அத்தி  

Posted by Matangi Mawley


"...அக்காவுக்கு வரிசையா தங்கைகள். அவா எல்லாரும் அக்காவாத்துல தான் வளருவா. So, அவா எல்லாரும் 'அத்திம்பேர்'- 'அத்தி'-'அத்தி' ன்னு கூப்டுவா. அதனால தெரு முழுசுக்கும் அவர் "அத்தி". எங்க அப்பாவுக்கும் 'அத்தி', எனக்கும் 'அத்தி'.!..."

அப்பா எனக்கு எப்படி ஒரு 'Idol'ஓ- அது போல 'அத்தி'- அப்பாவினுடைய 'Idol'. அப்பா அத்தியைப் பற்றி பேசாத நாளே கிடையாது. அவர் சாப்பிடும் பெரிய வெள்ளித்  தட்டு முதல்- நெற்றியின்  கோபி சந்தனம் வரை, எல்லாமே அத்தியின் ப்ரபாவம் தான்... நான் அத்தியைப் பார்த்தது கிடையாது. பார்க்காத ஒன்றினைப் பற்றிய கதைகளில் தான் சுவை அதிகம்- என்பது எனது கருத்து. கற்பனையில் அத்திக்கு ஒரு உருவம் கொடுத்து, அப்பாவின் வர்ணனைகளிற்கேர்ப்ப- அந்த உருவத்திற்க்கு ஒரு தன்மை கொடுத்திருப்பேன்- சிறு வயதில். அவரைப் பற்றி கதைகள் கேட்கும் பொழுது. இன்று அப்பா- அத்தியின் ஒரே ஒரு புகைப்படம் எங்கோ இருப்பதாகச் சொன்னார். அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்- பார்க்க வேண்டாம் என்று தான் தோன்றுகிறது.

"...Very practical man, அத்தி. யாரோ ஒருத்தர் ஆத்துக்கு ஒரு தடவ போனவர். அவருக்கு letter எழுதணும். 'Bus stand பக்கம் ஸ்ரீனிவாசன் தெரு.  பச்சை கேட் வீட்டிற்கு பக்கத்து வீடு'ன்னு address எழுதுவார். கேட்டா 'post man க்கு வீடு தெரியணும்- அவ்வளவுதானேடா'- அப்டீம்பார். அக்காவோட மாமா வக்கீல் குமாஸ்தாவா இருந்தார். அப்பல்லாம் 'வக்கீல் குமாஸ்தா' ன்னா ரொம்ப ஒசத்தி. எதோ 'point எடுத்து கொடுத்தார்- Justice Wallace ஏ பாராட்டினாராம்' ன்னு எல்லாம் சொல்லுவா... அவருக்கு பேனா லேர்ந்து ink எல்லாம் ஒழுகி கையெல்லாம் மையா இருக்கும்--  அப்பல்லாம் எல்லா பேனாவும் அப்படிதான் ஒழுகும்.  --அத்தி சொல்லுவார்- 'நீங்க சம்பாதிக்கறதே பேனாவினால தான். நல்லதா வெச்சிக்கக் கூடாதோ'- அப்டீன்னு. ஒரு film- - photo film ஒண்ண  எடுத்து- அவர் பேனாவோட கழுத்துக்கு கீழ சொருகி ஒழுகாத படி பண்ணிக் கொடுத்தார், அத்தி. தந்தி அனுப்பணும்னா 8 வார்த்தைக்கு முக்கால் ரூபான்னா 12 வார்த்தைக்கு ஒரு ரூபாய் ரெண்டு அணா-ன்னு correct ஆ பணம் எடுத்து வெச்சிப்பார்".

"சனிக்கிழமையானா தலைலேர்ந்து கால் வரைக்கும் எண்ணைய தடவிண்டு, ஒரு கோமணத்தையும் கட்டிண்டு வசல்லேர்ந்து கொல்ல வரைக்கும், குறுக்கையும் நெடுக்கயுமா அலைஞ்சுண்டு இருப்பார். அது ஒரு மணி நேரம் ஊரணும். அத சொல்லறதில்ல அப்படி... ஆனா 'எண்ண உள்ள போய்ட போறதோ.?.. இதுகள் சொன்னா கேட்கரதில்ல- ஜடம்' அப்டீன்னு மாமிய- அக்காவ திட்டிண்டே  உலாத்திண்டு இருப்பார். அக்கா அதெல்லாம் கண்டுக்க மாட்டா... 'கிடக்கு போ...' அப்டீன்னுட்டு எண்ணைய காச்சி வெச்சுடுவா.. தேச்சிண்டு ஆகணும்... கொல்லைல ஒரு தொட்டி நிறையா வெந்நீர் போட்டு வெச்சிருப்பார். நன்னா குளிப்பார். க்லுப்தமா சனிக்கிழமை எண்ண தேச்சுப்பார். ஆனா தனக்கு இஷ்டமில்லைன்னாலும் ஏதோ மாமி சொல்றதுக்காக தேச்சிக்கராப்ல பாவலா பண்ணிப்பார்!"

"..குழந்தைகளோட  குழந்தையா  நன்னா  ஈடு  கொடுப்பார்.. Encourage  பண்ணுவார். கிணறு முழுகரவன பார்த்து நானும் கிணறு  முழுக .. இவர் தான் எனக்கு support. அவாத்து கிணறு ரொம்ப famous. 'ஒரு ஆள் ஆழம்' ன்னு சொல்லுவா. ரெண்டு-மூணு  தெரு ல - இருக்கிற எல்லாரும் இந்த கிணற்றிலிருந்து தான் குடிநீர் எடுத்துண்டு போவா. நான்   practice-காக முழுகும் போது ,எங்க அம்மா வந்தான்னா.. 'அம்மா வரா டோய்'... ன்னு warning கொடுப்பார் ! சின்ன  பசங்க  மாதிரியே .! அம்மா பாத்துடுவா. என்ன பண்ணறது? இந்த அப்பாவுக்கு தெரியாம cigarette பிடிச்சா- வாய்ல இருக்கற புகைய வெளீல விட்டு தானே ஆகணும்... அத மாதிரி தான். எங்க அம்மா அவர indirect ஆ திட்டுவா. 'குழந்தைகள் இருந்தா தானே குழந்த அருமை தெரியும்'ன்னு. (அவளுக்குத்தெரிந்தது  அவ்வளவுதான்). என் handwriting அப்போலேர்ந்தே மோசமா தான் இருக்கும். அத்தி 'உன் handwriting இவ்வளவு மோசமா இருக்கேடா' அப்டீம்பார்... எங்க அம்மா உடனே- 'எல்லாம் தலையெழுத்து நன்னா இருந்தா போரும்'- அப்டீம்பா".

"அத்தி, பக்கா Rationalist. ஆனா அவருடைய இந்த முகம் எல்லாருக்கும் தெரியாது... For example, 'குழந்தைகுட்டி -இல்லாத பால்ய-விதவை -னா  அவளுக்கு புனர் -விவாஹம்  பண்ணி வக்கர்து  தான் சரி'- ன்னு  என்கிட்ட ஒரு private - conversation போது அத்தி  சொல்லிருக்கா... அதே போல  அத்திக்கு 'பக்தி-பைத்தியம் ' கிடையாது.. எங்க ஊர் பெரிய கோவிலுக்கு தினமும் போறவா உண்டு. கோவில்ல உற்சவத்தின் போது ஒரு நாள் அத்தியோட உபன்யாசம் நடக்கும். அன்னிக்கு  கோவிலுக்குப் போரதோட சரி. மீதி நாட்கள்ளாம் போகமாட்டார். 'அதே சிலையை தினம் தினம் பாக்க என்ன இருக்கு? மார்கழி மாத குளிரில் லொக்கு லொக்கு ன்னு இருமிண்டு போய் (விச்வ  ரூப)தரிசனம் பண்ணிட்டு, பெருமாளுடைய கல்லிழைத்த மாங்கா  மாலையை பாத்தியோடி -ன்னுதான் பேசுங்கள் ( ! )' ..என்று  பாமர பக்தியை விவரிப்பார். எங்க அம்மா சொல்லுவா, அவர பத்தி- 'படிக்கறது ராமாயணம்-இடிக்கறது பெருமா கொவில'ன்னு".

 "அத்திக்கு சம்பாத்தியமே இராமாயண ப்ரவசனம் தான். Sanskrit வாத்தியாரா இருந்து retire ஆனார். Finlay School ஓ- ஒரு school ல. 9:20 க்கு கார்த்தால டான்னு கிளம்புவார். Speed ஆ நடப்பார். "காந்தி" சினிமா ல Dandi யாத்ர போது அவர் நடப்பாரே- அத மாதிரி".

"உங்க ஊர்ல  எப்படி 'சேர்த்தி' உத்சவமோ அதுக்கு equivalent எங்க ஊர்ல 'ஏக சிம்மாசனம்'. அதுக்கு 'couple' ஆ கோவிலுக்கு போணும்னு ஒண்ணு உண்டு. எங்க அம்மா கூட எங்க அப்பாவ கெஞ்சி- அவர அழைச்சிண்டு போக சொல்லுவா. எங்க அப்பாவோட சட்டைய சுருட்டி கைல வெச்சிண்டு அவர் பின்னாலேயே நடந்து போவா, என் அம்மா. அப்பா- அங்கவஸ்திரம் போட்டுண்டு கொவில்லேர்ந்து கிளம்பும்போது அம்மா கிட்டேர்ந்து shirt அ வாங்கி மாட்டிண்டு office க்கு போவார். அத்தி அதெல்லாம் எதுக்கும் போக மாட்டார். பெரியவர் ஒரு குருக்கள் ஊர்ல இல்ல. சின்ன பையன்- அவன்தான் பிள்ளையாருக்கு பூஜ பண்ணனும். பிள்ளையாரோட வேஷ்டி அங்க சன்னதிக்குள்ள காயும். அத எம்பி எடுக்கப் போய் பையன் விழுந்துட்டான். 'பிள்ளையார் மேலேயே ஏறி எடுக்க வேண்டியதுதானேடா...'- அப்டீம்பார்".

"... 'ரகு +உத்தமன்'- ரகூத்தமன் ன்னு சொல்லணும்டா... ரகோத்தமனில்லை... ன்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறான் பாரு.. மாத்வனோல்யோ... அது அவ்வளவுதான்...' அப்டீம்பார். அதே போல ஸ்த்ரீ ஜனங்களுக்கும் intellectual flowering ஏற்படலாம்- அப்டீங்கரதுலயும் நம்பிக்கை கிடையாது அவருக்கு.... 'அதுகளுக்கு என்ன தெரியும்' அப்டீம்பார்! However disturbing may this argument be to you- but  you know, male chauvinism is after all part of our traditional intellectualism"!

"அத்தியோட உபன்யாசத்துக்கு  poster லாம் நான் தான் எழுதுவேன். Carbon paper வெச்சி அழுத்தி- ரெண்டு மூணு copy வராப்ல எழுதி- சாத பருக்கைய வெச்சு- தெருல அங்கங்க நான் தான் போய் ஓட்டிட்டு வருவேன். இத மாதிரி 'மஹாலிங்க ஸாஸ்த்ரிகளுடைய "வால்மிகி ராமாயணம்"- உபன்யாசம்..." ன்னு இருக்கும்- அந்த notice ல. அவர் பேரு மஹாலிங்க ஸாஸ்த்ரி. இராமாயண ப்ரவசனம் பண்ணரதுனால அவர் பேரே 'இராமாயண ஸாஸ்த்ரிகள்' ன்னு ஆயுடுத்து. 'ராமாய ராம பத்ராய..' அந்த ஸ்லோகம் தான் notice ல மேல எழுதியிருக்கும். 'வால்மிகி ராமாயணம்'- அதுலையும் ஒரு விஷயம் இருக்கு. அப்போலாம் சிவானந்த விஜயலக்ஷ்மி, எம்பார்- இவாள்லாம் ரொம்ப famous. சிவானந்த விஜயலட்சுமி ங்கரவா "த்ரிவேணி ராமாயணம்" ன்னு சொல்லுவா. 'கம்பர்-வால்மிகி-துளசிதாஸ்'- மூணு போரையும் compare பண்ணி சொல்லுவா. அவா குரலும் ரொம்ப நன்னா இருக்கும்- பாக்கவும் அழகா இருப்பா- அலை மோதும் கூட்டம். அக்கா கூட அத்திகிட்ட சொல்லுவா. 'நீங்களும் இந்த திருக்குறள்- கம்பர போல எதையாவது படிச்சுட்டு ப்ரவசனத்துல சேத்துக்கலாமோன்னோ' அப்டீம்பா. அவருக்கு திருக்குறள் லாம் ஒண்ணுமே தெரியாது. அவர் சொல்லுவார் அக்கா கிட்ட- 'இதுல -வால்மீகி -ல இல்லாத அழகா? இதுலேர்ந்து மீண்டு வர முடியாது... இத முடிச்சுட்டுன்னா நீ இன்னும் ஒண்ணுத்துக்கு போகணும்...' அப்டீம்பார்... ஒரு தடவ அப்பு sir உம் இவருமா 'ப்ரதி ஸ்லோக ராமாயணம்' சொன்னா... அதாவது ஒவ்வொரு ஸ்லோகமும் சொல்லுவா. 1 1/2--2 வருஷமா சொன்னா".

"காலம்பர  நின்னுண்டு சந்தன கல்லுல சந்தனம் அரைப்பார். அப்போ 'ஹரே ராம',- ன்னுசொல்லிண்டே அரைப்பார். அப்போலாம் எனக்கு கொஞ்சமும் ராகமெல்லாம் தெரியாது. ஆனா நான் அவர் கிட்ட 'கல்யாணி ல சொல்லுங்கோ அத்தி... மோஹனத்துல சொல்லுங்கோ...'ன்னு சொல்லுவேன். அவர் அதுக்கேத்தாப்ல ராகத்த மாத்துவார். குரல் ரொம்ப நன்னா இருக்கும்".

"அத்தி ராமாயணம் சொல்ல போறப்போ ஒரு குதிர வண்டியோ மாட்டு வண்டியோ வரும். நானும் போவேன் அவர் கூட. பாதி உபஞாசத்துல stage பின்னாடி போய் படுத்து தூங்கிடுவேன்... முடிஞ்சப்ரம் 'வாடா மாலி'ன்னு என்ன எழுப்பி அழச்சுண்டு போவா. சில சமயம் வெளியூரெல்லாம் போவார். சப்தாஹம்-நவாஹம் ன்னுலாம் அங்கேயே இருப்பார். அவா நடத்தரவா- நறையா வேஷ்டி, புடவையெல்லாம் கொடுப்பா. கணையாழி கொடுப்பா. தங்கத்துல ஒரு chain கொடுப்பா. அக்கா எல்லாத்தையும் பீரோ ல வைச்சுப்பா. அக்கா தான் செலவெல்லாம் பாத்துப்பா... 'நீ பாட்டுக்கு செலவு பண்ணறியே- நான் retire ஆயாச்சு தெரியுமோ'- அப்டீம்பார் அத்தி. 'அதான் நீங்க அதுக்கப்றம் நன்னா சம்பாதிக்கறேளே...' அப்டீம்பா, அக்கா. ஒரு Magistrate- அத்தியோட friend. அவர் தான் "Financial Assistance to Eminent Sanskrit Scholars" ன்னு ஒரு central government scheme ஏதோ இருக்குன்னு சொல்லி, அதுலேர்ந்து அத்திக்கு pension வராப்ல ஏற்பாடு பண்ணி கொடுத்தார். அத்தி போனதுக்கப்றம் அக்காவுக்கும் அது வந்துண்டு இருந்துது".

"1976-80 குள்ள எப்போயோ தான் அத்தி போனார். 82 வயசுக்கு மேல இருக்கும் அப்போ அவருக்கு. நான் வேலைக்கு போனதுக்கப்றம் வருஷா வருஷம் ராம நவமிக்கு அவருக்கு 10 ரூபாய் money order அனுப்புவேன். ஒரு தடவ நான் பெரியவனா வேலைல இருக்கும் போது அவர பாக்க போயிருந்தேன். படுத்த படுக்கையா இருந்தார். 'நம்ப மாலி வந்திருக்கானே'- அப்டீன்னார்"...

"அவாத்திலையே தான் எப்போபாரு நான் சின்ன வயசில இருப்பேன். அத்தி சாப்டும் போதெல்லாம் நான் உக்காந்து எதாவது பேசிண்டே இருப்பேன். அப்படியெல்லாம் இன்னொருத்தர் ஆத்துக்கு போகக்கூடாது-சாப்டும்போது இருக்கக்கூடாது அப்டீன்னு எல்லாம் தெரியவே தெரியாது எனக்கு. அவாளும் ஏதோ ஒரு குழந்த நம்பாத்துலேயே இருக்கே ன்னு நான் அங்க இருந்தத விகல்பமா நினைக்கல... அது ஒரு காலம்...".

அப்பா-அம்மா வின் சின்ன சின்ன சம்பாஷணைகளை கூட கவனிக்க முடியாத- கவனிக்க சமயமில்லாத இன்றைய காலத்தில்- அப்பா-அம்மாவையும் தாண்டி ஒருவரின் ப்ரபாவம்  அந்த சிறு வயதில் என் அப்பாவிற்கு கிடைத்தது. அத்தியின் தாக்கம்- அப்பவிர்க்கு மட்டுமல்ல, அப்பாவின் மூலமாக எனக்கும் தான்... உரு இல்லாத அவரது முகம். அதை உன்னிப்பாக கவனித்தால், அதில் தெரிவது என் அப்பாவாக இருக்கலாமோ...?

Bushy க்ரஹப்ரவேசம் : EPISODE 8  

Posted by Matangi Mawley


இப்போதான் நடந்தாப்ல இருக்கு. பாத்தா வருஷம் ஓடிடுத்து! ஆச்சு- மூணு வயசாயாச்சு Bushy-க்கு! துப்பாண்டி தான் எங்காத்துக்கு முதல்ல வந்துது. Bushy ய அப்றமா அது தான் அழச்சுண்டு வந்துது. ரெண்டு ஈத்துல- நாலு குட்டியும் போட்டுடுத்து பாவம் Bushy. 2012 April மாசம் துப்பாண்டி எங்கேயோ ஓடி போனது தான். அப்புறம் ஆளையே காணும்... Bushy க்கு தான் ஒரே கவலை. ஆனா துப்பாண்டி போனப்றம்- எங்காத்தையே அதோடதாக்கிண்டுடுத்து இந்த Bushy. அதோட ஒயிலென்ன... ஒய்யாரமென்ன... இந்த புது ஆத்துல- தெருல இருக்கற அரை ticket எல்லாம் எங்க Bushy யோட fans! ஆனா இந்த புது ஆத்துக்கு  கொண்டுவர நாங்க பட்ட பாடிருக்கே....

போன 2012 ஜூன் மாசம் வீட மாத்தினோம். Bushy க்காகவே flats வேண்டாம்-ன்னு தனி வீடா பாத்திருந்தோம். வீட மாத்தணும்னு பேசிண்டு இருக்கும்போதே Bushy ய என்ன பண்ணலாம் னு  தான் எங்க எல்லாருக்குமே யோசனையா போச்சு. Bushy ய நாம எங்க போறோமோ அங்க அழைச்சிண்டு போணும் னு- இது சொல்லிடுத்து. Bushy என்ன நாயா? பூனையலாம் அவ்வளோ easy யா இடத்த மாத்த வைக்க முடியுமா? அது எந்த இடத்துல பழகித்தோ அங்கேயே தான் இருக்கும். சொன்னா கேக்கவே மாட்டேங்கறது.

  
ஆனா பாவம்-- Bushy க்கு இப்போ துணைக்கு துப்பாண்டியும் இல்ல. தெரு-ல
விட்டுட்டு போனா சாப்பாட்டுக்கு எத்தன கஷ்ட படுமோ! அதுவும் இந்த sterilization operation பண்ணினதுலேர்ந்து அதோட 'புளியங்கொட்டை' cat feed அ தவிர வேற எதையுமே அது சாப்ட்ரதில்லை வேற. அதுவும் இல்லாம அந்த area தெரு பூனைகளெல்லாம் வேற அத வந்து சீண்டும். அதையும் கூட்டிண்டு புது ஆத்துக்கு போகலாம்ன்னு decide பண்ணியாச்சு.

ஆனா- பொட்டி படுக்கையெல்லாம் மூட்ட கட்டும் போது, Bushy க்கு ஒரே பயம். எல்லா அட்டை டப்பாவையும் பாக்கறது. பீரோக்குள்ள லாம் போய் என்னத்தையோ தேடறது. ரொம்ப uncomfortable/tensed ஆ feel பண்ண ஆரம்பிச்சுடுத்து. இது உடனே internet ல - "Behavioral changes in  cats" ன்னு லாம் தேடி பாத்து- அதுக்கு என்ன பண்ணனும்-னு லாம் பாத்துது. ஒண்ணும் பலிக்கல. நாங்க வீட்ட விட்டு களம்பும்போது Bushy ய  ஒரு பை-ல போட்டு எடுத்துண்டு போலாம்னு plan பண்ணினோம். கிளம்பற நேரத்துக்கு ஆளையே காணும். கூப்படறோம், கூப்படறோம்- கிட்டயே வர மாட்டேன்னுடுத்து. ஒரு மூலைலேர்ந்து எங்கள பாத்துண்டே இருந்துது. "என்ன மட்டும் இங்க விட்டுட்டு நீங்கள்லாம் போறேளே... என்ன யார் பாத்துப்பா"? ன்னு கேக்கறாப்ல இருந்துது, அது பார்வை... ஒரு பயம் அது முகத்துல. எங்களுக்கா- அழுகையா வருது! அத எப்படி எங்க கிட்ட வர வைக்கறதுன்னே தெரியல. அக்கம் பக்கத்துக் காராள்லாம் அத அப்பறமா வந்து கூட்டிண்டு போங்கோன்னா... ஒரு டப்பால அதோட சாப்பாட கொஞ்சம் போட்டு, பக்கத்தாத்து மாமி கிட்ட குடுத்து அது கேக்கும் பொது கொஞ்சம் போட சொல்லிட்டு- நாங்க கிளம்பினோம்.


புது ஆத்துக்கு வந்தப்றம்- கொஞ்சம் சாமானெல்லாம் அடுக்கி வச்சிட்டு Bushy ய கூட்டிண்டு வரலாம்ன்னு plan பண்ணினோம். ஏன்னா அது இந்த suitcase, box எல்லாம் பாத்து தான் பயப்பட்டுது. மறுபடியும் அதே போல சூழல் ல அது
எப்படி feel பண்ணுமோ! நாங்க shift பண்ணி ஒரு வாரம் கழிச்சு இவரும், இதுவுமா  பழையாத்துக்கு போனா. Bushy ய கூப்டு பாத்தாளாம். அது வந்துதாம். சாப்டுதாம். இவா தடவி குடுத்தாளாம். அத தூக்கி பைக்குள்ள போடப்போரான்ன ஒடனே எடுத்தாங்கட்டைன்னு ஓட்டமா ஓடி பொயிடுத்தாம்! பக்கத்தாத்து மதில் மேல உக்காந்துண்டு பாத்துண்டே இருந்துதாம். எப்போதுமே அது தொடப்பத்த எடுத்து பெருக்கினா வரும். அந்த தொடப்பத்தால அத தடவி விடச்சொல்லும். இது அங்க இருந்த ஒரு தொடப்பத்த எடுத்து Bushy கிட்ட காட்டித்தாம். மதில் மேலேயே நின்னுண்டு "வெளக்கமாறு பூஜை" எல்லாம் வாங்கிண்டுதாம். ஆனா கூட வர மாட்டேன்னுடுத்தாம்.

கிட்டத் திட்ட ஒரு 42 நாள் ஆகியிருக்கும். 4-5 தடவ மாத்தி மாத்தி போய் அத அழைச்சுண்டு வர try பண்ணிப் பாத்தாச்சு. வர மாட்டேன்-ன்னு வீம்பு பண்ணினா நாம என்ன பண்ண முடியும்? பக்கத்தாத்து மாமியும் எத்தன நாளைக்கு தான் சாப்பாடு போடுவா? பசி ல காஞ்சு போய், கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு போய், சோர்ந்து போய் இருந்துதாம். அன்னிக்கு இவா ரெண்டு பேரும் போய் அத கூப்ட போது அதுக்கு நடக்க கூட த்ராணியில்லையாம்! மெதுவா வந்துதாம். ஆகாரம் போட்டாளாம். சாப்டுதாம். எத்தன நாளா பட்டினியோ-பாவம்... சாப்டு முடிச்ச கையோட அத தூக்கி bag ல போட்டாளாம். கைய தள்ளி விட்டுட்டு ஓட கூட தெம்பில்லை அதுக்கு. "சரி. இவா கூடையே போயிடலாம்" ன்னு அதுக்கே எண்ணம் இருந்திருக்குமோ என்னவோ...

புது ஆத்துக்கு கூட்டிண்டு வந்தாச்சு. இது, முனாடியே- பூனைய இடம் மாத்தினா என்னல்லாம் precautions எடுத்துக்கணும்னு internet ல படிச்சு வெச்சிருந்துது. 10-15 நாளைக்கு அத வெளீலையெ விடப்டாது. ஆத்துக்குள்ளையே வெச்சிருக்கணும். Bathroom உம் "litter training" பண்ணி
ஆத்துக்குள்ளையே போக வைக்கணும் னு போட்டுருந்துதாம்-net ல. Bushy ய கொண்டு வந்து ஒரு room ல வச்சாச்சு. பைக்குள்ளேர்ந்து மெதுவ்வ்..வா வெளீல வந்துது. எங்கள எல்லாம் அடையாளம் கண்டுண்டுது. அந்த பயம் போகல இன்னும்! Room அ எல்லாம் நோட்டம் விட்டுது. எத்தன நேரம் ஒரே இடத்துல அடைச்சு வைக்கறது- பாவம்! Room கதவ திறந்த ஒடனே மெதுவா வீடு முழுக்க எல்லா இடத்துக்கும் போய் மோந்து பாத்துண்டுது. நன்னா சாப்டுது. எத்தன நாளா பசியோ- பாவம்... சமயகட்டுல cylinder க்கு பின்னாடி ஒரு இடுக்குல போய் படுத்துண்டுடுத்து, சோர்ந்து போய்!

அன்னிக்கு ராத்திரி- அதுக்கு பாத்ரூம் போக எல்லாம் ஏற்பாடெல்லாம் பண்ணினா இவா ரெண்டு பெரும். அதுக்கு பிடிக்கல. சரி- வெளீல கொண்டு போய் விட்டு பாக்கலாம்-ன்னு வெளீல கூட்டிண்டு போனா- அவ்வளவுதான். எங்க போச்சுன்னே தெரியல! Bushy...Bushy ன்னு கூப்டு பாக்கறா. தெரு ல இருக்கரவாள்லாம் வெளீல வந்து வெடிக்க பாக்கறா... இத கூட்டிண்டு வந்திருக்கக் கூடாதோ. At least அதுவான்னா அது பழகின இடம். புது இடத்துல இது எப்புடி இருக்குமோன்னுலாம் ஒரே கவலை. அடுத்த நாள் முழுக்க ஆளையே காணும்! அப்பரமா இவர் மொட்ட மாடிக்கு போய் பாத்துட்டு- parapet ல தான் படுத்துண்டு இருக்குன்னு சொன்னப்ரம் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துது. அன்னிக்கு சாயங்காலம் வந்து நன்னா சாப்டுது. ஒரு வாரமாச்சு- settle ஆக.

இதுக்கு நடுவுல- "ஒரு புது girl பூனை வந்திருக்கு"ங்கற விஷயம் இந்த area ல இருக்கற மத்த பூனைகளுக்கெல்லாம் தெரிஞ்சுடுத்து. இது இங்க வந்த மூணாவது நாள்- எங்காத்து வராண்டாவுல ரெண்டு மஸ்தான் பூனைகளுக்குள்ள ஒரே சண்டை. அக்கம் பக்கத்ல இருக்கரவாள் -லாம் வேற- புதுசா வந்திருக்கரவா வீட்டு பூனை தான் சத்தம் போடறதுன்னு complaint பண்ண ஆரம்பிச்சுட்டா. Bushy வாயே தெறக்கல- ன்னு அவாளுக்கெல்லாம்
சொல்லறதுக்குள்ள போறும்-போறும் ன்னு ஆயுடுத்து!


ஒரு "இஞ்சி color" பூனை ஒண்ணுத்த Bushy friend புடிச்சுண்டுது. அது இது கூட இருந்தா இந்த மஸ்தான் பூனைகளெல்லாம் வராதுன்னு நினைச்சுதோ என்னவோ... எப்படியோ! ஒரு வழியா பழைய Bushy யா மாறிடுத்து... ஆனா- இப்பயும் அதோட குட்டிகள video எடுத்தத போட்டு பாக்கும் போது- அதுகள் கத்தர சத்தம் கேட்டா தேடிண்டு ஓடி வரும்... சுத்தி-முத்தி பாக்கும்... பழைய வீட்டையும், துப்பாண்டியையும், அதோட குட்டிகளையும் நினைச்சுக்குமோ என்னவோ...  


The Story so far... Episodes: 1 ... 2 ... 3 ... 4 ... 5 ... 6 ... 7  (Click on the numbers to read the post)

DAMINI  

Posted by Matangi Mawley

A meeting was organised, to discuss "Women's Rights".


The netas attended the meeting but few had anything to say. Suddenly, one of them thought of something "intelligent" to say and came up with a plan to cover up the "dented and painted" women with "over-coats".

"Let's forbid them to speak with the boys".

"Let's ban skirts for school girls".

"Let's stop women from going out on the streets after 6 pm"- another said.

"Let's enact a 'Nirbhaya Act'...", one said.

“Clever plan”! A few shouted.

“Wait-wait”, said a spiritual guru. “We need to teach them Indian culture”, he said.

The politicians had not thought of that earlier. So they invited the Swami to their meeting.

“We need to ask the girls to address the rapists as ‘brothers’..” said the Swami. “She needs to fall at his feet and plead for mercy”, he said. “She must chant Saraswathi mantra”, he said.

Politicians were mesmerized with this Swamiji. They lauded him.

“A woman is bound by contract to serve her husband” said a neta.

“A woman”, another said “shouldn’t talk back at men. Shouldn’t stay out at night or wear clothes- that are inappropriate”.

As they spoke, reports are in, that say: Girls/Women raped. Aged: 2 yrs old, 5 yrs old, 6 yrs old, 10 yrs old, 15 yrs old, 16 yrs old, 23 yrs old, 29 yrs old, 33 yrs old, 40 yrs old, 45 yrs old....70 yrs old, 75 yrs old...

Damini: As she breathed her last, a nation lay exposed.

ஸுஹ்ருதம் ஸர்வ பூதானாம்  

Posted by Matangi Mawley



அப்பா: ச! இனிப்பெல்லாம் ஒரே எறும்பு...

அம்மா: பாவம்... பசி அதுகளுக்கு...

"தலாஷ்"  

Posted by Matangi Mawley


"தலாஷ்" சினிமா பார்க்க போயிருந்தோம். அப்பாவிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம். ஏனென்றால் அது "பேய்"/"பிசாசு" போன்ற விஷயங்கள் பற்றிய படமாம். இருந்தால் என்ன? இவ்வளவு சின்ன விஷயத்தினால் படம் எப்படி பிடிக்காமல் போகும்? எனக்கு "பேய்","பிசாசு" போன்ற விஷயங்கள் நிறைந்த கதைகள் மிகவும் பிடிக்கும். என்னுடைய சீது பாட்டி தான் அதற்க்குக் காரணம். எவ்வளவு அழகாக கதை சொல்லுவாள் தெரியுமா? மந்திர மாந்த்ரீகங்கள் நிறைந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்ததனாலோ என்னவோ- அவள் சொல்லும்போதே காட்சிகள் நம் மனக் கண் முன் உண்மை நிகழ்வுகளாக ஓடிக்கொண்டிருக்கும். சில சமயங்களில் கேட்பவர்களை பிரமிக்க வைக்கும், பாட்டியின் கதை சொல்லும் விதம்!

"தலாஷ்"- ஆனால் "பேய் கதை" என்ற அளவோடு இல்லாமல்- மனிதனின் மனப்போக்கு, எண்ணங்களில் கைதியாகிவிட்ட மனம், கடந்த கால நினைவுகளை மாற்ற முயற்சிக்கும் எண்ணங்கள் என்று ஆழமான இரண்டாவது கதைக்கருவையும் கொண்ட படம். Amir Khan மற்றும் Rani Mukherji, இருவருமே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். Farhaan Akhtar க்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள், அவரது வசனங்களுக்காக. மிகவும் நிதானமாக பிரயாணிக்கும் "தலாஷ்" படத்தின் கதை, எந்த நேரத்திலும் அதன் கருவிலிருந்து விலகாமல் இருப்பதுதான் அந்த படத்தின் விசேஷம்.

இந்த பதிவை "திரை விமர்சனம்" என்று சொல்ல முடியாது. ஒரு விதத்தில், "தலாஷ்" சீது பாட்டியை நினைவு படுத்தியது. அவளது ஒரு சில மிகவும் அருமையான கதைகளை மீண்டும் ஞாபகப் படுத்தியது. உதாரனத்திர்க்கு- பாட்டியுடைய அக்கா- பள்ளியிலிருந்து ஒரு நாள் வீடு திரும்பவில்லையாம். தீப்பந்தம் எடுத்துக்கொண்டு சில பேர் அவளை தேடிச்சென்றார்களாம். அவளது தோழி ஒருத்தி- "குறுக்குப் பாதை" வழியே அவள் சென்றதாகக் கூறினாளாம். அந்த பாதை வழியே சென்று தேடுகையில், ஒரு பெரிய பாறையின் மீது ப்ரமை பிடித்ததுபோல் அவள் உட்கார்ந்திருந்தாளாம். ஒரு வாரம் போல் நடந்த ஹோமங்கள், மாந்த்ரீக விதிகள் பற்றிய வருணனைகளை பாட்டியால் மட்டுமே அழகாக கூற முடியும்! கடேசியில் "ஆனதாண்டாபுரம் ஐயங்கார்" போல ஒரு மாந்த்ரீகர் அந்த "குறுக்கு வழியின்" ரகசியத்தை சொன்னாராம். அந்த வழியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதி, 1400s இல் பகைவர்களை தூக்கிலிட உபயோகிக்கப்பட்ட யுத்த பூமியாம். சிறு வயதில் கதையின் இந்த இடம் எனக்கு மிகவும் பிடிக்கும்!

அன்று மாலை வீடு திரும்பியது நிழல் போல இருந்தது. அப்பாவும் நானும், நாங்கள் சிறு வயதில் ரசித்த பல மந்திர தந்திர கதைகளையும், நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டோம். "பேய் மீது நம்பிக்கை உண்டா"? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்று எனக்குத் தெரியவில்லை. அவைகள் மீது நம்பிக்கை வேண்டும் என்ற ஆசை உண்டு. பேய், பிசாசு போன்ற விஷயங்களின் மீது நம்பிக்கை வைத்தலும்- Santa Claus, Fairy Tales, ஏன் "கடவுள்" மீது நம்பிக்கை வைப்பது போல ஒரு உள்ளக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய விஷயம். அந்த உணர்வை ரசிக்கக் கிடைத்தால்- அதுவும் ஒரு தனி ரசனை.

இன்றைய காலகட்டத்தில், படம் பார்க்கப் போவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படித்து தெரிந்துகொண்டு தான் பல பேர் போகிறார்கள். "நேரப் பற்றாக்குறை" காரணமாக, கதையை முன்னரே படித்து விட்டால், 2.5-3 மணி நேரம் செலவு செய்யலாமா வேண்டாமா என்று முடிவு செய்துகொள்ள வசதியாக இருக்குமாம். சிறு வயதில், "சந்திரலேகா", "ஹரிதாஸ்" போன்ற படங்களைப் பார்த்ததுண்டு. இப்போது- நான் நினைத்தாலும் அந்தப் படங்களை பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. ஆயினும் ஒரு சில நேரங்களில்- ஏன் 3 மணி நேரம் ஒரு படம் பார்க்கக் கூடாது என்று தோன்றும். கதை நாம் நினைத்தது போல அமையவில்லை என்ற ஏமாற்றமோ, ஆச்சரியமோ தானே விளையும்? இப்படிப்பட்ட சில ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் தானே நம் வாழ்கையை "வாழ்கை" யாக மாற்றும்... மாற்றிவிட்டு போகட்டுமே...

Pt. RAVI SHANKAR...  

Posted by Matangi Mawley


Solidaire CAT 1000 TV ல், பல நாட்கள் காலை Doordharshan ல் நான் கேட்ட முதல் இசை- இவரது "Bhaje Sargam" என்ற Desh ராகத்தின் துவக்கம் தான்... ஹிந்துஸ்தானி இசை இன்னது என்று எனக்கு இவரின் இசையைத் தான் அடையாளமாகக் காண்பிக்கப் பட்டது. 


Pt . Ravi Shankar may not be with us any more. But his music would stay forever... 

Bhaje Sargam... Click Here

கார்திகை 2012  

Posted by Matangi Mawley



கார்திகை திருநாள் வாழ்த்துக்கள்!


KASAB HANGED  

Posted by Matangi Mawley

Kasab hanged: Kudos to the officials for carrying out the execution quietly, thank you President Pranab for being decisive and thank you India- finally the victims get some kind of justice!

Remembering my beloved maternal uncle, Shri. P.K. Gopalakrishnan, who lost his life on the fateful day- 26/11: Click Here

OMG : OH MY GOD  

Posted by Matangi Mawley


இன்று மதியம் Colors channel ல் "OMG : Oh My God" என்ற படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் September மாதம் வெளிவந்தது. Trailer பார்த்த உடனேயே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அப்போது அது முடியாது போனது. இந்த படம் "The Man Who Sued God" என்ற ஆங்கில மொழி படத்தையும், "Kanji Virudh (vs) Kanji" என்ற Gujrati மொழி நாடகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கரு: பூகம்பத்தில் தனது கடையை இழந்த Kanji bhai, கடவுளை court க்கு அழைக்கிறார்.

பொதுவாக ஆங்கில படங்களை மைய்யமாகக் கொண்டு அமைக்கப் படும் நமது ஹிந்தி/தமிழ் மொழி படங்கள்- முதலில் இந்திய மக்களுக்கு ஏற்றார் போல் மாற்றப் படுகின்றன. இப்படி மாற்றப்படும் போது, இந்திய மொழி படங்களுக்கே உரியதான ஒரு சில விஷயங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு- அம்மா sentiment, கடவுள் sentiment போன்ற மசாலா சாமான்கள். இதனாலேயே ஒருசில remake படங்களை நான் பார்ப்பது கிடையாது. ஒருவேளை "OMG : Oh My God" கூட இந்த விபத்திற்கு ஆளாகியிருக்கக் கூடுமோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், டைரக்டர் Umesh Shukla வை, இந்திய மசாலாக்களை (தவிர்க்க முடியாதானாலும்) குறைத்ததற்காக பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் Highlight - dialogues! பொதுவாக, நமது சினிமாக்களில் நாத்திகம் பேசும் கதாபாத்திரங்கள்- திடீரென்று மனம் மாறி ஆத்திகர்களாக மாற்றப் படுவது தான் வழக்கம். இந்த படத்தில், hero வான Kanji bhai ஐ- atheist என்று கூறுவதை விட rationalist என்று கூறுவதுதான் உசிதம். அவருடைய கதாபாத்திரத்தின் அமைப்பு- தனது வீட்டில் மனைவியின் மூடத்தனமான பக்தியை கேலி செய்யும் போதும் சரி, போலி சாமியார்களிடம் court ல் வாதாடும்போதும் சரி- அழகான integrity maintain செய்யப் பட்டிருக்கிறது. இவர் நாத்திகம் பேசி ஒரு நண்பரின் விரதத்தை கலைத்து விட்டார் என்று  Kanji bhai யின் மனைவி விரதம் இருக்க- Kanji bhai அடிக்கும் comment பிரமாதம் ("உன் mobile ஐ charge இல் போட என் mobile இல் எப்படி battery full ஆக முடியும் "?)! கடவுளை commercialize செய்திருக்கும் போலி சாமியார்களை court இல் விசாரணை செய்யும் போதும் dialogue களின் logic கதையை அழகாக நகர்த்துகிறது. ஒரு டிவி interview வில் Kanji bhai யின் வசனம் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. "உண்மை இருக்கும் இடத்தில் மதம் தேவைக்கிடையாது".

Akshay Kumar, "கிருஷ்ண வாசுதேவ் யாதவ்"- அதாவது  கடவுளாக நடித்திருக்கிறார். அவருக்கும் Paresh Rawal (Kanji bhai) க்கும் நடக்கும் சம்பாஷனைகள் அழகாக அமைந்திருக்கிறது. Mithun Chakroborthy- லீலாதர் சுவாமி என்ற போலிச்சாமியாராக நடித்திருக்கிறார். "கிருஷ்ணா-கிருஷ்ணா"என்று நாடனம் ஆடிக்கொண்டு, மற்ற போலிச் சாமியார்களுக்கு தலைவராக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக- படத்தின் முடிவு. Rational ஆக கொண்டு செல்லப்பட்ட கதைக்கு rational ஆன முடிவு.

நேரம் கிடைத்தல் பார்க்கவும்.

தீபாவளி வந்தாச்சு!  

Posted by Matangi Mawley


Photo ல இருப்பது தேஜஸ்வினி, நம்ம friend. எங்க தெரு-ல தீபாவளி 2 வாரமா நடந்துண்டே இருக்கு. எக்கச்சக்க அரை டிக்கெட்ஸ். இந்த தடவ எங்க வீட்டுல வெடி கொஞ்சம் கம்மி தான். பாட்டி இருந்த போது- ஒரு வீட்டுல மொத்தம் 20 பேர் இருப்பா கிட்ட தட்ட. Height order படி எல்லாரையும் காலங்காத்தால உட்கார வெச்சு தலைல எண்ண  வெச்சு விடுவா. 1 வாரம் 10 நாளைக்கு முன்னாடியே சமையல்காராள்லாம் ஜாங்கிரி, மைசூர் பாக், பாதுஷா, mixture எல்லாம் பாட்டி ஆத்து பின் புறத்துல செய்ய ஆரம்பிச்சுடுவா. நாங்க எல்லாரும் ஊருக்கு கெளம்பும் போது- 2-3 tin நிறையா தீபாவளி தின்பண்டம் கொடுத்தனுப்புவா!
Bushy தான் கொஞ்சம் restless ஆ இருக்கு. அதுக்கு வெடி சத்தம்னா ரொம்ப பயம். எங்கயாவது போய் ஒளிஞ்சுக்கும். தீபாவளி அன்னிக்கு அதுக்கு காலங்காத்தால சாப்பாடு போட்டுட்டு ரூம் உள்ள பூட்டி வெக்கணும்.

எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்....