பாட்டி சமையல்
இதுக்கெல்லாம் ஒத்தி சமைச்சு போடறேன் பாருங்கோ! மொதல்ல என்ன சொல்லணும்! நான் என்ன பண்ண முடியும்? நேக்கு தெரிஞ்சது இவ்வளவுதாண்டாப்பா! ஏதோ ஒரு உப்மாவ பண்ணி- "இது எங்க பேபியே அவ கையால செஞ்சது"-ன்னு பாவம் என்ன இவர் தலேல கட்டிட்டா- எங்காத்துல! இப்ப நான் பண்ணறது எல்லாம் நானா கத்துண்டு பண்ணறது தான்! ஒத்தி கஷ்ட பட்டு நாலு மணிக்கு எழுந்துண்டு சமைச்சு வெச்சுட்டு வேலைக்கு ஓடறாளே- செத்த நன்னா இருக்குன்னுதான் சொல்லுவோமே- ன்னு உண்டா? "பாட்டி சம்பாராட்டம் இல்லை"- யாம்!
இத மொதல்ல அது பாட்டியாத்துல லீவுக்கு உட்டதுதான் தப்பு! ஒண்ணர மொழ நீளத்துக்கு நன்னா நாக்க வளத்துண்டு வந்து நிக்கறது! எங்கம்மா ப்ரமாதமா சமப்பாதான். இல்லங்கல. சில பேர் கை பக்குவம் அப்டி. அப்டியே கண கச்சிதமா அமஞ்சுடும்! தோ! இவரும் அப்டிதான். எம்பொண்ண கேளுங்கோ! அதோட "Ranking" படி 1st rank பாட்டி சமையல், 2nd rank- அதோட அப்பா சமையல்!
சனிக்கழம சாயந்தரமா ரெண்டுமா கெளம்பி- ஸ்ரீரங்கம் தெக்கு சித்தர வீதி Market லேர்ந்து எல்லா காரிகாயும் வாங்கிண்டு வந்து- ஞாயத்தி கெழமயானா- காத்தால அவியல்! அவ அப்பா special! ஏதோ- அவர் புண்ணியத்துல நாலு கரிகா உள்ள போரதேன்னு சந்தோஷ பட்டுக்கணும். ஒரு சில அப்பா special இருக்கு- அப்புறம் பாட்டி special! அம்மாக்கெல்லாம் ஒண்ணும் கெடயாது! அதுக்கே எட்டூருக்கு இருக்கு நாக்கு! இவர் வேர கூட சேந்துண்டு நன்னா ஏத்திவிட வேண்டியது!
School போறதுக்கு முன்னாடி, பருப்புஞாம் சாப்டு போடான்னு hot pack ல வெச்சுட்டு போனா- எங்காத்து மஹானுபாவர் அதுல மிளகு, ஜீரகம்- அது இதுன்னு என்னன்னத்தையோ போட்டு- ஆஞ்சநேயர் கோவில் பொங்கல் பிரசாதமாட்டம் பண்ணி கொடுக்க வேண்டியது!
வீணை வாசிப்பாரே- சிட்டி பாபு- ரொம்ப வருஷம் முன்னாடி அவர ஒரு train ல போறச்ச பாத்து friends ஆய்ட்டாராம்! சங்கீதத்த பத்தி பேசினாளா இல்லையான்னு நேக்கு தெரியாது! அவாத்து மாமி, அவருக்கு tiffin டப்பால bread மேல மிளகா பொடி, ஜீனி ரெண்டுத்தையும் வெண்ண போட்டு கலந்து தடவி கொடுத்துருந்தாளாம்! அவ்வளவுதான்! இதுக்கு பழக்கி விட்டாச்சு! இது farex சாப்ட காலத்லையே அதுல ரசத்த கலந்து குடுடீங்கும்! இப்டி காரமா சாப்டா கோவம் தான் வரும்!
நம்பளால இந்த வேலைளாம் செய்ய முடியாதுடாப்பா! நேக்கு தெரிஞ்சதுதான் நான் பண்ணுவேன்! ஏதோ- ஒரு தோசயாது பண்ணி இது கிட்ட ஒரு rank வாங்கிடலாம்னு பாத்தா- "தாயி தான் தோச நன்னா பண்ணுவா" ங்கறது! அதுக்கு சின்ன வயசுல "ர" வராது! அதனால அது பெரியம்மாவ தாயி-ன்னு கூப்டும். ஆனா இன்னி வரைக்கும் அந்த வார்த்த அதுக்கு எங்கேர்ந்து கடச்சுதுன்னு தெரியல!
போரும்! போரும்! எல்லாம் எனக்கு தெரிஞ்ச அளவுக்கு சமச்சா போரும். நேக்கு கல்யாணமான புதுசுல "மீனாக்ஷி மாமி" புஸ்தகத்லேர்ந்து படிச்சு கத்துண்டதுதான் இப்ப இதுக்கு lunch box கட்டி தரது! அது போரும்! அதுக்கா என்ன தெரியும்? முருங்கக்கா மாங்கா போட்ட சாம்பார்-லேர்ந்து, முருங்கக்கீர தேங்கா போட்ட கரி வரைக்கும் பாட்டி சமையல் ருசி நாக்குல ஏறி கடக்கு, அதுக்கு! இதுக்கெல்லாம் இப்ப தெரியாது! இதுக்கு ஒண்ணு பொறந்து- அதுக்கு இது வடிச்சு கொட்டும்போது- அது- "எங்க பாட்டி சமையல் தான் ஒசத்தி"ங்கும் பாருங்கோ- அப்ப புறியும், என் அரும!