"ஊர்மக்கள்"  

Posted by Matangi Mawley

எதப்பாத்தாலும் உடனே பண்ணி பாக்கணும்! டி.வி. "ஓம் நாம ஷிவாய" பாத்துட்டு ஒரே பக்தி! நடு கூடத்துல சாமி ரூம் லேருந்து உம்மாச்சி படத்தஎல்லாம் எடுத்துண்டு வந்து கூடத்துபரத்தி கட்டிண்டு கூத்தடிச்சுண்டுருக்கு. கேட்டா பூஜ பண்ணரதாம்! ஏதோ ஒரு episode ராவணன், ஷிவனுக்கு கர்பூரமெல்லாம் காட்டி, பாட்டு பாடி பூஜ பண்ணறத பாத்துடுத்து. அவ்வளவுதான்- புடிச்சுண்டுடுத்து!

வாங்கின கர்பூரமெல்லாம் காலி! எல்லாத்தியும் கொளுத்தி போட்டு- மேல-கீழ பட்டு சுட்டுதுன்னா "அம்மே-அம்மே"னு நம்புள்ட தானே ஓடி வரணும்கற புத்தி இருக்கணும். அட அத விடுங்கோ! ஆத்துக்கு வரவா யாராது பாத்தா என்ன நெனப்பா? நாலு செலைய வெச்சுண்டு, அதுக்கு அபிஷேகமென்ன, பூவென்ன! ஆனா சும்மா சொல்லப்டாது! வாய முணுமுனுத்துண்டு- ஒரு கைக்கு கீழ இன்னொண்ண வெச்சுண்டு- அழகா தான் பண்ணித்து!

அது என்னமோ தெரியல! எத பாத்தாலும் உடனே பண்ணி பாக்கணும். அன்னிக்கு யாரோ எங்காத்துக்கு வந்துருந்தா. இவரா, யாரு வந்தாலும் இத கூப்டு- "மாமா/மாமி கு ஒரு பாட்டு பாடி காமி"ம்பார். எல்லாருக்கும் ஒரே பாட்டு தான். எல்லாரும் அத தான் கவனிக்கணும். ஒரு துணிய தலேல சுத்திண்டு அத ribbon வெச்சு கட்டிண்டு "நான் அந்த டி.வி. வந்த sheik" ங்கும். அதே துணிய வேற மாறி போட்டுண்டு "பாரதியார்"ங்கும்.

இது 1st std. படிக்கறச்ச- craft miss எதோ கலர் paper எல்லாம் வெட்டி ஓட்ட கத்துகொடுத்தாளாம். கத்ரிகோல வெச்சு வெட்றதுக்கு practice பண்ணறேன் பேர்வழின்னு எம்பொடவலேர்ந்து கொட வரைக்கும் எல்லாத்தியும் வெட்டி வச்சிருந்துது!

இன்னொரு நா எங்கயோ கீழ விழுந்து அடி பட்டு ஒரே அழுக. என்ன பண்ணினன்நேன். "ஸ்ரீநாத் மாதிரி பண்ணினேன்"நுது. என் தங்க புள்ள ஸ்ரீநாத் வினோதமா தூங்குவான், சின்ன வயசுல. அந்த posture அ இது try பண்ணிருக்கு. அத படி கட்ல நின்னுண்டா பண்ணும்? கீழ விழுந்துடுத்து!

இது எல்லாம் நன்னா பண்ணரதேன்னு, அவா school drama ல லாம் சேத்துப்பளா- என்ன வேஷம் நு ஒரு தடவ கேட்டேன். "ஊர்மக்கள்"நுது. அவ்வளவுதான். ஒரு மாசம் அன்ன ஆகாரமில்லாம, ராப்பகலா- class எல்லாம் மட்டம்- practice practice practice தான். ஜெக ஜெக ன்னு பட்டு பொடவைய கட்டி விட்டுருந்தா. இத்தனூண்டு கொழந்தைய அவளோ பெரிய பொடவைல பொட்லமா கட்டியாச்சு! அழகாதான் இருந்துது.

இது எப்படா வரும்-வரும் னு stage ஏ பாத்துண்டு உக்காண்டுருன்தேன்! மீராபாய் கு கல்யாணம் நடக்கறது. அதுல "ஊர்மக்கள்" நாலு பேர் கலந்துக்கறா. அந்த நாலு பேர்ல ஒண்ணு, இது! மைக்க புடிச்சுண்டு, ஒரு ஒத்த வரி வசனம்-

"என்ன இருந்தாலும் மீரா கொடுத்துவெச்சவ. அவ அதிர்ஷ்டசாலி. மீராவின் பாக்யமே பாக்கியம்"

னுட்டு போய்டுத்து. "ஏண்டா இதைத்தானா சிந்து miss உனக்கு ஒரு மாசமா 'நல்ல பாவத்தோட சொல்லும்மா' ன்னு உன்ன திட்டி திட்டி சொல்லி கொடுத்தா"? ன்னு கேட்டேன். அதுக்கு இதெல்லாம் பத்து எங்க கவல? stage ல போய் பேசியாச்சு. அவ்வளவுதான்! ஒரே குஷி!

"எங்கேர்ந்து எடுத்தியோ- அங்கியே கொண்டோய் வை" னு ஒத்தி
காலேலேர்ந்து கத்திண்டுருக்காளே! பாவம் இவ ஒத்தி கத்தராளே- அவ சொல்ற பேச்ச கேப்போமே, ஒரு நா நல்ல கொழந்தையா இருப்போமேன்னு இருக்கா? இன்னும் அந்த பூஜ சாமானெல்லாம் எடுத்து வெச்ச பாடில்ல.

ஸ்லோக class note book ல good deeds எழுதும்போது மட்டும் "அம்மா கு இட்லி கு அரச்சு கொடுத்தேன், கால அமுக்கி விட்டேன், வைர மூக்குத்தி வாங்கி கொடுப்பேன்"நு paper கிழிய எழுத தெரியறது...

இது என்னதான் எல்லாம் அழகா பண்ணினாலும், கடேசில எல்லாத்தியும் எடுத்து அடுக்கி வைக்க மட்டும் வர மாட்டேங்கறது. அதுதான் எப்பிடி ன்னு நேக்கு புரியறதில்ல! போட்டது போட்டபடி அப்புடியே கெடக்கு! ஆனா இதத்தான் ஆள காணும்! தேடிப்போய் பாத்தா- வேலைக்காரி துணி தோய்க்கரத உக்காந்து வேடிக்க பாத்துண்டுருக்கு.

மொதல்ல- இந்த surf , brush எல்லாத்தியும் எடுத்து, மேல் தட்டுல ஒளிச்சு வெக்கணும்!

This entry was posted on 26 June, 2010 at Saturday, June 26, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

26 comments

கலக்கல் போஸ்ட்பா! அந்த பொல்லாத கொழந்தை யாருன்னு எனக்கு தெரியுமே!!!...;)

26 June 2010 at 17:05

@thakkudu..

:D :D thanks!

26 June 2010 at 17:44

அதுக்கு இதெல்லாம் பத்து எங்க கவல? stage ல போய் பேசியாச்சு. அவ்வளவுதான்! ஒரே குஷி!

சமத்து குழந்தை!

26 June 2010 at 18:30

இது என்னதான் எல்லாம் அழகா பண்ணினாலும், கடேசில எல்லாத்தியும் எடுத்து அடுக்கி வைக்க மட்டும் வர மாட்டேங்கறது. அதுதான் எப்பிடி ன்னு நேக்கு புரியறதில்ல! போட்டது போட்டபடி அப்புடியே கெடக்கு! ஆனா இதத்தான் ஆள காணும்! தேடிப்போய் பாத்தா- வேலைக்காரி துணி தோய்க்கரத உக்காந்து வேடிக்க பாத்துண்டுருக்கு.

மொதல்ல- இந்த surf , brush எல்லாத்தியும் எடுத்து, மேல் தட்டுல ஒளிச்சு வெக்கணும்!


.....cho chweet! I enjoyed reading this post.

26 June 2010 at 18:52
This comment has been removed by the author.
26 June 2010 at 18:52

வழக்கொழிந்து போன பல ப்ரயோகங்களில் உயிர்த்தெழுகிறது ஒரு (சேட்டைக்)குழந்தையின் ஓவியம்.என் புள்ளாண்டனும் இப்படித்தான்.கார்ப்பைத்தியம்.படுக்கப்போகும் படுக்கை பூராவும் கார்களை விதவிதமான கோணங்களில் அடுக்கியிருப்பான்.கேட்டா ஆட்டத்தை ஆரம்பிக்கறச்சே இருக்கற ஸ்வாரஸ்யம் முடியறச்சே இருக்கமாட்டேங்கறதுப்பாம்பான்.ஆனாகொஞ்ச நாளானப்பறம் நானா இப்பிடின்னு அசடு வழியும் அதே கொழந்தை.அந்த நாளுக்குக் காத்திருக்கேன்.சின்னச்சின்ன ஸ்கிட்ல அசத்தறீங்க மாதங்கி.நிறைவா இருக்கு.

26 June 2010 at 18:54

@rishabhan....

:D thanku!

26 June 2010 at 19:01

@chitra...

danku! :D

26 June 2010 at 19:01

@chithra..

danku! :D

26 June 2010 at 19:01

@sundarji...

"ஆனாகொஞ்ச நாளானப்பறம் நானா இப்பிடின்னு அசடு வழியும் அதே கொழந்தை."
"உண்மை தான்... நானும் அதுக்கு தான் wait பண்ணறேன்" நு எங்க அம்மா உங்க கிட்ட சொல்ல சொன்னாள்! சொல்லிவிட்டேன்!

நன்றி! :D

26 June 2010 at 19:04

Haioooooooo soooo cute :) Nostalgic ah irukku padikka.. Yellam namma senjatha polave :)

Last line super :) he he he

Putting yourself into a mom's shoes and writing is really awesome :)super ma. kalaku :)

26 June 2010 at 20:01

@nithya..

:D thanks! correct.. ellaarumae pannakkoodiya vishayangal thaan.. amma padara kashtam thani.. avanga unarvukku naan vaartha kodukkaraen.. avvalavuthaan! :D

26 June 2010 at 20:04

cute post

26 June 2010 at 21:55

@ kalyan....

thanks! :)

26 June 2010 at 22:01

பூஜை சாமான்மட்டும்தானே . எங்க வீடு மேடம்க்கு சமையல் பாத்திரம்தான் வேண்டும்.. அருமையான பதிவு

28 June 2010 at 12:56

@LK...

Athuvum undu!
Thanks!

28 June 2010 at 13:13

அருமையான பதிவு.

28 June 2010 at 20:15

@jeswanthi...

thanks! :)

28 June 2010 at 21:27

nanna iruku...arumai!

30 June 2010 at 00:27

Romba nanna irruku but unga amma ku sabash! Nokku illa! :):)

30 June 2010 at 10:18

மாதா மாத‌ங்கி,
குழந்த‌யை அப்ப‌டியே வார்த்த‌யாலேயே
வார்த்து எடுத்துக் க‌ண்காட்சி ந‌ட‌த்திட்டிங்க‌.
ஸர்ப், பிர‌ஷெல்லாம் அப்புற‌ம் மேலே போடுங்க‌.
முத‌ல்ல‌, குழ‌ந்த‌யை கூட‌த்துல‌யிருத்தி
நல்லா திர்ஷ்டி சுத்திப் போடுங்கோ.

30 June 2010 at 13:53

@vgr..


thanks! :)

30 June 2010 at 18:59

@preethi..

aniyaayam preethi! kontha thaane aththana thittayum vaangirukku! :( :( kontha evalooooooo paaavam!!! :( :(

30 June 2010 at 19:00

@vasan...

:D :D hee..he! thnx!

30 June 2010 at 19:02

நீ துருதுரு குழந்தயாக / சிறுமியாக செய்த குறும்புகளை
உன் அம்மாவும் நானும் அடிக்கடி நினைவு கூர்வதுண்டு.. ஸ்கூல்
ட்ராமாக்களிலும் , மாறுவேடப்போட்டிகளிலும் தவறாமல் பங்கேற்றதெல்லாம்
என்றும் பசுமையான நினைவலைகள் . Don't add years to life; add life to years
என்பதிற்கிணங்க நிகழ்ந்த நிகழ்வுகள் இவையெல்லாம் தான் ..In fact, adult life -ல்
இதுமாதிரி நிகழ்வுகள் அரிதானவையே என்பது ஓர் கசப்பான உண்மை
அம்மாவின் பார்வையில் மாதங்கி என்ற subject ஐ நீ தேர்ந்தெடுத்திருப்பது ,
Nithya கூறியிருப்பது போல மிகவும் பாராட்டுக்குரிய உத்தி..மிகவும்
ரசிக்கத்தகுந்தவையாக இருக்கின்றன.
'ஊர்மக்கள் 'என்ற கதாபாத்திரம் ஸ்கூல் டிராமாக்களுக்கே உரிய து ..விசித்ரம்
வேடிக்கை !
நீ அடுத்து என்ன போஸ்ட் செய்யபோகிறாய் என்று நானும் ஆர்வத்துடன்
காத்திருக்கிறேன் .. வாழ்த்துக்கள்


மாலி

30 June 2010 at 21:43

@ mawley..

next would be in soon!!! :) thanks!!!!

1 July 2010 at 19:15

Post a Comment