Tag டோய்...  

Posted by Matangi Mawley

கொஞ்ச நாளைக்கு முன்னாடி- "என்னடா இது... அவ்வளவு தான் தமிழ் blog ஆ?? ஒண்ணுமே எழுத தோணலையே..." அப்டீன்னு யோசிச்ச போது-- தக்குடு boss "உங்கள tag பண்ணிருக்கேன்...." அப்டீன்னார்! சரி--- நம்ம blog கு இன்னும் கொஞ்ச காலம் இருக்கு போலருக்கு-ன்னு தோணித்து...

குறிப்பு: 1 ... 2 ... ன்னு குறிப்பிடற order ல தான், அந்த விஷயங்களோட முக்கியத்துவம்- னு கிடையாது...

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

"இன்னது"- ன்னு சொல்லவே முடியாது. அப்பப்போ, ஒவ்வொண்ணு பிடிக்கும். "Mood" அ பொறுத்தது. இருந்தாலும்--

> உபயோகமுள்ள பேச்சு- அறிவுக்கு பயனளிக்கற பேச்சு. நல்ல விஷயங்கள பத்தி. Music /Books பத்தி. நல்ல மனிதர்கள பத்தி. நல்ல மொழி-ல அமைந்த பேச்சு. சொற்பொழிவு. எனக்கு Obama வோட Speeches ரொம்ப பிடிக்கும். அவர் ஏதாவது செய்யராரோ, இல்லையோ-- அவர் குரல்/content /அத அவர் வெளிப்படுத்தற விதம்! எனக்கு Amitabh Bachchan குரலும் ரொம்ப பிடிக்கும். "Main Aazaad Hoon" ன்னு ஒரு படம். அதுல அவர் ஒரு Speech கொடுப்பார். (click here) முடிஞ்சா அந்த படம் கூட பாக்கலாம். அந்த Speech ல அவர் குரல்!!!! பாஷ புரியணும் னு அவசியம் இல்ல. அந்த ஒலி போதும்...
> Books. கொஞ்ச நாளைக்கு முன்னாடி- என்னோட படிக்கற பழக்கத்துக்கு கொஞ்சம் இடையூறு வந்தது. அப்போ தான் நான் realize பண்ணினேன். என்கிட்ட இருக்கற ஒரே நல்ல குணம் இது தான். இதுவும் போச்சு-ன்னா, என்ன பத்தி பெரும பட்டுக்கக்கூடிய விஷயம்-னு எதுவுமே கிடையாது-ன்னு. அந்த பழக்கத்த விடாம எப்புடியோ திருப்பி படிக்க ஆரம்பிச்சாச்சு. மறுபடியும் அத நிறுத்தாம தொடர முயற்சி பண்ணிண்டு இருக்கேன்.
> இசை/ Fountain pen/ தாழம் பூ/ பழங்கதைகள்/ பாட்டி/ வையாளி [இத போல ஒரு விஷயத்த எங்க ஸ்ரீரங்கத்துல மட்டுமே பாக்கலாம்- click here]/ பெரிய பெரிய கோலம்/ ஜிமிக்கி/ கனவு/ சிரிப்பு/ அழகான கையெழுத்து (hand writing)/ புழுக்க pencil/ ஓவியம்/ தூக்கம்/ நூலகம்/ ஜோல்னா பை/ மழைல football விளையாடற பசங்க... எத்தனையோ சொல்லலாம்...

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

> தேவ இல்லாம அதிகாரம் பண்ணறது
> மனிதாபிமானமில்லாத [ஜீவராசிகளித்தலும் கூட] செயல்கள்...
> Gossiping [வம்பு] / வத்தி வைக்கறது/ அவதூறு/ டம்பம் / அடுத்தவன் செய்யறானே-ன்னு தானும் செய்யறது...

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

> என் Future அ பத்தி- ரொம்பவே பயம் உண்டு. ஏன் ன்னு தெரியாது.
> துப்பாண்டி-யோட அம்மா போனதுலேர்ந்து- அவன் தூங்கும்போது "மூச்சு விடரானா"ன்னு பாத்துண்டே இருக்கேன்...
> அப்பா கூட வெளீல போனா-- வண்டிய பாத்துக்கோ-- ன்னு நிக்க வெச்சுட்டு எங்கயாவது போய்டுவா. ரொம்ப ரொம்ப ரொம்ப பயமா இருக்கும். சின்ன வயசுல ஒரு தடவ அப்படி பண்ணினதுல நான் ரொம்ப பயந்து போய்- கெட்ட கனவு வந்து- விடியற் காலேல எழுந்து அழுது- அம்மா-கிட்ட அப்பாக்கு நல்ல dose வாங்கி கொடுத்தேன். இப்போ கூட எப்போவாவது அப்படி விட்டுட்டு போறப்போ- பயமா தான் இருக்கும்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

நிறையா விஷயங்கள் இருக்கு-- இன்னது-ன்னு சொல்ல முடியல...
எங்க துப்பாண்டி பேசறது புரிஞ்சா நன்னா இருக்கும்...
ஒரு சில சமயத்துல என் mind ல தோணற விஷயங்கள் எனக்கும் கூட புரியல...

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

மேஜை-ன்னு தனியா எதுவும் கிடையாது. Office ல-ன்னா ஒரு ஓட்ட computer னு சொல்லலாம். வீட்டுல-- மேஜை மேல உக்காந்து வேல பண்ணற பழக்கமெல்லாம் கிடையாது. நிறையா books அங்க இங்க கெடக்கும். பேனா - இடறி விழுந்தா ஒரு பேனா கடைக்கும்... Laptop - அது இல்லாம நம்ளால இருக்கவே முடியாது... இன்னும் எத்தனையோ விஷயங்கள்...

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

> இந்த Tag கொடுத்த "தக்குடு" Boss ஓட blog
> Tom and Jerry / Harry Potter books ல ஒரு சில இடங்கள்/ Jim Carrey படங்கள்...
> காரணமே இல்லாம கூட சிரிப்பு வரும்... Bus ல auto ல போகும் போது- ஏதாவது திடீர்னு தோணும்-- சிரிப்பு வரும்... என்ன பாத்தது இன்னும் சில பேருக்கும் சிரிப்பு வரும்...

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

ஒரு சில "planning" வேலையெல்லாம் பண்ணிண்டு இருக்கேன்...
இந்த Tag அ எழுதிண்டு இருக்கேன்...

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

பொறந்து இந்த 24 வருஷம் உருப்படியா எதுவுமே செய்யல! உண்மை என்னன்னா- இன்னது செய்யணும்- னு தோணல... யோசிச்சு பாக்கும் போது-

> ஏதாவது ஒரு விஷயத்த பத்தி- முழுசா தெரிஞ்சுக்கணும். இந்த விஷயத்துல- இந்த பொண்ண கேட்டா போரும்- வேற யாரையும் கேக்க வேண்டாம்-ங்கற அளவுக்கு ஏதாவது ஒரு விஷயத்த பத்தி தெரிஞ்சுக்கணும்.
> நிறையா travel பண்ணனும். பல ஊர்கள/நாடுகள பாக்கணும். ஒரு தடவையாவது Paris/ Venice/ Egypt -கு போகணும். India பூராவும் ஒரு tour போகணும். ஒவ்வொரு குக்க்ராமமும் பாக்கணும். மக்களை பாக்கணும். கொவில்கள பாக்கணும். அந்த ஊர் கலாச்சாரத்த பத்தி தெரிஞ்சுக்கணும். அந்த ஊர் சாப்பாடு சாப்டனும்.
> எங்க அப்பா படிச்சிருக்கற எல்லா புஸ்தகங்களையும் நானும் படிக்கணும்... அதுக்கு மேலையும் படிக்கணும்... ஒரு Book ஆவது எழுதணும்.
> ஒரு தடவையாவது J . K . Rowling யும், ரஹ்மான் யும் நேர்ல பாக்கணும்!

9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?

நல்ல விஷயங்கள கேக்க முடியும்.
நல்ல விஷயங்கள பாத்தா ரசிக்க முடியும்.
நல்ல விஷயங்கள பத்தி பேச முடியும்.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

> போலித்தனம் நிறைந்த எந்த விஷயத்தியுமே கேக்க பிடிக்காது.
> "உன்ன பத்தி அவ அப்படி சொல்லரா"-ன்னு என்கிட்ட ஒருத்தர் சொன்னா- அத கேக்க பிடிக்காது.
> Negative opinions - கெட்ட அவிப்ராயங்கள்-- கேக்க பிடிக்காது.
> ஒருத்தரோட வருத்தம் தரக்கூடிய "embarrassment" அ பத்தி கேக்க பிடிக்காது.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

> நிறையா பாஷ- பேச/எழுத/படிக்க- கத்துக்கணும்.
> நிரவல்/கல்பனா ஸ்வரம்/ ஆலாபன- எல்லாமா இருக்கறாப்ல ஒரு பாட்டாவது பாட கத்துக்கணும். [Especially - "
இன்னுதய பாராதே"-ன்னு கல்யாண வசந்தத்துல ஒரு புரந்தரதாசர் பாட்டு இருக்கு. அத விஸ்தாரமா பாட கத்துக்கணும்-னு ரொம்ப ஆசை...]/ நிறையா Musical instruments வாசிக்கவும் ஆசை...
> Effective ஆ- ஒவ்வொரு நொடியையும் வீணடிக்காம- பயனுள்ளதா மாத்தி வாழறது எப்புடி-ன்னு கத்துக்கணும்... அதுக்கு ரொம்ப அவசியமா- ஒரு சமயத்துல- ஒரு விஷயத்துல மட்டுமே கவனம் செலுத்தறது எப்புடி-ன்னு கத்துக்கணும். தொ பாருங்கோ-- 11th question எழுதிண்டு இருக்கேன்... இன்னும் mind 8th question லியே இருக்கு...

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

பாட்டி சமையல
தவிர்த்து...

> ஆவக்கா மாங்கா ஊருகாய போட்டு mix பண்ணின rice
> மாகாளி ஊருக்காய்/ சத்தரம் bus stand "ரகுநாத் hotel " ரவா dosa/ Degree coffee/ இஞ்சி morabba/ Puchkaa [Calcutta ல road ஓரத்துல -பானி பூரி கிடைக்கும்... அத Puchka ன்னு சொல்லுவா- அங்க]/ Calcutta Chetla Mod -ங்கற எடத்துல இருக்கற "DiDi கட" Shingaadaa [samosa]/ கத்தரிக்காய் ரசவாங்கி-பொடலங்காய் கரி...
> வடாம் மொட்ட மாடில காய போட்டுருக்கறத "திருடி" திங்க பிடிக்கும்...

13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?

[லிஸ்ட் பெருசானதுக்கு-- sorry ...]
தல ரஹ்மான் பாடல்கள தவிர்த்து--

> தமிழ்: பூங்கதவே தாள் திறவாய்... கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே [அதுல பானுமதி அம்மா குரல்-- ஆஹா!] ... உன் சிரிப்பினில்... மலரே மௌனமா... கல்யாண தேன் நிலா...
> ஹிந்தி: Aap ki nazron ne samjha ... E Ajnabi [தல பாட்டு தான்-- எழுதாம இருக்க முடியல...] ... Jaaiye aap kahaan jaayenge ... Tere Ishq mein [ரேகா பரத்வாஜ் குரல்-- chance ஏ இல்ல...] ... Agar Tum mil jao [பழைய version ...] ... Jiya dhadak dhadak ...
> மலையாளம்: பிணக்கமாணோ ... [இந்த பாட்ட கேக்கரத விட பாக்கறது தான் பிடிக்கும்... அதுக்கு Ravi Varma paintings ல கொஞ்சம் பரிச்சயம் இருக்கணும்..அவரோட நிறையா paintings பாக்க- click here ... ]... நாதா நீ வரும்போள்... பொன்னில் குளிச்சு நின்னு... தீபம் கையில் சந்த்யா தீபம்... ஸ்வர ராக கங்கா பிரவாஹம்... கோபிகே நின் விரல்... ஸ்வர்ண சாமரம்... தேவாங்கனங்கள்...

14) பிடித்த மூன்று படங்கள்?

[லிஸ்ட் பெருசானதுக்கு-- sorry ...]

> ஹிந்தி: Abhimaan, Wednesday, Dhobi Ghat, Chamatkaar [இதுல Naseeruddin Shah வ ரொம்ப பிடிக்கும்], Ankur
> தமிழ்: மணாளனே மங்கையின் பாக்கியம், நாயகன், மகளிர் மட்டும், அவ்வை ஷண்முகி, மைக்கேல் மதன காம ராஜன், திருவிளையாடல் -ல தருமி பகுதி மட்டும், தில்லானா மோகனாம்பாள், சென்னை 28
> English: Sound of Music, animation movies [Lion king /Shrek /Finding Nemo , etc ], Gladiator, Cast Away, You ve got mail , Bruce Almighty
மலையாளம்: பெருமழக்காலம், வானப்ரஸ்தம், வாஸ்தவம், My Dear குட்டிச்சாத்தான், மனிச்சித்ரதாழம், தேன் மாவின் கொம்பத்து, காட்டத்தே கிளிக்கூடு...
> Bengali : Agantuk, charulatha, Unneeshe April, Seemaabadhdha, Shob Charitro Kalponik
மொழிக்கு அப்பாற்பட்டவை: The Bicycle Thief, Life is Beautiful, Pushpak, the kid /city lights (Chaplin ), Children of Heaven

List இன்னும் இருக்கு... profile page ல...

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?

books / music / passion for life and to live ...

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

யாருக்கு இந்த Tag பிடிச்சிருந்துதோ- அவங்க எல்லாருமே இத எழுதலாம்...

This entry was posted on 09 July, 2011 at Saturday, July 09, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

15 comments

"passion for life and to live"--- this says it all matangi... good luck..

9 July 2011 at 23:28

உற்சாகம் நிறைந்த பதில்கள்...நிறைய நேர்மறை உணர்வுகள்...தொடர வாழ்த்துகள்....

10 July 2011 at 07:42

குட் குட் நல்லா இருக்கு

10 July 2011 at 08:09

மனசு விட்டு பேசின எபக்ட்

10 July 2011 at 09:32

மாதங்கி! யதார்த்தமான பதில்கள்.
சில அதிசயமாயும்,
சில ஆச்சர்யமாயும் ,
சில அழகாயும்..

10 July 2011 at 10:43

நீ எழுதுவதையெல்லாம் ரசிக்கும்- முதல் ரசிகன்- நான். அது இருக்கட்டும்... இந்த post க்கு நீ கொடுத்திருக்கிற தலைப்பு- வெகு ஜோர்! எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது...

- மாலி

10 July 2011 at 11:40

அழகான மனம் நிறைந்தபகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

10 July 2011 at 12:57

சூப்பெர்ப். உங்க அப்பாவோட Profile பிக்சர்ல இருக்கிற ராஜகோபாலன் மாதிரி.....

10 July 2011 at 15:10

உங்கள் வயதுக்கே உரிய உற்சாகமும் நிறையப் பேரிடம் காணமுடியாத முதிர்ச்சியும் கலந்த சுயநலமில்லாத பதில்கள்.ரசித்தேன் மாதங்கி.

10 July 2011 at 15:27

" "ரகுநாத் hotel " ரவா dosa" ------brings me the memory where we had it together :)

11 July 2011 at 15:52

உங்களை நீங்களே உற்றுப் பார்க்க உதவிய ஒரு பதிவு இது. வாழ்த்துக்கள். நெகடிவ் பாயிண்ட்ஸ் என்று எண்ணுவதை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. A GOOD INTROSPECTION.

13 July 2011 at 18:26

ரொம்பவும் யதார்த்தமான, எளிமையான, நேர்மையான பதில்கள் மாதங்கி!
ரொம்பவும் ரசித்தேன்! எனக்கு மிகவும் பிடித்த பாடல்களான
'Jayiyee aap kahaan ',
'பொன்னில் குளிச்சு நின்னு'
'க‌ண்ணிலே இருப்ப‌தென்ன‌ க‌ன்னி'

உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்வைத் தருகிறது!

14 July 2011 at 00:14

என்னங்க இது? மூணுனா மூணுதான். நாலஞ்சுனு இழுத்துட்டே போனா எப்டீஈஈ?

சுந்தர்ஜி இன்னொரு பதிவுக்கான ஒரு பின்னூட்டத்துல உப்புமாவுக்குத் தொட்டுக்க மாகாளிச் சாறுனு சொன்னாரு. இங்கே நீங்களும் மாகாளி ஊறுகாய் - கொல்றீங்களே? ஒரு இருபது வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன் மாகாளிக்கிழங்கு ஊறுகாய் கண்ணால பாத்து. ஹ்ம்ம்ம். மாகாளி மூச்சு.

14 July 2011 at 07:17

:))) suuper suuper!! read pannittu comment poda maranthu poyiduthu mem sabb!!

14 July 2011 at 11:23

Intresting...

14 July 2011 at 20:09

Post a Comment