unexpected nature வெளிப்படுத்துதல். Ted Bundy பத்தி நீங்க தயவு செஞ்சு internet ல படிக்கவும். அப்ப தெரியும், கமல் ஹாசன், 'சிகப்பு ரோஜாக்கள்' ல அந்த role அ எவ்வளவு நல்லா பண்ணிருக்கார்-னு!

'Gautham Menon' ங்கற brand name பாத்துட்டு அந்த cinema கு போனது என் தப்பு-தான். ஆனாலும், எனக்கு மத்தவங்க 'reviews' கேட்டுட்டு cinema பாக்கறது பிடிக்காது. "Mobile வாங்க மட்டும் அத்தன review படிக்கற"! ன்னாங்க என் அம்மா. உண்மை தான். யோசிக்க வேண்டிய விஷயம். Realism கடைபிக்கவேண்டிய தருணங்களில்- psychological transition ரொம்பவே 'smooth' ஆ இருக்கணும். சரி. இது ஒரு 'commercial movie' ன்னு ஒப்புக்கொள்வதாக இருந்தால்- அந்த transition ல இருக்கும் drama, effective ஆக இருந்திருக்க வேண்டும். 'அந்நியன்' ல இருந்தது போல. ஆனா- இந்த cinema வில வரும் அந்த 'transitions' எனக்கு சிரிப்பு தான் வந்தது. Screen குள்ள குதிச்சு போய் ஒரு 'Vicks Inhaler' வாங்கி கொடுக்கலாமோ-ன்னு நினைக்க வெச்சது.

ஒரு அவலத்தை 'romanticize' பண்ணுவதின் பெயர் 'art' கிடையாது.

படத்தில், anti-hero, தான் கொலை செய்த பின் அந்த சடலங்களை 'acid' இல் கரைக்கிறார். இப்படி ஒரு சம்பவம் நினைவில் வருகிறதா? Nithari killings இல் சடலங்களை மறைக்க பயன்படுத்தப்பட்ட முறை இது. அவரது வாழ்க்கையில் ஒரு 'mother- figure' ஆக இருக்கும் பெண்ணின் உடல் நெருப்பில் வெந்து போகிறது. அப்படி வெந்து போன அந்த பெண்ணை அந்த 'anti-hero' வின் கண்களால் நாம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் காண்கிறோம். அதை பார்க்கும் போது- கும்பகோணத்தில் school குழந்தைகளுக்கு நடந்த ஒரு சம்பவத்தின் நிழல் உருவங்கள் மனதில் புழுக்கத்தை அதிகரித்தது. கோரத்தின் கொடூரங்களில் ஈர்ப்பு கண்ட இயக்குனரின் வக்கிரமான பார்வைகளை, அவரது நடிகர்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்த கோரங்களை மறக்க முடியாமல்- அதை நினைத்து-நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்தும் என்னைப் போன்றவர்களுக்கு இவரது இந்த வெளிப்பாடு அருவருப்பை தான் அளித்தது. அந்த காட்சிகளின் மீது அல்ல. அவரது எண்ணங்களின் மீது...

ரெண்டு மணி நேரம் theater ல உக்கார முடிஞ்சதுக்கு - Intermission விட்டப்போ 'டேய்- interval விட்டான் டா. இவன் நல்லவன் டா'-ன்னு கத்தின அந்த முகம் தெரியாத பையனுக்கு தான் நன்றி சொல்லணும்!

சதுரங்கம்  

Posted by Matangi Mawley


கறைகளும் அந்தச் சுவருகளில் ஒரு சித்திரம் தான் போலும். பழுதடைந்துவிட்ட அந்த கட்டடத்தை புதுப்பித்தால், அந்தக் கட்டிடத்தின் அழகு குறைந்து விடும். சுண்ணாம்பு உடைந்து கீழே விழுந்து கொண்டிருந்தது, அந்தச் சுவருகளிலிருந்து. என்ன ஒரு அழகான ஓவியம், அது! இரண்டு பேர் தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரவிற்கு கிடைத்த ஒரே ஒளி, அவர்கள் இருவரில் ஒருவர் அருகில் இருந்த ஒரு தூங்கா விளக்கு. அந்த விளக்கின் ஒளி- அவர்களின் நிழலை தீட்டிக்கொண்டிருந்தது. அங்கு இன்னும் ஒரு ஓவியம் உண்டு. பள்ளிக்கு, ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் சிறுவர்கள். அந்த ரிக்ஷாவை இழுத்துச் சென்றுகொண்டிருப்பவன்- அவனும் ஒரு சிறுவன்தான். ரிஷாவில் அமர்ந்திருப்பவர்களின் வயது தான் அவனுக்கும்.


இந்த ஓவியங்களைப் பற்றி அப்போது எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் ஓவிய "வீட்டுப் பாடத்தை" வரைவதில் மூழ்கி இருப்பேன். ஓவிய வகுப்பின் மிகவும் கடினமான பகுதி- மனதில் இருப்பதை வரைவது. நான் முயற்சிக்காமல் இல்லை. ஆனாலும், என் ஓவியத்தை பார்பவர்கள் என்னை அழைத்து- "பேய், பிசாசு சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது", என்று அறிவுரை கூறுவார்கள்.

பெற்றோர்கள், பொதுவாகவே அவர்களது குழந்தை- போன ஜென்மத்தில் ஒரு
பாடகியாக, ஓவியனாக, ஒரு விஞ்ஞானியாக, கற்றறிந்த ஞானியாகவெல்லாம் இருந்திருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எனக்கு மகள் பிறக்கும் போது- நானும் இப்படித் தான் நினைப்பேன் போலும். ஆனால்- எனக்கு ஓவியத்தில் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஓவியர்கள் பிடிக்கும். ஆனால் என்னால் 'ஓவியம் தீட்டுவது' என்பது இயலாத காரியம்.

ஆனால் ஆசை உண்டு. ஒரு சில விஷயங்கள் காட்சிகளாக, நினைவுகளாக என்னுள் மட்டுமே இருக்கின்றன. அதைச் சொற்களால் வருணிப்பது என்பது சாத்தியமில்லை. அந்தச் சிறிய த்வாரத்தை திறந்தவுடன், "சஷ்.." என்ற சத்தத்துடன் கொட்டும் அரிசி நிறைந்த பத்தாயம். பாசி படிந்த சுவரில், சிகப்பான பூச்சி. இதையெல்லாம் எப்படி வருணிப்பது?

நாம் எத்தனையோ விஷயங்களை செய்ய நினைக்கிறோம். சிறு குழந்தைகளைப் போல. எனக்குத் தெரிந்த ஒரு ஆறு வயது சிறுமிக்கு 'Ornithologist' ஆகவேண்டுமாம்! ஆனால், அச்சிறுவர்கள், மிக விரைவிலேயே அவர்களின் அந்தக் கனவுகளை- 'வெறும் கனவுகள்' என்று புரிந்து கொண்டு விடுகிறார்கள். 'Ornithology' விரைவிலேயே ஒரு ஆறு வயது சிறுமியின் அம்மாவின்- ஆறாவது பிராயத்தின் ஒரு அபத்தமான கானவாக் மாறிவிடும்.

எனக்கு பல அபத்தமான் கனவுகள் உண்டு. நான் ஒரு பேருந்தில் செல்கிறேன். எங்கு செல்கிறேன் என்ற
கவலையின்றி சென்றுகொண்டே இருக்கிறேன். கையில் ஒரு பேனாவும், சில பேப்பர்களையும் தவிர வேறொன்றுமில்லை. என் பயணத்தின் முடிவை தவிர்த்துக் கொண்டே- நான் சென்று கொண்டே இருக்கிறேன்...

சில சமயங்களில்- என் அபத்தமான கனவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில்- 'இந்தக் கனவு
என்னுடையதில்லையோ' என்று தோன்றும். 18- ஆவது மாடியில், நான். மிகப் பெரிய ஜன்னல். ஜன்னலுக்கு வெளியில்- உண்மைகளின் கொடூரமான அழகு! ஜன்னலின் விளிம்பில் அமர்ந்தபடி நான்- புகை பிடித்துக்கொண்டு. மழை. ஆனால் மழையில் என் cigarette ஐ நான் அணைக்க என்னதான் முயற்சித்த போதும், அதன் முனையில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு- எரிந்து கொண்டே இருந்தது. மழையை அவமானப் படுத்துகிறேன், cigarette- சாம்பலை கீழே தட்டியவாறு.

கூட்டமான ஆட்டோ-வில் வேலைக்குச் செல்ல ஓட்டம், கணினியின் கருப்பு- வெள்ளை தோற்றம், cafeteria வில் coffee. ஆனால் இப்படிப்பட்ட சில சாரமில்லா உண்மைகளுக்கு நடுவிலே- என்னை நான் என் கனவுகளிடம் தோற்றுவிட்டேன். நான் என்னதான் உண்மைகளை நோக்கி விரைய முயற்ச்சித்தாலும், இன்னும் எனக்குப் பிடித்திருக்கும் ஓவியம்- உண்மைகளில் ஊறிப்போன இருவர்- அதை மறக்கும் பொருட்டு, தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அருகே இருக்கும் அந்த தூங்கா விளக்கு, அவர்களின் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக தீட்டிக்கொண்டிருந்தது. அந்த நிழல் நீண்டுகொண்டிருந்தது...

பின் குறிப்பு: படங்கள்- என் கிறுக்கல்கள்...

ஜாடி  

Posted by Matangi Mawley

பச்சை இலைகளின் மத்தியில் ஆங்காங்கு மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் இலைகள்- கிளைகளைப் பற்றிக்கொண்டு வாழ முடியாத முதிர்ச்சியால்- பற்றியிருக்கும் கிளைகளை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே! மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.

சிந்தனை மனதில் தோன்றி வார்த்தையாக உருவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தருணம். வார்த்தை தேடி அலையும் அந்த சிந்தனைகள், மனதினுள் ஏற்படும் எண்ணச் சிதரல்களுக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருக்க- அதனுள் அத்தனை மாற்றங்கள்! நாம் ஏன் உதித்தோம்? நமக்கு வடிவம் கிட்டாமல் இப்படி மூலையில் ஒடுங்கிப் போய் விடுவதற்கு நாம் உதிக்காமலேயே இருந்திருக்கலாமோ? என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா'? என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சிந்தனைகள் என்னிடம் கூறியது- 'இந்த அறிவின்மையும் அந்த கூட்டத்தில் தான் சேரப்போகிறது' , என்று!

ஒரு ஜீவராசியின் சிந்தனை- அதனுடையது. உரு இல்லாது போனால்- அது வெளி வர வேறு வழி இல்லை. உடைந்த சாமான்கள், தூசு படிந்த தரையினில் சீரின்றி படர்ந்து இருந்த அந்த அறையினுள்- வருடங்கள் பல கழிந்தும் உருவம் மாறாது, இடம் தவறாது அமர்ந்திருந்தது அந்த ஜாடி. கழுத்தை உயர்த்தி, அது வலித்து உடைந்து போகும் வரையில் அந்த ஜாடியை பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. சிலந்தி வலைகளின் திரையின் மறைவில், எழிலாய் ஒளிந்து கொண்டு, களவாய் நம்மை அழைத்திருந்தது- பழமை தட்டிப் போன அந்த பீங்கான் ஜாடி.

அதனுள் என்ன இருக்கக் கூடும்? இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச்சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன? "இருட்டு"! என்றார்கள். உருவில்லா சிந்தனைகள். இருட்டு ஜாடியினுள் சிக்கிக் கொண்டிருக்கும் என்னை- அந்த ஜாடி வான மார்கமாக பறந்து சென்று, பின்பு பூமியைத் துளைத்துச் சென்று- நாகலோகத்தில் விட்டு விடுவது போன்ற உருவில்லா சிந்தனைகள்!

அலாவுதீனின் பூதம் போன்றதொரு பூதம் கிளம்பியதாம்- ஜாடியின் உள்ளிருந்து! மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது? இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே! இப்போது கேட்க என்ன இருக்கிறது? அந்த மூன்று ஆசைகள் என்ன என்று தேடி இன்னும் அலைந்திருக்கிறது என் உருவில்லா சிந்தனைகள்.

சிந்தனையின் திரையை விலக்க மனமில்லை! ஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...

துப்பாண்டியார் - Episode 4  

Posted by Matangi Mawley


"தோ... தோ... வரேன்.."-ன்னு குச்சிய எடுத்துண்டு விரட்ட போனா, ஜம்முன்னு தரேல சயநிச்சுண்டு, வெண்ணைய திருடிட்டு, "என்னாச்சு மாமி", ன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற கிருஷ்ணனாட்டம்- "மியாவ்" ங்கறது! இந்தாத்துல இருக்கரதுகளும் சரி, வந்து வாய்க்கரதுகளும் சரி- எல்லாம் ஒரே போல! Iron பண்ணி வெச்சுருந்த dress மேல- ஜம்முன்னு, மெத்து மெத்துன்னு, நாலு காலையும் ceiling அ பாக்க தூக்கி வெச்சுண்டு படுத்து தூங்கறது. 'இத ஏதாவது சொன்னியோ'-ன்னு என்கூட சண்ட பிடிக்க இந்தாத்துல இருக்கற ரெண்டும் ready யா நிக்கறதுகள். அது மேல போய் அப்படி என்ன ஈஷல் வேண்டி கடக்குரெண்டு பேருக்கும்?

நடுல வேற நாங்க ஒரு பத்து நாள் ஊர்ல இல்ல. இது என்ன பண்ணித்தோ தெரியல. Gate எல்லாம் முழுக்க அடச்சு வெச்சாச்சு, உள்ள நுழைய முடியாதக்கி. ஊர்லேர்ந்து, பக்கத்தாத்து மாமிக்கு எதோ காரியமா phone பண்ணினா- "துப்பாண்டி எப்புடி இருக்கான்"ன்னு கேளாம்! எனக்கே அது என்ன பண்ணுமோ-ன்னு கவலையாதான் இருந்துது. தானாவும் எதுவும் தேடிக்க தெரியாது, நம்ம போடறதையும் திங்காது! பின்ன என்ன தான் பண்ண முடியும்? இதுக்காக ஒரு 'cat food' ஒன்னு வேற! அது பாக்க புளியன்கொட்டையாட்டமா இருக்கும். அத எடுக்கறதுக்காக, cupboard அ தொறந்தா போரும். ஒரே சத்தம். அத குடுக்கற வரைக்கும் கத்திண்டே இருக்கும். ஆனா அது எப்புடி போரும்? எப்போ பாரு அதையே குடுக்கவும் முடியாது. நமக்கு கட்டுபடியாகாதோன்னோ?

ஒரே ஒரு கரப்பு ஒண்ணுத்த புடிச்சுடுத்தாம். அத விட்டுட்டு-விட்டுட்டு புடிச்சு எம்முன்னாடி வேட்டையாடி காட்டறது. பிடிச்சதையும் கடேசீல திங்கக்காணும்.
அந்த கரப்பு, இதுக்கு டிமிக்கி குடுத்துட்டு ஓடி போய்டுத்து! மறுபடியும் வால தூக்கிண்டு வந்து, கதவுல மூஞ்சிய தேச்சுண்டு நின்னுது.

நாங்க ஊர்லேந்து வந்தப்றம், பக்கத்தாத்து மாமி சொன்னா. ரெண்டு நாள்- ஆத்து வாசல்-ல நின்னுண்டு கத்திண்டே இருந்துதாம். பாவம். சாயந்தரம் ஓடி வந்துடுத்து. அத பாத்தப்ரம் தான் எங்களுக்கே ஆத்துக்கு வந்தாப்ல இருந்துது!

எளச்சு போய்டுத்து, பாவம். முன்னாடி ஜம்முன்னு, புஷ்டியா இருக்கும். வாசல் gate கம்பிக்குள்ள நுழைய முடியாம கஷ்ட படும். நாங்க கூட எலி, அணில் ஏதாவது புடிச்சு சாப்பட கத்துண்டுடுத்தோன்னு சந்தோஷ பட்டோம். "Born Free" ன்னு ஒரு English சினிமா-ல ஒரு புலி குட்டிய ஆத்துக்கு தூக்கிண்டு வந்து வளத்துட்டு அதுக்கு வேட்டையாட தெரியாத போன கதையாட்டமாயுடுத்து!

இதுக்கு நடூல Bushy வேற. முன்னாடியெல்லாம் அது சாப்படவே சாப்படாது. இப்போ, "கொண்டா-கொண்டா"ன்னு சாப்படறத பாத்தா, வீடு முழுக்க பூனை பன்னையாட்டமாயுடுமோ-ன்னு வேற பயமா இருக்கு. Net ல வேற பூனைக்கு pregnancy 65 days தான்னு போட்டுருக்கு. Bushy சரியான 'அறிகரப்பான்'! முன்னாடியெல்லாம் துப்பாண்டி தான் கத்தும்- சாப்பாடு கேக்கும். Bushy அதுக்கு ஒத்து ஊதும். இப்போ துப்பாண்டி வாயே தொரக்கரதில்ல. அது சரி! கடேசீல நம்ப துப்பாண்டியாத்துலையும் 'மதுரை' தான் போலருக்கு!

அன்னிக்கு ஒரு நாள், ஆத்து வாசல்-ல புது சத்தம். துப்பாண்டி அம்மா, ஒரு ஈடு 'புது release' விட்டுருந்துது. ஒன்னு 'இஞ்சி' (அது இஞ்சி colour ல இருக்கும்), இன்னொண்ணு 'Binji' (Black இஞ்சி. மூஞ்சி மட்டும் கருப்பா இருக்கும்). துப்பாண்டி ஒடனே வெளீல போய் பாக்கறார். ஒரு 15 நாள் ஒரே கூத்து. எப்புடியாவது இந்த இஞ்சி-Binji ய நம்பாத்துல settle பண்ணிடனும் னுபிளான் போட்டுது, துப்பாண்டி. அந்த 'இஞ்சி'- துப்பாண்டியோட அட்ட அசல்! அவனோட 2 பங்கு சாப்படறது. நம்பளால முடியாதுடாப்பா-ன்னு ரெண்டுத்தையும் துரத்தி விட்டாச்சு.

ஒரு நாள் evening, துப்பாண்டி அம்மா அதோட parapet ல அசையாம கிடந்துது. அத எடுத்தப்ரம், அந்த parapet கு நேரா இருக்கற மதில்-ல உக்காந்து அந்த இடத்த வெச்ச கண் வாங்காம பாத்துண்டே இருந்துது. அன்னிக்கு ராத்திரி ஒரு அசாதாரணமான குரல்-ல ஒரு கத்து கத்தித்து. எனக்கு அத கேக்க, அதோட அம்மா-வ நெனச்சுண்டு அது அழராப்ல இருந்துது.


நம்ம தான் சொல்லறோம், அஞ்சறிவு-ன்னு. அதுகளுக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்க தான் செய்றது. இஞ்சி-Binji ரெண்டுத்தையும் பத்தரமா கொண்டுபோய் இதுதான் விட்டுட்டு வந்துது. அது விட்டுட்டு வந்த அன்னிக்கு அத பாக்கரெச்ச எங்களோட குட்டி துப்பாண்டி வளந்து துப்பாண்டியார்-ஆ மாரிட்டாப்ல தோணித்து..... ஒரு க்ஷணத்துக்கு.

"தோ... தோ... வரேன்"..!
Cupboard மேல ஏறி குதிச்சுண்டுருக்கு...

"அடி... அடி..."