ஆரண்யகாண்டம்
காடுதான். மனிதத் தன்மையற்ற மிருகங்கள். மதம், மொழி, இவற்றைத் தவிர சோம்பேறித்தனமும், அலட்சியத்தன்மையும் கொண்டு, வாழ்கை என்பது இது என்ற ஓர் அடிப்படை அறிவு இல்லாமல்- ஓர் மிருகம் போன்ற வாழ்கை வாழும்இடம். இது காடுதான்.
காடோ, நாடோ என்ற எண்ணமே இல்லாது- உடுத்தியிருக்கும் துணியின் மீதுள்ளஅழுக்கில் சிறிதும் உள்ளத்தில் கிடையாத, தான் இன்னார் என்ற உணர்வேஇல்லாத ஓர் ஜீவன். பசி, தாகம், சுகம், துக்கம்- இவை எல்லாமே அந்த ஜீவனுக்குச் சமமே. அப்படிப்பட்ட நிஸ்சலமான ஓர் தூய ஆத்மாவை நாம்காணவே முடியாது. வெளுப்பின் உச்சகட்டம்.
ஓர் குட்டிச்சுவற்றின் அடியில்- சினிமாப்பட போஸ்டர்களை கொண்டு தன்னை மூடியவாறு அமர்ந்து கொண்டிருந்த அந்த ஜீவன்- எதை பற்றிதான் அவ்வளவு நிச்சிந்தனையாக நினைத்துக்கொண்டிருன்ததோ; என்று எனக்கு ஓர் எண்ணம். அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தால், பயம்.
பயமென்ன பயம்? அந்த உயிருக்குதான் இரண்டு கை இல்லையா? கால் இல்லையா? அதுதான் பேசாதா? பிறகு என்ன பயம்? தெரியவில்லை. புறியவும் இல்லை. எதோ பயம். ஆரண்யத்தில் பயத்திர்கா பஞ்சம்? நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ரஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா! பயம்தான்.
நாடு காட்டில்- நடப்பது தவிர்த்து, அந்த ஆத்மாவையே உற்றுப் பார்த்திருந்தேன். அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இந்த ஆரண்யத்தில் இருப்பது சற்றே குறைவுதான். இங்கேயுள்ள மிருகங்கள் சிந்திப்பதில்லை. அழுக்கான ஆடைகள்அணிவதில்லை. ஆடைகளின் அழுக்கையெல்லாம் உள்ளுக்குள் போட்டு பூட்டிவிடுவர் அவர். ஓர் இடத்தில் இருப்பதில்லை. ஓர் நிரந்தர இலக்கும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இவை எதுவும் அந்த ஆத்மாவிற்குப் பொருந்தாது!
நான் உற்றுப் பார்ப்பதை ப்ரஹ்மஞானத்தின் மூலம் தெரிந்துகொண்டது போலும். அந்த ஆத்மா! திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு! கையில் எதையோ எடுத்து வீசுவது போன்று தோன்றியது. மிருகம் ஓடியது!