ஆரண்யகாண்டம்  

Posted by Matangi Mawley

காடுதான். மனிதத் தன்மையற்ற மிருகங்கள். மதம், மொழி, இவற்றைத் தவிர சோம்பேறித்தனமும், அலட்சியத்தன்மையும் கொண்டு, வாழ்கை என்பது இது என்ற ஓர் அடிப்படை அறிவு இல்லாமல்- ஓர் மிருகம் போன்ற வாழ்கை வாழும்இடம். இது காடுதான்.

காடோ, நாடோ என்ற எண்ணமே இல்லாது- உடுத்தியிருக்கும் துணியின் மீதுள்ளஅழுக்கில் சிறிதும் உள்ளத்தில் கிடையாத, தான் இன்னார் என்ற உணர்வேஇல்லாத ஓர் ஜீவன். பசி, தாகம், சுகம், துக்கம்- இவை எல்லாமே அந்த ஜீவனுக்குச் சமமே. அப்படிப்பட்ட நிஸ்சலமான ஓர் தூய ஆத்மாவை நாம்காணவே முடியாது. வெளுப்பின் உச்சகட்டம்.

ஓர் குட்டிச்சுவற்றின் அடியில்- சினிமாப்பட போஸ்டர்களை கொண்டு தன்னை மூடியவாறு அமர்ந்து கொண்டிருந்த அந்த ஜீவன்- எதை பற்றிதான் அவ்வளவு நிச்சிந்தனையாக நினைத்துக்கொண்டிருன்ததோ; என்று எனக்கு ஓர் எண்ணம். அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தால், பயம்.

பயமென்ன பயம்? அந்த உயிருக்குதான் இரண்டு கை இல்லையா? கால் இல்லையா? அதுதான் பேசாதா? பிறகு என்ன பயம்? தெரியவில்லை. புறியவும் இல்லை. எதோ பயம். ஆரண்யத்தில் பயத்திர்கா பஞ்சம்? நானோ, சுயமாக சிந்திக்கக்கூடிய, பிறப்பிலிருந்தே மிருகங்களுக்கு மத்தியிலே வளர்ந்த, மிருகமாகவே வாழும் ஓர் மிருகம். இந்த ஆரண்யத்தின் பல்லாயிரக்கணக்கானமிருக வகைகளில், நானும் ஓர் வகை. ஆனால் அந்த ஆத்மாவோ- மிருகத்தன்மைதுறந்து, மனதையும் துறந்து- ப்ஹ்மதத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் ஓர் தூய ஆத்மா! பயம்தான்.

நாடு காட்டில்- நடப்பது தவிர்த்து, அந்த ஆத்மாவையே உற்றுப் பார்த்திருந்தேன். அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இந்த ஆரண்யத்தில் இருப்பது சற்றே குறைவுதான். இங்கேயுள்ள மிருகங்கள் சிந்திப்பதில்லை. அழுக்கான ஆடைகள்அணிவதில்லை. ஆடைகளின் அழுக்கையெல்லாம் உள்ளுக்குள் போட்டு பூட்டிவிடுவர் அவர். ஓர் இடத்தில் இருப்பதில்லை. ஓர் நிரந்தர இலக்கும் அவர்களுக்கு இல்லை. ஆனால் இவை எதுவும் அந்த ஆத்மாவிற்குப் பொருந்தாது!

நான் உற்றுப் பார்ப்பதை ப்ஹ்ஞானத்தின் மூலம் தெரிந்துகொண்டது போலும். அந்த ஆத்மா! திடீரென கண்ணை திறந்து பார்த்தது. சிவந்த மலரில் ஓர் கரும் வண்டு! கையில் எதையோ எடுத்து வீசுவது போன்று தோன்றியது. மிருகம் ஓடியது!

This entry was posted on 05 March, 2010 at Friday, March 05, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

14 comments

i cant seriously say 'Nice or very good writing' or anything of that sort....ok lets say, i cant say anything abt this...

9 March 2010 at 00:06

எதன் மீது இத்தனை கோபம்? உங்களின் மன மயக்கமும் சொல்லத் துடிக்கும் விஷயமும் இன்னும் கொஞ்சம் வெளிப்பட்டிருக்கலாம் எனத் தொன்றியது.

20 March 2010 at 17:50

கையில் எதையோ எடுத்து வீசுவது போன்று தோன்றியது. மிருகம் ஓடியது

ஆத்ம ஞானம் கிட்டியதா?!

20 March 2010 at 18:05

@tk...

"thanks"

20 March 2010 at 19:48

@tk...

"thanks"

20 March 2010 at 19:48

@sundarji..

i m nt angry abt anything.. just speaking abt wht is there.. gs a gives abruptness in things gives me headache.. a lil bit of skull drudgery doesnt harm any1.. abstract is the word!

20 March 2010 at 19:50
This comment has been removed by the author.
20 March 2010 at 19:51

@ rishaban..

thanks! kittiyathu!

21 March 2010 at 12:23

WOWWWW !!!! enna oru tamizh!!! me awestruck with ur language skill..both english and in tamil...chanceleenga..intha mathiri spashtamana tamizh padichi romba naalachu..aana neenga enna solavareengannu enaku purila :( romba hifi mattera iruku..but nalla tamizh padicha effect..etho tastea sapta mathiri iruku :)

26 March 2010 at 21:31

@gills...

thanks!

26 March 2010 at 21:49

என் வலைப்பதிவிற்கு வந்தமைக்கு நன்றி; என் பதிவைப் படித்ததற்காக மட்டுமில்லை.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்காக.

நல்ல எழுத்துக்கள். தொடர்ந்து த்

29 March 2010 at 08:26

...தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.

29 March 2010 at 08:28

@ ramakrishnan..

thanks!

29 March 2010 at 21:27
This comment has been removed by the author.
4 April 2010 at 13:15

Post a Comment