கார்திகை 2012  

Posted by Matangi Mawley



கார்திகை திருநாள் வாழ்த்துக்கள்!


KASAB HANGED  

Posted by Matangi Mawley

Kasab hanged: Kudos to the officials for carrying out the execution quietly, thank you President Pranab for being decisive and thank you India- finally the victims get some kind of justice!

Remembering my beloved maternal uncle, Shri. P.K. Gopalakrishnan, who lost his life on the fateful day- 26/11: Click Here

OMG : OH MY GOD  

Posted by Matangi Mawley


இன்று மதியம் Colors channel ல் "OMG : Oh My God" என்ற படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் September மாதம் வெளிவந்தது. Trailer பார்த்த உடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அப்போது அது முடியாது போனது. இந்த படம் "The Man Who Sued God" என்ற ஆங்கில மொழி படத்தையும், "Kanji Virudh (vs) Kanji" என்ற Gujrati மொழி நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு: பூகம்பத்தில் தனது கடையை இழந்த Kanji bhai, கடவுளை court க்கு அழைக்கிறார்.

பொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது ஹிந்தி/தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை "OMG : Oh My God" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் Highlight - dialogues! பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று  Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் ("உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் "?)! கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. "உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது".

Akshay Kumar, "கிருஷ்ண வாசுதேவ் யாதவ்"- அதாவது  கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் சம்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். "கிருஷ்ணா-கிருஷ்ணா"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.

நேரம் கிடைத்தல் பார்க்கவும்.

தீபாவளி வந்தாச்சு!  

Posted by Matangi Mawley


Photo ல இருப்பது தேஜஸ்வினி, நம்ம friend. எங்க தெரு-ல தீபாவளி 2 வாரமா நடந்துண்டே இருக்கு. எக்கச்சக்க அரை டிக்கெட்ஸ். இந்த தடவ எங்க வீட்டுல வெடி கொஞ்சம் கம்மி தான். பாட்டி இருந்த போது- ஒரு வீட்டுல மொத்தம் 20 பேர் இருப்பா கிட்ட தட்ட. Height order படி எல்லாரையும் காலங்காத்தால உட்கார வெச்சு தலைல எண்ண  வெச்சு விடுவா. 1 வாரம் 10 நாளைக்கு முன்னாடியே சமையல்காராள்லாம் ஜாங்கிரி, மைசூர் பாக், பாதுஷா, mixture எல்லாம் பாட்டி ஆத்து பின் புறத்துல செய்ய ஆரம்பிச்சுடுவா. நாங்க எல்லாரும் ஊருக்கு கெளம்பும் போது- 2-3 tin நிறையா தீபாவளி தின்பண்டம் கொடுத்தனுப்புவா!
Bushy தான் கொஞ்சம் restless ஆ இருக்கு. அதுக்கு வெடி சத்தம்னா ரொம்ப பயம். எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கும். தீபாவளி அன்னிக்கு அதுக்கு காலங்காத்தால சாப்பாடு போட்டுட்டு ரூம் உள்ள பூட்டி வெக்கணும்.

எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....

Kaleidoscope -இன் ஊடே  

Posted by Matangi Mawley

ஒரு மிகப் பெரிய ஜன வெள்ளத்தில் ஒரு துளி நான். கடல் அலை, மடிவதற்கு முன் மற்றும் ஒரு அலையை உருவாக்கி விட்டு மடிவது போல, நானும் உருவாக்கப் பட்டேன். என்னை உருவாக்கிய அந்த பெரும் அலைக்கு நான் யார் எனத் தெரிந்திருக்கக் கூடுமா? நான் ஜனித்த தருணம், நான் இருந்த பதத்திலிருந்து நான் ஏதொரு நிலைக்கு எடுத்துச் செல்லப் படுவேன் என்று அந்த அலைக்குத் தெரியுமா? அது எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? என் பதத்தை நான் அடைவதற்கு முன்னரே அந்த அலை கரைந்து போய் விடும். இது ஒரு வினோதமான பயணம் தான். ஒரே துளி நீரினால் ஆன இரண்டு அலைகள் எப்படி உருவத்திலும், வலுவிலும் வெவ்வேராகின்றதோ, எப்படி தனித்து பயணிக்கின்றதோ, அந்த பயணம்- ஒரு வினோதமான பயணம் தான். சரியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் இந்த பயணத்தின் போக்கு ஏதோ ஒரு பைத்திக்காரனின் கிறுக்கல் போலத்தான் அமைந்திருக்கிறது. வழிகாட்டி இல்லாது வானத்தில் பறக்கும் பறவை போல. ஆனால் அதில் கூட ஒரு திட்டம் இருக்கிறது.

சில விஷயங்களின் நடப்பிற்க்கு வேர் கிடையாது. அவை நடக்கும் . அவை நடப்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக நம்மிடம் காட்டிக் கொள்ளாது இருக்கும். ஆனால்- வேர் தெரியாத நடப்புகளின் அஸ்திவாரம், பல சமயங்களில் அந்த விஷயத்திலேயே புதைந்து கிடப்பதும் உண்மை தான். அதைத் துருவிப் பார்பதற்கு பயம். மனிதனின் மூடத் தனமான பல பயங்களில் இந்த பயமும் ஒன்று. தன்னுள் பார்க்க பயம். தன்னைக் கண்டு பயம். தன்னுள் தானே ஒளித்து  வைத்திருக்கும் பல விஷயங்களினால் தான் உருவானதை எண்ணி பயம்.

ஆனால் இந்த வாதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது மனிதனின் மனப் போக்கு. பல சமயங்களில் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு எந்த விதமான அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. மொசைக் தரையில் சிதறித் தெளிக்கப்பட்டிருக்கும் அர்த்தமில்லாத வண்ணத் துகள்களைப் போல. ஆனால்- kaleidoscope உம் கூடத்தான் அர்த்தமில்லாத உடைந்து போன கண்ணாடித் துண்டுகளால் ஆனது. அதில் மட்டும் அழகான வடிவங்கள் எப்படித் தெரிகிறது?  எண்ணங்களையும்  kaleidoscope ல் பார்க்க முடியுமேயானால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அழகு மட்டும் கொண்டது கிடையாதே- இந்த எண்ணங்கள்! அழகாக இல்லாத எண்ணங்களை பார்க்க வழி? கட்டிடப் பணியில் கரகரப்பான cement கலவையை நீளமான குச்சியைக் கொண்டு சீர் படுத்தும் அதே சமயம்- பாலைவன மணலின் நெளிவுகள் பிடிக்காத ஒரு பாம்பு, தான் மணலில் நெளிந்து மணலின் நெளிவை தன்னுடையதாக மாற்றி அழகு பார்த்தது. மனிதனின் தன்மையும் அந்த பாம்பைப் போலத்தான். கோணல் எண்ணங்களையும் ஞாயப் படுத்தி அழகு பார்ப்பது அவன் வழக்கம்.

கோணல்-நேர் என்று யார் பிரிப்பது? அவரவர் பார்வையைப் பொறுத்தது, இந்த எண்ணங்கள். ஒருவேளை இதனால் தான் எண்ணங்கள் ஒருவருடையதாக மட்டுமே இருக்கிறதோ என்னவோ! ஒரு மனிதனின் செயலுக்கு, அவனது எண்ணங்கள் தான் உந்துதல் என்றாலும்- எண்ணங்களுக்கு அந்த செயலின் பலனினால் தாக்கம் ஏற்படுமா? எண்ணம் தான் தோன்றியவுடனே மறைந்து விடுமே? எப்படித் தாக்கம் ஏற்படும்? Science Fiction கதையைப் போல- ஒரு  எண்ணம் யோசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் பலனும், மருந்து bottle களில் வரும் "குறிப்பைப்" போல, தோன்றிவிட்டால்? மனித அறிவின் வரையறை இதை சாத்தியமாக்காது. அதற்க்கு ஒரு யந்திரம் செய்துவிட்டால்? யந்திரன்களால் மனிதனின் எண்ணங்களோடு போட்டி போட முடியாது. எத்தனை உன்னதமான விஷயம்- எண்ணம்!

புத்திக்கும், மனதிற்கும் நடுவில் உலவும் எண்ணங்கள்- ஒரு மனிதனின் அடையாளத்தை தன்னுள் புதைத்து வைத்துக்கொண்டும், அவ்வபோது மனதின் ரகசியங்களை புத்தியினிடமிருந்து மறைத்துக்கொண்டும் வேகமாக பறந்து கொண்டிருக்கிறது! எந்த தருணத்தில் அதை நிறுத்தினால் எப்படிப்பட்ட நிலையில் அது இருக்குமோ- என்று அதனை நினைக்கும் மனிதனுக்கும் தெரியாது! அவனுக்கும் தெரியாமல்- அவனைப் பற்றிய ரகசியங்களை அது எங்கே எடுத்துச் செல்கிறது...?