காலில் சக்கரமும், முதுகில் இறக்கைகளையும் அணிந்து, எந்த இடத்திலும் ஒரு நொடிக்கு மேல் அவர்கள் இருப்பவர் இலர். அவர்களின் மனமும் அவ்விடத்தில் இருப்பது கிடையாது. எதிரே நிற்பவர்களின் நிழல்- அவர்களின் கண்களில் அவ்வபோது படுவதுண்டு. "இதுவும் ஒரு வாழ்வா"? என்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு தோன்றுவதற்கு அனுமதி கிடையாது. காலத்தின் கைதிகள்.
"என் வாழ்க்கையில் இதை போல் ஒன்றை நான் கண்டதே இல்லை" என்ற வரியை உபயோகிக்காதவர்களே சற்று குறைவுதான். "அப்படி என்ன வாழ்ந்து கிழித்து விட்டீர்கள்"? என்று எனக்குக் கேட்கத் தோன்றும். வாழ்கை என்பது சின்னச் சின்ன சந்தோஷங்களின் கோர்வை- என்று சில சிந்தனையாளர்கள் கூறிக் கேட்டதுண்டு. ஒரு சின்ன சந்தோஷத்தை அடைந்த உடனேயே ஏதோ வாழ்கையின் உச்சக்கட்ட நிலையை அடைந்தவர்களை போன்ற எண்ணங்களில் மிதந்து தத்தளித்துப் போவர் சிலர்.
அவர்களைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. நம் பறக்கும் கைதிகளைப் பற்றி ஒரு சில வரிகள்...
வெளிச்சத்தைக் கண்டு, அதனால் ஈர்க்கப் பட்டு வேறு பொருளைக் காணாது- வெளிச்சத்திலேயே வாழ எண்ணி மடிந்து போகும் சிறு ஜீவன்களை நினைவு படுத்துகிறது- நம் பறக்கும் கைதிகளின் வாழ்வு. சொர்விற்கோ, சுகத்திற்கோ, துக்கத்திற்கோ, மகிழ்விற்கோ படியாத ஒரு மனித ஜாதியும் இருக்குமோ? - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம்? எந்தச் சாதனையை துரத்த இந்த பதற்றம்? கேட்கும் கேள்விகள் கேட்பவர்களேயே எதிர்நோக்கி தாக்கி நிற்க- அவர்கள் கடந்து போன பாதையில் அவர்களின் பாதச்சுவடு பதித்திருக்க நேரமில்லாது பறக்கும்- காலத்தின் கைதிகள்.
"இப்படிப்பட்ட கேள்விகளை- எங்களிடத்தில் கேட்பதற்கு உனக்கென்ன அருகதை இருக்கிறது? அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது"? என்பது போன்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு வருவதாகத் தெரியவில்லை. கேட்பவர்கள் கேட்டே நிற்க, பறக்கும் கைதிகள் பறந்தே இருக்க- கேட்பவர்கள், பறப்பவர்களின் எல்லையை அறிய ஆவல் கொண்டு கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.
அமைதியில்லா பறத்தலினால் இறகுகளும் சோர்ந்தன. சோர்ந்து போன கைதிகள் கேட்பதெல்லாம்- பருக சிறிது நீர்.
எங்கு தான் கிடைக்குமோ- அந்த நீர்? பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ? அல்லது- காலங்கள் தாண்டி- சுகங்கள் அனைத்தும் மறந்தமையால், மறத்தலின் பிழை உணர்ந்த கண்களில் மெதுவாக தோன்றி- நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போக, குளமாக தேங்கிய கண்ணீரையும் பருக இயலுமோ?
கேட்பவர்களிடம் கேட்கலாம். நீர். "ஆனால் நீர் அளிக்கக் கூலியாக விடை கொடுக்க நேரிடுமோ"? என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. "இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ?... ஏன் புரியவில்லை?..." என்று கேட்டு ஓய்ந்தார்கள்- பறக்கும் கைதிகள். கேட்பவர்களுக்கு முன்னே. கேள்விகளோடு.
கேட்பவர்களோ- "பறப்பவர்கள் அவர்கள் இலக்கை எட்டி விட்டார்கள் போலும்" - என்று எண்ணிக் கொண்டனர். "இத்தனை காலம் பறந்து- நான் சேர்ந்த இடத்திற்குத் தான் நீயும் வந்தாயா"? என்று மனதில் உள்ளூரத் தோன்றிய இறுமாப்புடன் நகையாடினார்கள்.
கேள்விகளோடு, நீர் கிட்டாமல், ஓய்ந்தார்கள்- ஒரு நொடி வாழ்ந்தவர்...
இது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, "மாதங்கி மாலி" ன்னு ஒரு post போடணும்-னு தான் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு "வல்லியசிம்ஹன்" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல "பெயர் காரணம்" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி படிக்கும் போதெல்லாம் "நாமளும் எழுதணும்" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.
Mr. X: பேரு?
நான்: மாதங்கி
Mr. X: மாதவி-யா?
நான்: மாதங்கி-மாதங்கி...
Mr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா?
நான்: மா-த-ங்-கி, sir...
அதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர்! Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல! 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.
"தில்லானா மோகனாம்பாள்" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. "என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா!
எனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம "குறிஞ்சி மலர்" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த "மாதங்கி" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு! (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம்! "நல்ல வேள" ன்னு நினைச்சுப்பேன்...)
உலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்கலாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். "சித்ரா-பௌர்ணமி", "புத்த பூர்ணிமா", "சித்ர ஸ்வாதி"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு "தோ- இருக்கேன்-இருக்கேன்" ங்கரதுகள்! எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....
சின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் "மாடங்கி" ("Mod-dong-gee") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும்! School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல "pause" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்!
நாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. "மாதன்கி" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு? "போடா-- ! எவ்வளவு ஒசத்தியான பேரு! எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ"? ன்னு அளப்பா! எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்!
Calcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது "perspective" கடைச்சுது. Perspective என்ன perspective? ஒரு புது "கோணம்" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன்! அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். "மாதங்கி" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- "மாதொங்கி"! "மாதொங்கினி" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த "தொங்கலுக்கு" முன்னாடி இந்த "தொங்கல்" எடுபடல.
ஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல "அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்" னு ஒரு பறவைய பத்தி வரும். "மாதங்கி" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறையா பேரு "D" sound use பண்ணுவா- "த" க்கு பதிலா. இல்ல "Ki" சொல்லுவா "Gi" க்கு பதிலா. "மா-த (त)-ங்-கி (गी)" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- "ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.
Blog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் "Matangi Mawley" கடைச்சுது. "Mahalingam" short-form "Mali" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் "Mali" ன்னா "தோட்டக்காரன்" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா "Mali" யோட phonetic spelling-ஆன "Mawley" use பண்ணுவா, sign பண்ண. "Mathangi" ல 'h' எடுத்துட்டு "Matangi Mawley" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.
4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. "மாதங்கி மாலி" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் "எனக்கும் எழுத தெரியறது" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...
Tag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...
MY OTHER BLOG
BEWARE

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 2.5 Generic License
About this blog
PINGBOX
I, The Writer...
Followers
Award!!

சிறந்த புதுமுகம் -- நன்றி LK

Thanks LK!- for the Goldden Man!
They make my day...
-
7 hours ago
-
2 days ago
-
2 days ago
-
1 week ago
-
1 month ago
-
3 months ago
-
6 months ago
-
1 year ago
-
4 years ago
-
4 years ago
-
4 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
5 years ago
-
6 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
7 years ago
-
8 years ago
-
8 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
9 years ago
-
10 years ago
-
10 years ago
-
11 years ago
-
11 years ago
-
13 years ago
-
13 years ago
-
-
ABOUT ME...

- Matangi Mawley
- I am a realist, wishing to be a surrealist... "Affability. Urge to sparkle. Passionate about rationalism. Appreciating all genuine achievements and wonders. Discerning all good things of life- intellectual stimulation, good music, good books, good food".