2010 -ஓட என்னோட ஹீரோ!  

Posted by Matangi Mawley

நான் 1st std படிக்கும்போது- எனக்கு "Bus Conductor " ஆகணும்-னு கொள்ள ஆசை! அப்போலாம் நம்ம Super Star கண்டக்டர்- இருந்ததெல்லாம் எனக்கு தெரியாது! ஆனா- எனக்கு நெஜமாவே பஸ் கண்டக்டர் னா ரொம்ப புடிக்கும். இந்த கூட்டத்துக்கு மத்தீல, கம்பிய கூட புடிக்காம பஸ்-கு இந்த கோடி-க்கு அந்த கோடி நடக்கறதே ஒரு பெரிய விஷயமா தோணும் எனக்கு. அத விட- அந்த கண்டக்டர் கைல இருக்கற பை! எவ்வளோ சில்லற! அவர் நகரும் போதெல்லாம் கலுக்-கிலுக் னு அதுலேர்ந்து சத்தம் வரத பாத்துட்டு- "அவா கிட்ட மட்டும் எவ்வளோ காசு" ன்னு நெனப்பேன்! ஆனா- ஒன்னங்க்லாஸ்- அந்த கலர்-கலர்- அவர் கிட்ட இருக்கற டிக்கெட் தான்! எல்லாரும்- "doctor, engineer-"னு சொல்லற இடத்துல- நான் மட்டும் யாரு என்கிட்ட "நீ பெருசானப்ரம் என்னவாகப்போற"? ன்னு கேட்டாலும்- "பஸ் கண்டக்டர்"னு தான் சொல்லுவேன்!

ஆனா- நாளடைவுல- இந்த "பஸ் கண்டக்டர்" மோஹம் கொஞ்சம் கொஞ்சமா என்ன விட்டு போய்டுத்து. ஒரு சில- சம்பவங்கள்-நால. நான் 12th படிக்கும்போது- ஒரு நாள் school கு கெளம்ப ரொம்ப late ஆச்சு. கூட்டமான பஸ்- நான் பொதுவா ஏற மாட்டேன். ஆனா அன்னிக்கு எதோ test என்னவோ! இல்லேன்னா அவளோ கஷ்ட பட்டிருக்க மாட்டேன். பஸ் வந்துது. அப்படி ஒரு கூட்டம். ஏறவே முடியல! எதையுமே புடிச்சுக்காம- foot board - தொங்கிண்டு school -கு போனேன்! எனக்கு பின்னாடி தொங்கினவாதான் எனக்கு support ! Driver break அழுத்த அழுத்த எனக்கு அவளோ பயம்! அந்நிய தேதி வரைக்கும்- இந்த "வளை ஓசை" பாட்டு பாத்து foot board- நாமளும் தொங்கணும்-னு இருந்த ஆசையெல்லாம், இருந்த எடம் தெரியாம போச்சு! கமல் ஹாசன் கிட்ட போய்- "செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து! ஸ்கூல்-கு ரெண்டு stop முன்னாடியே எறங்கி நடந்து போனேன். 45 நிமிஷம் class -கு வெளீல நின்னேன். Late- போனதுக்காக. Test -உம் எழுதல!

College படிச்ச காலம்- இன்னும் மோசம். ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரம் நின்னும்டே போன பொழுதெல்லாம் உண்டு! அதுக்கும் மேல- exam பொது ஒரு வருஷமா படிக்காத பாடத்த எல்லாம் ஒரு மணி நேரத்துல கூட்டமான பஸ்- நின்னுண்டே படிச்ச அனுபவங்களும் உண்டு! அதனால- இப்போலாம் பஸ் போறத தவிர்க்க முடியற வரைக்கும் தவிர்க்கறது!

அன்னிக்கு எந்த ஆட்டோ வும் வரல! மாட்டு வண்டீலயாவது ஏறி வீட்டுக்கு போனா போரும் ங்கற நெலம. கூட்டமா இருந்தாலும் பரவா இல்ல-ன்னு கண்ண மூடிண்டு பஸ்- ஏறிட்டேன். ஒரு college பசங்க கும்பல் ஒண்ணு அடுத்த stop- எரித்துகள்! அந்த வயசுக்குள்ள அத்தன heroism-உம் பண்ணிண்டு- எந்த பொண்ணாவது நம்மள பாக்கறாளா-ன்னு பாத்துண்டு இருந்துதுகள். அதுல ஒண்ணு- கருமமே கண்ணா- foot board- தொங்கிண்டு, ஒத்த கையால மட்டும் பஸ் கம்பிய பிடிச்சிண்டு, ஒரு கால- பஸ்-கு வெளீல தொங்க விட்டுண்டு- அத்தன circus வேலையும் காட்டிண்டிருந்துது!

எதோ traffic problem திடீர்னு. Driver அண்ணா break- போட்டார். இந்த கோமாளி நடு ரோட்டுல நல்ல traffic மத்தீல விழுந்துது! ஆடோகாரன், பைக்- போறவன்- எல்லாரும் இத திட்டிட்டு போறா! எத பத்தியும் கவலை இல்ல. பஸ் கெளம்பி ஓட ஆரம்பிச்சப்ரம்- ஓடற பஸ்- ஏறி heroism காட்டித்து! அதோட friend கும்பல் எல்லாம்- "ஹாய்-ஊய்"ன்னு ஒரே கூத்து, இது இப்டி விழுந்து, எழுந்து வந்ததுக்கு!

ஒரு அம்மா. கதவு பக்கம் two-seat-நெறைய உக்கண்டுருந்தா. நல்ல ஆகிருதி. தலைய அள்ளி முடிஞ்சு, உச்சி- ஒரு tight கொண்ட. நெத்தி நெறையா குங்கும போட்டு. அந்த அம்மா- seat விட்டு எழுந்துக்கரத யாரும் பாக்கல. நேரா இந்த கோமாளி கிட்ட போனா. தன்னோட கோவத்த எல்லாம் சேத்துண்டு அவன் முதுகுல ஒரு அடி கொடுத்தா பாருங்கோ! பையன் தெறிச்சு போய்ட்டான்! செத்த நேரம் அவனுக்கு என்ன நடந்துதுன்னே புரியல. அந்த அம்மா-வா, வந்தது தெரியாத, தன்னோட seat கு போய் உக்காந்துட்டா! அப்புறம் என்ன? கூட்டத்துல ஒருத்தனா கலந்துட்டன் பைய்யன். வாய தெறக்கவே இல்ல, இரங்கற வரைக்கும்!

சில பேர் cinema- காட்டறத எல்லாம் பாத்துட்டு, "இப்படியெல்லாம் செஞ்சா தான் hero"ன்னு நெனச்சுன்க்கரா! தான் life- மதிக்கறவன்தான் hero. தன்னோட life- மதிக்கத் தெரியாதவனுக்கு எப்படி இன்னொரு life- மதிக்கத் தெரிய முடியும்? நம்ம எல்லாருக்குமே- இத போல கோமாளிகள அவா நன்மைக்காக- ஒண்ணு வெக்கணும்-னு தோணும்! ஆனா- அந்த அம்மா-க்கு அத பண்ணற தைரியமும், அந்த மனசும் இருந்தது. என்ன பொறுத்த வரைக்கும், அந்த அம்மா ஒரு ஹீரோ தான்! அவங்கதான்- 2010 -ஓட என்னோட ஹீரோ!

This entry was posted on 04 December, 2010 at Saturday, December 04, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

34 comments

சூப்பர் ஹீரோ!

4 December 2010 at 16:42

//கதவு பக்கம் two-seat-நெறைய உக்கண்டுருந்தா. நல்ல ஆகிருதி. தலைய அள்ளி முடிஞ்சு, உச்சி-ல ஒரு tight கொண்ட//

அப்போ! என்னோட ஆல்டைம் பேவரிட் 'ஜம்போ ஜானகி மாமி' மாதிரி இருப்பானு சொல்லுங்கோ!!..:) எனக்கும் கண்டக்டர் மாமாவோட சில்லறை பை மேல ஒரு கண் எப்போதுமே உண்டு!!..:)

4 December 2010 at 17:11

//ஒரு அம்மா. .. அந்த அம்மா- seat விட்டு எழுந்துக்கரத யாரும் பாக்கல. நேரா இந்த கோமாளி கிட்ட போனா. தன்னோட கோவத்த எல்லாம் சேத்துண்டு அவன் முதுகுல ஒரு அடி கொடுத்தா பாருங்கோ! பையன் தெறிச்சு போய்ட்டான்! //
இன்னிக்கு சென்னைலே 5000 பஸ் ஓடுது. ஒவ்வொரு பஸ்ஸுக்கும் அந்த டயத்திலே ஒரு 10 அம்மாக்களாவது
வேணும். அப்படின்னா, 50000 அம்மாக்கள் வரணும்.

அதற்கு பதிலா, அந்தப்புள்ளைங்கள பெத்த அம்மாக்களே வந்தா , நம்ம புள்ளைங்க என்னமா இருக்காங்க அப்படின்னும்
தெரிஞ்சுக்கலாம்.

சுப்பு தாத்தா.

4 December 2010 at 18:04

//கமல் ஹாசன் கிட்ட போய்- "செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து! //
super!
இன்னிக்கிம் எங்க ஆபீஸ் பஸ்ல பசங்க புட்போர்ட்ல ரெண்டு பக்கமும் 15 பேர் தொங்கறா. யாரும் கண்டுக்கல.. அந்த அம்மாவ இங்க வரச் சொன்னா தேவல!

4 December 2010 at 18:57

வளையோசை கல கல கலவென என்று கமல் கலக்கலாக காதல் செய்ய அமலா இருந்தா. இவாளுக்கு யார் வருவா? சில அசத்துகள் கையை விட்டு விட்டு மாத்தி மாத்தி மரம் ஏர்ற மங்கி மாதிரி அந்த இரும்பு பாரை பிடிக்கும்.
ஒவ்வொரு ஸ்டாப்க்கும் சிக்னலுக்கும் கீழே இறங்கி ஓடி ஓடி வந்து பஸ் ஏறி வரத்துக்கு,இதுகள் போக வேண்டிய இடத்துக்கு ஓடியே போய்டலாம். எனா பாதி தூரத்தை இவா ஓடித்தான் கடக்கறா....
இந்த அதிகப் பிரசங்கிகளுக்கு அந்த சொர்ணாக்கா அம்மாதான் லாயக்கு. தக்குடுக்கு ஒரு ஜம்போ ஜானகி என்றால் எனக்கு டபுள் டக்கர் ரேவதி மாமி... ;-)

4 December 2010 at 21:50

உண்மையிலேயே அந்த அம்மாவை பாராட்டனும் ..இது மாதிரி இன்னும் ரெண்டு மூனு பேர் இருந்தா நிறைய விபத்துக்களை தடுக்க முடியும் ..!!

யூஸ் ஃபுல் பதிவு :-))

4 December 2010 at 21:51

Super shot!! :) semma sixer than avanga pannadhu..

Arumayana post.. azhaga yeludhareenga :)

Ennoda nephew kitta nee futurela yenna da aagapora nu keta traffic police nu solluvan. Yen nu keta, avar kaiya neetina odaney yellarum apdiye ninnudaraanga.. avar super hero nu solluvan ;)

4 December 2010 at 22:34

//நான் 1st std படிக்கும்போது- எனக்கு "Bus Conductor " ஆகணும்-னு கொள்ள ஆசை! // அவர்கிட்ட இருக்கிற விசில் தான் காரணம்...

ஃபுட் போர்ட்ல் ஒரு காலில் ஒரு விரலை மட்டும் மெட்டிப்பிடித்து மற்ற உடலனைத்தும் வெளியே நீட்டி ஒரு கையை காற்றில் பறக்க விடும் சங்கம் கன ஜோராக போய்க்கொண்டிருக்கிறது....போக்குவரத்து காவலும் கண்டும் காணாமலும் இருக்கிறது..

சமிபத்தில் ஒரு செய்தி படித்தேன் ...அதை அமலுக்கு கொண்டுவந்து விட்டார்களா தெரியவில்லை ..... மகளிர் இருக்கையை இடதுபக்கத்திலிருந்து வலது பக்கத்துக்கு மாற்றிவிட்டால், ரோமியோக்கள் சாகசத்தை குறைத்து விடுவார்கள் .. எவ்வளவு தூரம் என்பதை பார்க்கவேண்டும்....

4 December 2010 at 22:36

முகம் காட்டாத ஹீரோக்கள் இங்கு நிறைய உண்டு..

நீங்கள் சொன்ன ஹீரோ , எங்கள் ஹீரோவாகவும் ஆகி விட்டார்

4 December 2010 at 23:20

ரொம்ப நாள் கழிச்சு உங்க தளத்திற்கு வருகிறேன்... நல்ல எழுத்து நடை ஆனால் எழுத்துநடையில் ஒரு சமுதாயத்தின் நடை தெரிவது மட்டும் உறுத்தல்...

5 December 2010 at 04:26

பஸ்சில் தொங்குல் நூலாம்படைகள்ன்னு எங்க பேராசிரியர் புட்போர்டர்களைக் குறிப்பிடுவார். பஸ்சில் ஜன்னலோர சீட் கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே.. ஆனந்தம் !

5 December 2010 at 08:39

@மோகன்ஜி
கல்யாணமான புதிதில்... ஜன்னலோர சீட்டில்.. நானும் என்னை கரம் பற்றியவளும்.. திருவனந்தபுரம்.... மார்த்தாண்டம் வழியாக கன்னியாக்குமரி வந்தோம்... சாலையின் இருமருங்கும் பூலோக சொர்க்கம் அந்த ஏரியா... ஒவ்வொரு மரம் அடர்ந்த காடுகள் உள்ளேயும் நாங்கள் ரெண்டு பேரும் கைகோர்த்துக் கொண்டு கண்ணாலேயே சுற்றி வந்தோம்....(டூயட் பாடினோம்.. வெக்கமா இருக்கு)... பச்சைப்பசேலென.... அடாடா... பதிவு எழுத வச்சுடுவீங்க மோகன்ஜி...

பத்துஜி மகளிர் சீட்டை பக்கம் மாத்தறதேல்லாம் தெரிஞ்சி வச்சுருக்கார். உலக ஞானம் ஜாஸ்தி பத்துன்னாவுக்கு.. ;-)

5 December 2010 at 15:08

ஆர்.வி.எஸ் ...தினமலர்ல ஒரு முழுப்பக்க கட்டுரையில் சோதனை முயற்சி படங்களெல்லாம் போட்டிருந்தாங்க ... நம்ம பெண்மணிகள் பார்க்கறாங்களோ இல்லையோ....படிதொங்கு கழக கண்மணிகள் பார்க்கறாங்கன்னு நினைச்சு செய்யும் சாகசங்கள் சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது ..

( நாம பாட்டுக்கு கும்மிய ஆரம்பிச்சிட்டோம் ......நல்ல சமுக விழிப்புணர்வு பதிவு போட்டிருக்காங்க மாதங்கி )

5 December 2010 at 20:06

@பத்மநாபன்
சரி.. அடங்கிட்டேன் தல.. ;-)

5 December 2010 at 21:52

I'll post comments in English in your Tamizh blog and vice-versa, just for a change.

Appropriately worded introduction para, the jingle and the tickets. Nice. :-) Reminded me of my 'bus driving' at home. :-)

I didn't notice it, but was Amala leaning on Kamal or was she holding the stair-holder as well? :-D [Aside, great song and what a pace!]

Where did you go in a bus for 2-3 hours during studies? Kanchipuram or Chingleput? :-)

Well, that not so gentle-lady definitely deserves a 'pat on her back' for whacking that idiot. :-D :-D

6 December 2010 at 14:38

Nalla vela naa anda aunty bus la varla.. :D Ilena en mudugu pazhuthurukkum :P

6 December 2010 at 19:17

ஹிரோ(யின்) உங்க‌ வ‌ருண‌னை
நம்ம‌ பாட‌கி உஷா உதுப்ஜியை ஏனோ நினைவு ப‌டுத்துகிற‌‌து!!
ஏன் அந்த‌க் கோப‌ம்? இப்ப‌டி த‌றுத‌லையா தொங்குறாங்க‌ளேன்னா?
ந‌ம்மளால‌ இப்ப‌டிப் ப‌ண்ண‌முடிய‌லையே..(சிவாஜி ட‌ய‌ல‌க்)ன்னா?

7 December 2010 at 16:12

//செத்த இந்த romance-எல்லாம் பஸ் கு உள்ள வேச்சுக்கொங்கோளேன்"-ன்னு சொல்லிட்டு வரணும் போல தோணித்து//

same blood...எனக்கு இதே தோணி இருக்கு...ஹா ஹா

That lady is real Hero...

10 December 2010 at 03:44

@ sk..

:)

22 December 2010 at 13:37

@thakkudu..

:D ha ha!

22 December 2010 at 13:38

@sury..

true!

22 December 2010 at 13:38

@rishaban..

ha ha! nanum avangala thedindu thaan irukken...

22 December 2010 at 13:39

@ rvs...

very true!

22 December 2010 at 13:40

@ jailani..

true. thanks!

22 December 2010 at 13:40

@ nithya...

:) thanks!

22 December 2010 at 13:40

@ padmanaban...

avangalum ennaennavo yosikkathaan seiyaraanga!

22 December 2010 at 13:41

@ parvaiyalan...

:) true!

22 December 2010 at 13:42

@ prabakaran...

i meant that to be colloquial... also trying to preserve an "endangered" vattaara vazhakku here...

22 December 2010 at 13:43

@ mohanji...

:D ha ha!

22 December 2010 at 13:44

@ ramm..

:D tanks a ton.. my col days were spent in trichy-tanjore area...

22 December 2010 at 13:45

@ karthik...

:)

22 December 2010 at 13:46

@ vasan...

samuthaaya akkarainnu thaan enakku thoniththu!

22 December 2010 at 13:46

@ thangamani...

:) ha ha! thanks!

22 December 2010 at 13:47

@ thangamani...

:) ha ha! thanks!

22 December 2010 at 13:47

Post a Comment