விரிபோனி  

Posted by Matangi Mawley


ஸ்கூல் விட்டு வந்தோடனே- மூஞ்சி அலம்பினோமா, கெளம்பினோமா-ன்னு உண்டா? ஒயட்டிண்டு நிக்கறது- அங்கயும், இங்கயும். நாங்கள்லாம் அந்தகாலத்துல இது வயசுல பத்து பேருக்கு சமச்சுபோடுவோம். இதென்னடான்னா- எல்லாத்துக்கும் என்ன ஏவிண்டு நிக்கறது! நானும் எத்தன்னாளுக்கு தான் இது பின்னாடியே குளி, பல்லு தேய், பாத்ரூம் போ ன்னு சொல்லிண்டு அலைய முடியும்? அதெல்லாம் அதுக்கா தெரியனும். மொட்ட மாடிலேர்ந்து துணி எடுத்துண்டு வரேன்னுது! ஆஹா- எம்பொண்ணும் வேல செய்யரதேன்னு நெனச்சேன்! அங்க உக்காந்து- நோட் பேப்பர்-ல ராக்கெட் பண்ணி உட்டுண்டுருக்கு! தெனத்துக்கு இது ஒரு வேல! பாட்டுக்லாஸ் போகணும்னாலே இப்படி ஏதாது பண்ணிண்டுருக்கு!


எப்போதும்போல இன்னிக்கும் லேட்டு தான். "பாட்டு மாமி திட்டறா"னா- யாருக்குதான் கோவம் வராது? சரளி முடிஞ்சு, ஜண்ட முடிஞ்சு- நாங்க உள்ள போறச்ச அலங்காரம் பாடிண்டுருந்தா. மூஞ்சிய ஒண்ணுமே தெரியாதமாரி வெச்சுண்டு அது உள்ள காலெடுத்து வெக்கும்போதே நேக்கு தெரியும் இது இன்னிக்கு நன்னா வாங்கி கட்டிக்க போறதுன்னு! "வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு" ங்கறா மாமி. "பண்ணினேன் மாமி"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது! மாமி ஒடனே என்னதான் பாக்கறா! நான் என்ன பண்ணறது?! இத பெத்தாச்சு. ஆனாலும் கோதண்டராம ஐயர் எங்கள அப்படி வளக்கலையே- பொய்யெல்லாம் சொல்லபடாதுன்னா- நான் என்ன பண்ணறது? "அதெல்லாம் பண்ணுவா"ன்னேன்!

நாலு ஸ்வரம் பாடரதுக்குள்ள பேச்சு வேற மாமிகிட்ட! ஸ்கூல் கதையெல்லாம் ஒப்பிச்சாகணுமே! என்கிட்ட ஒன்னும் சொல்ல மாட்டேங்கறது! அது 3rd std ல A section ல படிக்கரதுங்கரதே அது மாமி கிட்ட கத சொல்லும்போது தான் நேக்கு தெரியறது! பாடினோமா, நாலு பாட்டு கத்துப்போமா.. ஒண்ணுங்கடயாது! ஒரு விஷயத்த உக்காத்திவச்சு சொல்றதுக்கே அத்தன ப்ரயத்ன பட வேண்டிருக்கு. ஒண்ணு மாத்தி ஒண்ணு ன்னு அப்டியே தாவிண்டேஇருக்கு!


"தாளமெல்லாம் தப்பு. தருவ தாளம் இப்படியா போடுவா? நீ வரதுக்கு முன்னாடி கார்திக்காவது ஒழுங்கா போட்டுண்டுருந்தான். உன்ன பாத்து அவனுக்கும் மாறிடுத்து"! இது கவனம் எங்க தாளத்துல இருக்கு? அவாத்துல "திலோ"ன்னு ஒரு பூனை இருக்கும். அது அப்போதான் பாலெல்லாம் குடிச்சுட்டு, ஜம்முனு சொஹுசா- sofa ல ஏறி படுத்துண்டுது. அத உக்காந்து நோட்டம் உட்டுண்டுருந்துது. அந்த கார்த்தி புள்ளயாண்டானுக்கு பாவம், தாளம் மறந்துபோச்சு. இது சரியா போடறதோன்னு இத பாத்து அவம்போட- மாமி உள்ளேர்ந்து வரெச்ச ரெண்டும் கரெக்ட்-ஆ தப்பு தப்பா போட்டுண்டுருக்குகள்! நேக்கு தெரிஞ்சாலாது ஏதாது சொல்லிருக்கலாம். நேக்கு எங்க இதெல்லாம் தெரியும்?

திட்ட வாங்கிநோடனே வாய்லேர்ந்து- ரெண்டுத்துக்கும் கொரலே காணல. இதுக்கா, கூட்டத்துல வாயசச்சே பழக்கம் அதுக்கு! கார்த்திக் வேற பாவம்- சொஹத்துல கொரலே எழும்பால அவனுக்கு! மாமி- "சத்தம்-சத்தம்" கரா! அதட்டரா! திடீர்னு, "மாமி-மாமி! கார்த்திக் அண்ணா அழறா", அப்ப்டின்னுது, வாய வெச்சுண்டு சும்மா இல்லாத! மாமி ஒடனே- "அவனுக்கு வெக்கம், மானம், சூடு, சொரண-எல்லாம் இருக்கு. அதனால அழறான்! நமக்குதான் அதெல்லாம் கெடயாதே! நீ பாடு..." அப்படின்னா. நல்ல வேள. அதுக்கு இதெக்கெல்லாம் அர்த்தம் தெரியாது. தெரிஞ்சாலும் பெரிசா கண்டுக்காது!

"போன கிளாஸ்- கல்யாணி வர்ணம் முடிஞ்சுதா...?" ன்னு இத கேட்டாஇதுக்கென்ன தெரியும்? அது பாடற அழகு, கல்யாணி, காம்போஜி, ஆரபி- எல்லாமே ஒரே போல தான் இருக்கும். அது எதோ ஒரு பக்கமா தலையஆட்டித்து. மாமி, அத அமாம்-நு எடுத்துண்டு- "நான் 'விரிபோனி' வர்ணம்எடுக்கறேன். பைரவி, அட தாள வர்ணம்! இப்ப கத்துக்க ஆரம்பிச்சாதான் ஒரு வருஷத்துல எப்போவாவது பாட வரும்..."- அப்படின்னா மாமி. கார்த்திக் அண்ணாவுக்கு குஷி தாங்கல! கஷ்டமான பாட்டாச்சே.. எம்பொண்ணா- திலோ கு உக்காண்டு மூஞ்சி காட்டிண்டுருக்கு.

"வி-ரி-போ----நி----யயி-.." ன்னு மாமி ஆரம்பிச்சா! ஏற்கனவே- இவா ரெண்டு பெரும் வாயே தெறக்கல! இந்த பாட்டா! எங்கேயோ ஒரு போந்துக்குள்ளேர்ந்து படராப்ல இருக்கு. மாமி வேற "சத்தம்-சத்தம்" நா என்ன பண்ணறது?

ஒரு வழியா பல்லவி முடிஞ்சுது. தமிழ் பாட்டு ஒண்ணு "நானொரு விளையாட்டு பொம்மையா". வேண்டா வெறுப்பா பாட ஆரம்பிச்சுது. "ஒழுங்கா பாடு"நா மாமி. திடீர்னு எங்கேர்ந்தோ கொரல் மேல எரிடுத்து. ஏத்தலும் ஏறக்கலுமா அது பாட பாட மாமி- "ஒழுங்கா பாடு- நீ பாடற அழகு 'பொம்மையா' பொம்மையோட தல தனி கால் தனி-யா வந்துடும் போலருக்கு"-நா. ஒரு வழியா "
ஸா- பா- ஸா" சொல்லி முடிக்கல, மூட்டைய தூக்கிண்டு அங்கேர்ந்து கேளம்பரச்சே அதுக்கு இருக்கறசந்தொஷமிருக்கே! என்னவோ போங்கோ! இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...!

This entry was posted on 01 June, 2010 at Tuesday, June 01, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

51 comments

இது சொந்த கதையா ??? என்னை மறந்து சிரித்தேன். பிராமணா பாஷை அருமை மாதங்கி மாமி. கலக்கறேல் போங்கோ. நேக்கு என்ன சொல்றதனே புரியல ?

அற்புதம்

1 June 2010 at 17:03

நன்னா எழுதி இருக்கேள்..


www.narumugai.com

1 June 2010 at 17:23

@ LK...

kathai,peyar,vasanam, even poona yoda peyar kooda nijamey!

thanks!

1 June 2010 at 17:23

@ narumugai..

thanks! :)

1 June 2010 at 17:24

one suggessiom, please avoid original names hereafter. i have also put my wife and kid name before. but i am regretting for that. because of the current situation in tamil blog world. u can delete this after reading

thanks

1 June 2010 at 18:27

@LK..

i feel I lose personal touch if i dont use original names.. like givin the credit to sme minu/tinu.. for smething i did! :) call it superstition or myown way of doing things.. bt i prefer this! besides there is nothing unreadable here- it s a free place! :) any way, i consider my readers are intelligent enough to guess what is original at the end of the day evn if i change the names! then whts the point? :)

i promise you.. i never do smething abt which i d later regret doing...

1 June 2010 at 19:08

//வீட்டுல practice பண்ணியான்னா உள்ள வா. இல்ல அப்டியே திரும்பி போய்டு" ங்கறா மாமி. "பண்ணினேன் மாமி"ன்னு கொஞ்சங்கூட சங்கோஜமில்லாம புளுகறது! //
நான் சங்கீதம் கத்துக்கப் போனது ஞாபகம் வருது.. மாமி என்னோட போராடி ஒரு ஸ்டேஜ்ல சொன்னா.. ‘டேய் நான் மறுபடி கத்துக்கப் போகணும்டா’!

1 June 2010 at 19:50

அழகான பதிவு... உங்களுக்கு ஹாஸ்யம் நல்லாவே வர்றது... ஸ ப ச வவிட... ஹா ஹா ஹா.. உங்க பொண்ணு செம ஆள இருப்பா போல இருக்கே... சூப்பர் அம்மா சூப்பர் பொண்ணு...

1 June 2010 at 20:03

@ rishabhan...

unmai.. enna poruththa varekkum.. paattu teachers ellaarukkumey romba poruma athikam!

1 June 2010 at 20:19

@ appaavi thangamani..

:D :D oru chinna change.. naan thaan ponnu.. enga ammavoda vaarthaigalayum ninaivottaththaiyum payanpaduththirukkaen!

1 June 2010 at 20:21

சங்கிதம் கற்றுக்கொள்ளும் பொழுது டீச்சர்கள் / கற்றுக்கொள்பவர்கள் படும் / படுத்தும் பாட்டை நல்ல நகைச்சுவையொடு சொல்லியுள்ளீர்கள்...அருமை..

ஒரு சின்ன விண்ணப்பம்..பதிவில்,அழகாக தமிழ் எழுதும் நீங்கள் ,பின்னூட்டங்களையும் தமிழிலியே தட்டினால் இன்னமும் சிறப்பாக இருக்கும்..மென் பொருள் தகராறு இருந்தால், அநன்யா டீச்சரை அணுகவும் அரை நொடியில் தீர்வு கிடைக்கும்.

1 June 2010 at 21:39
This comment has been removed by the author.
2 June 2010 at 06:34

@ padmanabhan..

நன்றி!

உங்கள் கருத்து சரிதான். தமிழ் பதிவிற்கு பின்னூட்டமும் தமிழில் தான் எழுத வேண்டும்! என் அப்பா கூட சொல்லிக்கொண்டே இருக்கிறார்! என் அம்மா என்னை "உரிச்ச வாழைப்பழம்" என்று திட்டுவதை நான் அவ்வளவு சுலபமாக பொய்யாக்கி விட முடியாது என்பதனாலும், பின்னூட்டத்தை படித்த உடனே என் கைகள் தானாகவே ஆங்கில எழுத்துக்களை தான் முதலில் தேடுகிறது என்பதனாலும் தான் இப்படி!

முயற்சிக்கிறேன்!

2 June 2010 at 07:40

intha kathaiya en kita 10 times mela solirka.. blog la yum update panitaya..? kalakura Po.
nice... UNga amma dialogues thirudama sontha dialogues elutha muyarchi panalamae ;);)

2 June 2010 at 09:09

@ preethi..

yei! :) :D unakku venaa 10 times sollirukkalaam.. blog readers ku ithu thaane 1st time! :D

enga amma va vida enna vechchu comedy panrathukku intha ulagaththileye yaarum kedayaathu! azhaga irukkulla enga amma pesarathu? thavira- enga ammavukku orey kora preethi.. avanga thittaratha ellam naan oru kaathula vaangi innoru kaathula vidaraen-nu! athanaala thaan.. oru aathma thrupthikku thaan ippadi avanga enna thittaratha ellam azhiyaa pathivukalaaka maaththindurukkaen!

enga ammavukku oru santhosham.. avanga thittarathayum naan mathichchu kekkaraennu! parents entha kozhandaya nee urupdamaattennu solraangalo- antha kozhanda thaan life la munnerum! :D ella thittayum thaandi varathuthaan namma saamarthiyam!

2 June 2010 at 10:31

இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...!
Unmai than 2 vari comment ku oru essay vae eluthirka.. Lolz.. :):D

2 June 2010 at 10:50

@ preethi...

birds of same feather--- nee pesaada! :D

2 June 2010 at 11:26

Agreed! :D

2 June 2010 at 11:30

அமர்க்களம் மாதங்கி. அந்த வயசுல எந்தக் க்ளாஸுக்குப் போனாலும் இதுதான் கதி.மாடில ராக்கெட் இல்ல பட்டம்.ஆத்துக்குள்ளன்னா பூனக்குட்டி-நாய்க்குட்டி-கொறஞ்ச பக்ஷம் ஒரு எலியோட எட்டிப்பாக்கற வால்.அம்மாக்களுக்கு தனக்குக் கெடைக்காத ஒரு ஞானம் அதுகளுக்காட்டும் கெடைக்கட்டுமேன்னு ஒரு அபிலாஷை.அம்மாக்களும் சரி பெண்- பிள்ளைகளும் சரி மாறினதும் இல்லை-மாறப்போறதும் இல்ல.ஸ்வாரஸ்யமான தனியாவர்த்தனம் மாதங்கி. ஸா-பா-ஸா-பா-ஸா.

2 June 2010 at 14:01

preethi

neengalum unga amma titnatha eluthuveengalaa ???

2 June 2010 at 14:04

@sundarji...

nanri! :D nijam.. maththavaala paththi theriyaathu.. bt en case-la nijam..

2 June 2010 at 23:48

என்னோட சிறு வயது அனுபவம் போலவே இருக்கு....என்ன எங்கம்மாவுக்கு பாட்டு ஒரளவு தெரியும்... :-)

3 June 2010 at 14:55

@ LK..

preethiyellaam samaththu kozhanda.. ava amma-laam avala thitta maataa! :P

3 June 2010 at 16:41

@ madurayampathi..

:D

3 June 2010 at 16:41

absolutely hilarioussssss!!! enjoyed thoroughly! ரொம்ப நன்னா எழுதறாய் கோந்தே!
பாட்டு க்ளாஸ், கார்த்திக் அண்ணா, மாமி, உங்கம்மா தாட்ஸ், திலோ எல்லாரையும் ரொம்பவும் ரசிச்சேன். 3வது படிக்கும் வயசுல உங்கம்மா 10 பேருக்கு சமைச்சு போட்டாங்களா?கொஞ்ச்ச்ச்ச்ச்ச்ச்சம் ஓவரா மிகைப்படுத்தறாங்களோ? ஹிஹி.. யுவர் அம்மா = மை நைனா ஐ தின்க்! வெரி நைஸ்ஸ்ஸ்ஸ்!

3 June 2010 at 20:16

ஹிஹிஹி, படிச்சதும் ஒரு நிமிஷம் எங்க அப்பா திட்டறாரோனு பயந்துட்டேன், அப்புறம் தான் அவர் சுவர்க்கத்துக்குப் போய் எட்டு வருஷம் ஆச்சேனு நினைப்பு வந்தது. :))))))))) அப்படியே இருக்கே?? எப்படிங்க இது??? எங்க வீட்டிலே வந்து பார்த்து ஒட்டுக் கேட்டாப்பல தோணுதே? :P:P:P

3 June 2010 at 20:52

@ananya...

ellam solrathu thaan.. ithukalukkenna theriyavaa porathunnu oru kuruttu dhairiyam! amma adikkadi use pannara dialogue athu! :D thittalenna avaa enna appa-amma? antha pathaviye avaalukku nammala thittarathanaala thaan kedakkarathu!

nanri! :D

3 June 2010 at 21:29

@ geetha...

"ghar ghar ki kahaani"

ellaa veettileyum ithey katha thaan.. enga ammavukku avaa amma thittrathu... enakku enga amma... yaaru kandaa.. avaa amma thittara dialogue kooda use panni enna thittirukkalaam! :D

3 June 2010 at 21:31

@matangi,
very true..
இன்னும் வேற என்னென்னெல்லாம் சொல்லி இருக்கீங்க ப்ரீத்தி கிட்டக்க? அதையெல்லாம் மறக்காம கொஞ்சம் ரிக்கால் பண்ணி போஸ்ட்டா போட்டுடணும். சமர்த்து! எங்களுக்கும் படிக்க சுவையான தீனி!

3 June 2010 at 22:38

@ ananya..

thangal chittam en bhaagyam! :D don't worry... many such things are on their way.. thittalukku innum kooda panjamilla! :D

3 June 2010 at 22:47

//படிச்சதும் ஒரு நிமிஷம் எங்க அப்பா திட்டறாரோனு பயந்துட்டே//

paati atha thaniya post podunga... waiting

4 June 2010 at 12:14

மாதங்கி. ரொம்ப அழகா பெயர்.மாதங்கி மாலி யா,மௌலியா:)

மதுரையம்பதிங்கிற மௌலி பொண்ணும் மாதங்கிதான்:)அது குட்டிப் பொண்ணு. அது எழுதினா என்ன பாட்டுப் பாடுமோ.

எல்லோருக்குமெ பாட்டுக் கிளாஸ்ங்கரது கொஞ்சம் வேப்பங்காய்தான்.
நான் என் பாட்டு டீச்சர் வீட்ல முருங்கைக்காய் எவ்வளவு இருக்கு, அவாத்துக் குட்டிப் பாப்பா எப்படிக் கவுந்துக்கறது இதெல்லாம் தான் ரசிப்பேன்:)
you have a beautiful flair for writing.comments podarathum thamizhla irunthaa nanRAka irukkum. sariyaa:)best wishes for happy blogging.

4 June 2010 at 15:20

மாதங்கி மாலி. நன்றி! :) பாட்டு படிச்ச காலத்துல- சின்ன வயசுல தான் அப்படி.. அப்புறம் தானாவே அதுல ஆர்வம் கூடிடுத்து! அப்பாக்கு தான் நன்றி சொல்லணும்!

முயற்சிக்கிறேன்..

4 June 2010 at 18:02

oh ! பாட்டு கிளாஸ் ல இவ்வளவு நடந்துருக்கா? எனக்கு தெரியவே தெரியாதே!
ஆனா, எல்லா விஷயத்திலேயும் நீ "நுனிப் புல்" மேயற கேஸ் தான்... இன்னும் கொஞ்சம் deep interest எடுத்துண்டு பிரயத்ன பட்டா, எவலோவோ சாதிக்கற potential இருக்குன்னு மட்டும் நெனைப்பேன்... அது லடே-ஆ வாவது புரிஞ்சா செரி!

அம்மா dialogue உம் சரி, பாட்டு மாமி dialogue உம் சரி, perfect ஆ வந்துருக்கு.. லா. ச. ரா. சொல்லுவார்- "நான் ஒரு நூல் கண்டு. என்னை நானே துளி துளியா வெட்டி தந்துண்டே இருக்கேன்"- என்று. வாழ்கையை திரும்பிப்பார்க்கும் நிகழ்வுகள் (nostalgia ) எல்லாமே சுவாரஸ்யமானது தான்- ஆனால் அதில் உள்ள காவிய/இலக்கிய ரஸத்தை வெளிப்படுத்துவது எல்லோருக்கும் கை வருவதில்லை. உனக்கது நன்று வருகிறது... பாராட்டுக்கள்!

- மாலி

4 June 2010 at 19:38

@அப்பா ...

ஞாயஸ்தர்களுக்கெல்லாம் உள்ளத உள்ளபடி சொல்றது மடத்தனம் -நு இந்த விஷயங்கள நானும் அம்மாவும் சேர்ந்து சதி பண்ணி உன் கிட்டேர்ந்து மரச்சுட்டோம் !
thanks pa! :D "வசிஷ்டர் வாயால பிராமரிஷி " பட்டம் வாங்கியாச்சு ! அப்பாடா !

4 June 2010 at 21:19

migavum nandraga ezhudugirai!!!!!arumai! sabash!

4 June 2010 at 21:30

@vgr...

thanks! :)

4 June 2010 at 22:23

//நீ பாடற அழகு 'பொம்மையா' ல பொம்மையோட தல தனி கால் தனி-யா வந்துடும் போலருக்கு"-நா. ஒரு வழியா "ஸா- பா- ஸா" சொல்லி முடிக்கல// hahahaha

//இதுக்கு பாட்டு வராதோஇல்லையோ- பேச்சு நன்னா வரது...! // thats true madam...;)

//எங்க வீட்டிலே வந்து பார்த்து ஒட்டுக் கேட்டாப்பல தோணுதே? // geetha paattikkum sangeethathukkum madrasukkum ambathurukkum ulla duram, irunthaalum naisaa paattu patichchathaa pilla viduvathai mathangi madam namba vendam...:) yethu sonnalum pati 'Theriyumee yenakku!'nuthaan solluvaa...;)

5 June 2010 at 00:35

@thakkudu...

thanks! :) unmaigalai vilakkinaththukkum thanks! :D

5 June 2010 at 12:04

பேச்சு நடையில் அருமையாக உள்ளது ..

6 June 2010 at 12:52

@ bhaskaran...

thanks!

6 June 2010 at 13:34
R.Narayanan  

Hello Madangi, You could scribble any to your taste?

Aim attempting to some good humour.

Bye

8 June 2010 at 04:20
Anonymous  

besh... besh... romba nannaruku.!

8 June 2010 at 18:06

@ narayanan..

thnks uncle!

8 June 2010 at 22:13

@bharathi...

thanks! :)

8 June 2010 at 22:13

would love to have this in srishti, if you pls! :)

13 June 2010 at 16:47

@ tk..

thnks.. i take tht as a compliment!

13 June 2010 at 18:57

Neat narration. Personal experience, I thought. And you have answered it anyway in your comments.

15 June 2010 at 07:57

@ramm..

thanks! :)

15 June 2010 at 19:03

பாட்டு கிளாஸ்ல எப்படி நடக்கும்னு கரெக்டா எழுதி இருக்கீங்க ரொம்ப நல்ல இருந்தது. நல்ல நகைசுவையாக இருந்தது.

மேலும் உங்களுடைய ஜாதகம், திருமண பொருத்தம், எண் கணிதம் மற்றும் எதிர்காலம் பற்றி
அறிந்து கொள்ள http://www.yourastrology.co.in
என்ற இணையதளத்தை பாருங்கள் மிகவும் பயனாக இருக்கும்.

27 August 2010 at 22:54
Anonymous  

Urteter nuytre: http://familyscenca.prv.pl

17 January 2011 at 02:54

Post a Comment