ஆ... ஆ.. அம்.. ம்..ம்..
அப்போலாம் இது சாப்படணும்னா ஒண்ணு டிவி ஓடனும், இல்ல ஏதாவது ஆடு, மாட கட்டி போட்டு வேடிக்க காட்டணும், இல்ல- கத சொல்லணும். கதையும், சும்மா "பாட்டி இருந்தா... காக்கா வந்துது"ன்னு லாம் இருக்கப்டாது. பேய், பிசாசு, ராஜகுமாரி, பூதம், மந்த்ரவாதி- இத போல சில characters அந்த கதைல கண்டிப்பா இருக்கணும். எல்லாம் அதோட பாட்டி பண்ணின வேல. இதுக்கு பேய்-பிசாசு கதையா சொல்லி சொல்லி பழக்கி விட்டுருக்கா, நன்னா! எனக்கா, கதையே சொல்ல வராது. இது அடுத்த வாய்-க்கு வாய துறக்காத "உம்... உம்..." ங்கும். நான் எங்க போவேன், கதைக்கு?
"அப்புறம் கிச்சு என்ன பண்ணித்து, டொய்ங்.... னு அந்த அஞ்சு தல பாம்பு தலேல குதிச்சுது. சோனி கிட்ட-'டேய், நீ போய் எல்லாரயும் கூட்டிண்டு வாடா'ன்னு சொல்லித்து..." ன்னே நானும் எத்தன நாள் சொல்லி ஓட்ட முடியும்? இது அப்பா நன்னா அளப்பார். செத்த இது சாப்படற வரைக்கும் ஏதாவது சொல்லுங்கோ-ன்னா ஒழியாது. நாம சொன்னாதான் கேக்கப்டாதே! ஆனா நான் office போய்டா, ரெண்டும் ஒத்துமையா plate ல சாப்பாடெல்லாம் எடுத்து வெச்சுண்டு கத பேசிண்டே சாப்டும்!
என்னென்னமோ கத! இன்னிக்கு என்னடா கத சொன்னா, உங்கப்பா? ன்னா, "நடகம்-சொக்கம்" ங்கும். அது என்ன கதையோ... "நரகத்துல என்ன இருக்கும், சொர்கத்துல என்ன இருக்கும்"- இது தான் கத. அதுலயும் "நரகம்" தான் இதோட favourite! ஏன்னா அதுல தான் பூதம், பிசாசு-லாம் வரும். "அலிபாபா..." சினிமா ல வராப்ல "எண்ண கொப்பற"லாம் வரும். இந்த கத கேட்டு-கேட்டு, அப்புறம் இந்த "முன்ஷி தோதா ராம்" னு "அமர் சித்ர கதா" ல ஒண்ணு இருக்கும். அது பிடிக்கும். அதுல பாத்தேள்னா இந்த தோதா ராம் நரகத்துல போய் அவனோட கணக்குல-லாம் fraud பண்ணறாப்ல லாம் வரும்.
"சத்யமூர்த்தி" கத தான் அடுத்த favourite. அதுல மோஹினி பிசாசெல்லாம் வரும். கொழந்தேள்- னா "ராமர்", "கிருஷ்ணர்", "தேவதை"-ன்னு ஏதாவது சொல்லணும். இது பேய்-பிசாசு கத தான் கேப்பேன்-ங்கறது! அது பாட்டி பழக்கி விட்டது, அத்தனையும். அவா ஊர் கதையெல்லாம் இப்புடி தான் 'மந்த்ரம்-மாந்த்ரீகம்'னு லாம் இருக்கும். எங்க அம்மா ஆனா- சும்மா சொல்லப்டாது. ரொம்ப நன்னா கத சொல்லுவா! பாட்டி கதையெல்லாம் வேற மாதிரி இருக்கும். காளி கோவில், பலி, தல தலையா தொங்கறது, மந்திர வாள், யந்த்ரத்துக்கு நடுப்ற கறுப்பு பொம்ம- இப்புடி இருக்கும். பேய்-பிசாசு-லாம் அப்பா. மந்த்ரமெல்லாம் பாட்டி!
"கொழந்த பயபடும், சொல்லாதேள்" னா, பேச்ச கேட்டா தானே! அது கேக்கறது-ன்னு இவரும் சொல்றாராம். நான் evening duty போனாலும் போனேன், கொழந்த ஒரு வாரமா ராத்ரிலாம் சரியாவே தூங்கல. ஒரே ஜுரம். அப்புறம் தான் விஷயம் வெளீல வருது.
"ராத்திரி 12 மணி. வெள்ள screen லாம் மெது உ உ வா ஆடறது. உனக்கு தெரியாம வரும். பெருஸ்ஸ்ஸ்ஸா இருக்கும். வெள்ள வெள்ளேர்னு இருக்கும். கருப்ப்ப்பு dress போட்டுண்டுருக்கும். இதோ இந்த இடத்துல, கழுத்துல கடிச்சு ரத்தத்த எல்லாம் உறிஞ்சிடும். அதோட முன் பல் ரெண்டுத்தோட mark மட்டும் இருக்கும், தொ- இந்த இடத்துல இருக்கும்- Draculla ..." ன்னு கத சொல்லிருக்கார் மனுஷர். இதுவும் பயந்து நடுங்கிண்டு, தூங்காம ராத்திரி முழுக்க ஜன்னல் பக்கத்ல உக்காண்டு "Draculla வருதா வருதா" ன்னு பாத்துண்டுருந்திருக்கு!
இனிமே பேய்-பிசாசு ன்னு யாராவது இந்தாத்ல சொன்னேளோ தெரியும்! பாய்-ல design பாத்தப்போவே நேக்கு ஸம்ஷயம். மருந்து மாத்தர கொடுத்து தூங்க பண்ணிருக்கு, பாவம்- இப்போதான். கொழந்தைக்கு இப்புடியா கத சொல்லுவா? Office -லேர்ந்து வரட்டும், பேசிக்கறேன்... கதையா சொல்றேள் கத...?