ஒரு நொடி வாழ்க்கை  

Posted by Matangi Mawley


காலில் சக்கரமும், முதுகில் இறக்கைகளையும் அணிந்து, எந்த இடத்திலும் ஒரு நொடிக்கு மேல் அவர்கள் இருப்பவர் இலர். அவர்களின் மனமும் அவ்விடத்தில் இருப்பது கிடையாது. எதிரே நிற்பவர்களின் நிழல்- அவர்களின் கண்களில் அவ்வபோது படுவதுண்டு. "இதுவும் ஒரு வாழ்வா"? என்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு தோன்றுவதற்கு அனுமதி கிடையாது. காலத்தின் கைதிகள்.

"என் வாழ்க்கையில் இதை போல் ஒன்றை நான் கண்டதே இல்லை" என்ற வரியை உபயோகிக்காதவர்களே சற்று குறைவுதான். "அப்படி என்ன வாழ்ந்து கிழித்து விட்டீர்கள்"? என்று எனக்குக் கேட்கத் தோன்றும். வாழ்கை என்பது சின்னச் சின்ன சந்தோஷங்களின் கோர்வை- என்று சில சிந்தனையாளர்கள் கூறிக் கேட்டதுண்டு. ஒரு சின்ன சந்தோஷத்தை அடைந்த உடனேயே ஏதோ வாழ்கையின் உச்சக்கட்ட நிலையை அடைந்தவர்களை போன்ற எண்ணங்களில் மிதந்து தத்தளித்துப் போவர் சிலர்.

அவர்களைப் பற்றி இங்கு பேசப்போவது இல்லை. நம் பறக்கும் கைதிகளைப் பற்றி ஒரு சில வரிகள்...

வெளிச்சத்தைக் கண்டு, அதனால் ஈர்க்கப் பட்டு வேறு பொருளைக் காணாது- வெளிச்சத்திலேயே வாழ எண்ணி மடிந்து போகும் சிறு ஜீவன்களை நினைவு படுத்துகிறது- நம் பறக்கும் கைதிகளின் வாழ்வு. சொர்விற்கோ, சுகத்திற்கோ, துக்கத்திற்கோ, மகிழ்விற்கோ படியாத ஒரு மனித ஜாதியும் இருக்குமோ? - என்று வியக்க வைக்கிறது இந்த ஜீவராசிகளின் வாழ்வு. எதை நோக்கி இந்த ஓட்டம்? எந்தச் சாதனையை துரத்த இந்த பதற்றம்? கேட்கும் கேள்விகள் கேட்பவர்களேயே எதிர்நோக்கி தாக்கி நிற்க- அவர்கள் கடந்து போன பாதையில் அவர்களின் பாதச்சுவடு பதித்திருக்க நேரமில்லாது பறக்கும்- காலத்தின் கைதிகள்.

"இப்படிப்பட்ட கேள்விகளை- எங்களிடத்தில் கேட்பதற்கு உனக்கென்ன அருகதை இருக்கிறது? அந்த உரிமையை உனக்கு யார் அளித்தது"? என்பது போன்ற எண்ணங்கள் கூட இவர்களுக்கு வருவதாகத் தெரியவில்லை. கேட்பவர்கள் கேட்டே நிற்க, பறக்கும் கைதிகள் பறந்தே இருக்க- கேட்பவர்கள், பறப்பவர்களின் எல்லையை அறிய ஆவல் கொண்டு கேட்டுக்கொண்டே நிற்கிறார்கள்.

அமைதியில்லா பறத்தலினால் இறகுகளும் சோர்ந்தன. சோர்ந்து போன கைதிகள் கேட்பதெல்லாம்- பருக சிறிது நீர்.

எங்கு தான் கிடைக்குமோ- அந்த நீர்? பறந்து-பறந்து, அலைந்து-திரிந்து, தேய்ந்து போக உழைத்து உடைந்த சரீரத்தில், புதிதாக மெருகேறிய வைரமாக மின்னிக்கொண்டிருக்கும் உயிர் நீரையும் பருக இயலுமோ? அல்லது- காலங்கள் தாண்டி- சுகங்கள் அனைத்தும் மறந்தமையால், மறத்தலின் பிழை உணர்ந்த கண்களில் மெதுவாக தோன்றி- நிறுத்த முயற்சித்தும் முடியாமல் போக, குளமாக தேங்கிய கண்ணீரையும் பருக இயலுமோ?

கேட்பவர்களிடம் கேட்கலாம். நீர். "ஆனால் நீர் அளிக்கக் கூலியாக விடை கொடுக்க நேரிடுமோ"? என்ற அச்சம் தழுவியது. நா கேட்க மறுத்தது. "இத்தனை பேச்சுக்காரர்களுக்கு நம் தாகம் புரியும்... புரியுமோ?... ஏன் புரியவில்லை?..." என்று கேட்டு ஓய்ந்தார்கள்- பறக்கும் கைதிகள். கேட்பவர்களுக்கு முன்னே. கேள்விகளோடு.

கேட்பவர்களோ- "பறப்பவர்கள் அவர்கள் இலக்கை எட்டி விட்டார்கள் போலும்" - என்று எண்ணிக் கொண்டனர். "இத்தனை காலம் பறந்து- நான் சேர்ந்த இடத்திற்குத் தான் நீயும் வந்தாயா"? என்று மனதில் உள்ளூரத் தோன்றிய இறுமாப்புடன் நகையாடினார்கள்.

கேள்விகளோடு, நீர் கிட்டாமல், ஓய்ந்தார்கள்- ஒரு நொடி வாழ்ந்தவர்...

This entry was posted on 23 April, 2011 at Saturday, April 23, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

31 comments

எப்போதும் நேரமில்லை என்று பறந்தபடியே எதனோடும் தொடர்பின்றி வாழவும் கூடுமோ?

உங்களின் ப்ரத்யேகமான கூர் மொழியோடு ஒரு சாட்டை சொடக்கும் பதிவு மாதங்கி.

23 April 2011 at 11:10

One of your best posts.... wow! very nice. :-)

23 April 2011 at 11:12

Your posting reminds me of "VITTIL POOCHCHIKAL", Matangi.

23 April 2011 at 13:24

ஒரு நொடி வாழ்க்கை!! ம்ம்..

23 April 2011 at 14:38

உன் எண்ணங்களின் வீச்சும் , ஆழமும், மொழியின் ' சித்து வேலை ' கூர்மையும்,
எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது - உண்மை ...வேறென்ன சொல்ல ?

மாலி .

23 April 2011 at 16:40

பறக்கும் கைதிகள் -- பறத்தல் = கைதிகளே.

வார்த்தைகளை உச்சரிக்கும் வேகம்,
ஒன்றுமில்லாதற்கெல்லாம் படபடத்தல், ஆச்சா,போச்சா- என்று அலமந்து குதித்தல்-- இவையான பரபரப்புகள் பூராவுமே அந்தக் கைதித்தன்மையை உணராது இருப்பதற்க்காகவே; செயற்கையான பறக்கும் உணர்வை சம்பந்தப்பட்டவர் க்கு ஏற்படுத்ததுவதாலேயே அதனின்று விடுபடமுடியாமல் போகிறது.

அதனாலேயே மனச்சிறகுகளின் படபடப்பின் மூலம் பறத்தலான காரியம் நடப்பது போலவான பதற்றம் உருவாகிறது. இந்த பதற்றமே இயல்பின்மையை தோற்றுவிக்கும். பறத்தல் நடப்பதாக உணர்வு மட்டுமே தங்கி, இருந்த இடத்தில் இருப்பதே இயல்பாகிப் போகும்.

24 April 2011 at 14:13

பருகுவதற்கான நீரைத்
தேடும் ஓட்டம் தானோ என்னவோ?

25 April 2011 at 09:02

awesome

25 April 2011 at 12:14

:) enna solla.. words are fowing like anything..

25 April 2011 at 20:34

ஆகாசத்தில் பறக்கும் அற்புத வார்த்தைகள். ;-))

26 April 2011 at 20:04

Matangi Mawley, Your post reminds me what I read a long time back. Permit me to share that in this commends:
Quote:
Question to God:
“What surprises you most about mankind?"

God's Answer:
"That they lose their health to make money and then lose their money to restore their health.
That by thinking anxiously about the future,
they forget the present, such that they live neither for the present nor the future. That they live as if they will never die, and they die as they had never lived…
unquote:
How is that?

30 April 2011 at 13:50

Superb Narration of Soozhnilaik kaithikal.
They say it as occupational hazards.
They do not realise what they are losing by flying fervently around.
And the ultimate losers may create a progeny of losers too.;(

2 May 2011 at 14:28

மிகச் சரி....
'மறத்தலின் பிழை உணர்ந்த கண்கள்...' என்ற வரி அருமை....

நன்றி...

4 May 2011 at 09:59

எதோ பெரிய லெவல்ல சொல்லியிருக்கேள்னு மட்டும் தெரியர்து ஆனா தக்குடுவோட சாதாரண பாமர புத்திக்கு ஒன்னுமே புடிபடமாட்டேங்கர்து...:( செமையா லெவல் காட்டரேள் மாதங்கி...:)

4 May 2011 at 15:39

இது ஒரு metaphor for IT folksன்னு எடுத்துக்கலாமா? சரளமான எழுத்து. எல்லாரும் எதற்கோ பறக்கிறார்கள். அவரவர் கூண்டுகளின் விஸ்தீரணம் வெவ்வேறு. அவரவர் சுக-துக்கம் வெவ்வேறு. நோக்கு பல திசை. தேடும் நீர் கானல் நீரோ?

6 May 2011 at 14:21

@sundarji...

koodum endru ninaiththirukkavillai... koodum endru sameepaththil theriya vanthasthu... thanks!! :)

8 May 2011 at 13:03

@ chithra...

thanks!

8 May 2011 at 13:04

@gmb...

thts wht has been used as metaphor... :) thnks!

8 May 2011 at 13:04

@mid.clssmadhavi...

:)

8 May 2011 at 13:05

@mawley...

thanks pa! :D

8 May 2011 at 13:06

@ jeevi...

really good take on the write-up! :) thanks!

8 May 2011 at 13:07

@santhanakrishnan...

true!

8 May 2011 at 13:07

@kalyan...

thanks!

8 May 2011 at 13:08

@rishaban...

thanks!

8 May 2011 at 13:08

@rvs...


thanks!

8 May 2011 at 13:10

@ vasan...

:) i remember my dad telling me this...! thanks!

8 May 2011 at 13:11

@ valliyasimhan...

:) true! thanks!!

8 May 2011 at 13:12

@appaavi...

thanks a ton! :)

8 May 2011 at 13:12

@ rajan...

true! thanks!

8 May 2011 at 13:13

@thakkudu...

:D ha ha! thanks!

8 May 2011 at 13:13

@ ramm...

good perspective! ... :).... well almost! :)

thanks!

8 May 2011 at 13:14

Post a Comment