சதுரங்கம்  

Posted by Matangi Mawley


கறைகளும் அந்தச் சுவருகளில் ஒரு சித்திரம் தான் போலும். பழுதடைந்துவிட்ட அந்த கட்டடத்தை புதுப்பித்தால், அந்தக் கட்டிடத்தின் அழகு குறைந்து விடும். சுண்ணாம்பு உடைந்து கீழே விழுந்து கொண்டிருந்தது, அந்தச் சுவருகளிலிருந்து. என்ன ஒரு அழகான ஓவியம், அது! இரண்டு பேர் தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரவிற்கு கிடைத்த ஒரே ஒளி, அவர்கள் இருவரில் ஒருவர் அருகில் இருந்த ஒரு தூங்கா விளக்கு. அந்த விளக்கின் ஒளி- அவர்களின் நிழலை தீட்டிக்கொண்டிருந்தது. அங்கு இன்னும் ஒரு ஓவியம் உண்டு. பள்ளிக்கு, ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் சிறுவர்கள். அந்த ரிக்ஷாவை இழுத்துச் சென்றுகொண்டிருப்பவன்- அவனும் ஒரு சிறுவன்தான். ரிஷாவில் அமர்ந்திருப்பவர்களின் வயது தான் அவனுக்கும்.


இந்த ஓவியங்களைப் பற்றி அப்போது எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் ஓவிய "வீட்டுப் பாடத்தை" வரைவதில் மூழ்கி இருப்பேன். ஓவிய வகுப்பின் மிகவும் கடினமான பகுதி- மனதில் இருப்பதை வரைவது. நான் முயற்சிக்காமல் இல்லை. ஆனாலும், என் ஓவியத்தை பார்பவர்கள் என்னை அழைத்து- "பேய், பிசாசு சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது", என்று அறிவுரை கூறுவார்கள்.

பெற்றோர்கள், பொதுவாகவே அவர்களது குழந்தை- போன ஜென்மத்தில் ஒரு
பாடகியாக, ஓவியனாக, ஒரு விஞ்ஞானியாக, கற்றறிந்த ஞானியாகவெல்லாம் இருந்திருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எனக்கு மகள் பிறக்கும் போது- நானும் இப்படித் தான் நினைப்பேன் போலும். ஆனால்- எனக்கு ஓவியத்தில் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஓவியர்கள் பிடிக்கும். ஆனால் என்னால் 'ஓவியம் தீட்டுவது' என்பது இயலாத காரியம்.

ஆனால் ஆசை உண்டு. ஒரு சில விஷயங்கள் காட்சிகளாக, நினைவுகளாக என்னுள் மட்டுமே இருக்கின்றன. அதைச் சொற்களால் வருணிப்பது என்பது சாத்தியமில்லை. அந்தச் சிறிய த்வாரத்தை திறந்தவுடன், "சஷ்.." என்ற சத்தத்துடன் கொட்டும் அரிசி நிறைந்த பத்தாயம். பாசி படிந்த சுவரில், சிகப்பான பூச்சி. இதையெல்லாம் எப்படி வருணிப்பது?

நாம் எத்தனையோ விஷயங்களை செய்ய நினைக்கிறோம். சிறு குழந்தைகளைப் போல. எனக்குத் தெரிந்த ஒரு ஆறு வயது சிறுமிக்கு 'Ornithologist' ஆகவேண்டுமாம்! ஆனால், அச்சிறுவர்கள், மிக விரைவிலேயே அவர்களின் அந்தக் கனவுகளை- 'வெறும் கனவுகள்' என்று புரிந்து கொண்டு விடுகிறார்கள். 'Ornithology' விரைவிலேயே ஒரு ஆறு வயது சிறுமியின் அம்மாவின்- ஆறாவது பிராயத்தின் ஒரு அபத்தமான கானவாக் மாறிவிடும்.

எனக்கு பல அபத்தமான் கனவுகள் உண்டு. நான் ஒரு பேருந்தில் செல்கிறேன். எங்கு செல்கிறேன் என்ற
கவலையின்றி சென்றுகொண்டே இருக்கிறேன். கையில் ஒரு பேனாவும், சில பேப்பர்களையும் தவிர வேறொன்றுமில்லை. என் பயணத்தின் முடிவை தவிர்த்துக் கொண்டே- நான் சென்று கொண்டே இருக்கிறேன்...

சில சமயங்களில்- என் அபத்தமான கனவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில்- 'இந்தக் கனவு
என்னுடையதில்லையோ' என்று தோன்றும். 18- ஆவது மாடியில், நான். மிகப் பெரிய ஜன்னல். ஜன்னலுக்கு வெளியில்- உண்மைகளின் கொடூரமான அழகு! ஜன்னலின் விளிம்பில் அமர்ந்தபடி நான்- புகை பிடித்துக்கொண்டு. மழை. ஆனால் மழையில் என் cigarette ஐ நான் அணைக்க என்னதான் முயற்சித்த போதும், அதன் முனையில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு- எரிந்து கொண்டே இருந்தது. மழையை அவமானப் படுத்துகிறேன், cigarette- சாம்பலை கீழே தட்டியவாறு.

கூட்டமான ஆட்டோ-வில் வேலைக்குச் செல்ல ஓட்டம், கணினியின் கருப்பு- வெள்ளை தோற்றம், cafeteria வில் coffee. ஆனால் இப்படிப்பட்ட சில சாரமில்லா உண்மைகளுக்கு நடுவிலே- என்னை நான் என் கனவுகளிடம் தோற்றுவிட்டேன். நான் என்னதான் உண்மைகளை நோக்கி விரைய முயற்ச்சித்தாலும், இன்னும் எனக்குப் பிடித்திருக்கும் ஓவியம்- உண்மைகளில் ஊறிப்போன இருவர்- அதை மறக்கும் பொருட்டு, தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அருகே இருக்கும் அந்த தூங்கா விளக்கு, அவர்களின் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக தீட்டிக்கொண்டிருந்தது. அந்த நிழல் நீண்டுகொண்டிருந்தது...

பின் குறிப்பு: படங்கள்- என் கிறுக்கல்கள்...

This entry was posted on 13 February, 2011 at Sunday, February 13, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

28 comments

படங்கள் நல்லா இருக்கு மாதங்கி

13 February 2011 at 14:53

உங்கள் அளவுக்குத் தீவிரக் கனா எனக்கு வந்ததில்லை.ஆனாலும் அந்தக் கனவின் பாதைகள் இன்னொரு கவிதைக்கு அடி எடுத்துக் கொடுக்கின்றன.

நீங்கள் சொன்னது போன்ற பாழ் சித்திரங்களைப் பார்த்து மயங்கியிருக்கிறேன் தஞ்சாவூர் அரண்மனைச் சுவர்களிலும் தெருவோரம் சாக்கட்டியால் படம் தீட்டும் ஓவியர்களிடமும்.

13 February 2011 at 16:34

IF YOU ARE INTENT ON LEARNING YOU CAN DO IT.! I DID NOT HAVE ANY FLAIR FOR DRAWING. IN FACT I HAVE SHORT FINGERS WHICH I AM TOLD IS NOT FIT FOR DRAWING.I SAW SOME TANJORE PAINTINGS . I HAD JUST LEARNT THE THEORY OF TANJORE PAINTINGS.JUST FROM WHAT I LEARNT THEORITICALLY I TRIED I WAS SIXTYFIVE THEN.SLOWLY AND STEADILY I IMPROVED. NOW ALL MY RELATIVES HAVE TANJORE PAINTINGS DONE BY ME ADORING THEIR WALLS. YOU CAN DO IT MATHANGKI.

13 February 2011 at 17:35
This comment has been removed by the author.
13 February 2011 at 21:40

ஓவியங்களை மறந்துவிட்டேன் மாதங்கி.

ரிக்‌ஷாவும் க்ராமஃபோனும் ரொம்ப அழகாக இருந்தது.

13 February 2011 at 21:41

நீங்க‌ள் ஒரு பின்ந‌வீனத்துவ‌ எழுத்தாள‌ர் என்றுதான் அறிமுக‌ம்.
இப்ப‌டி ஒரு பெண் 'பிகாஷோ' என்ப‌து இது வ‌ரை‌ ர‌க‌சிய‌ம்.

14 February 2011 at 16:21

super super super

14 February 2011 at 18:54

அந்த ரிக்‌ஷா படம் என்னை மிகவும்
பாதித்தது. சக்கரங்களாய் பந்துகளும்..
எழுத்துக்கள் இறைந்து கிடப்பதும்
நிறைய விஷயங்களைச் சொல்கிறது
உங்கள் கனவைப் போலவே.

14 February 2011 at 20:43

பெற்றோரின் கனவுகள் பற்றி விவரித்த விதம் அருமை... வர்ணிக்க இயலாத உணர்வுகள் பற்றி சொன்னதும் அருமை... வினோதமான கனவுகள் எனக்கும் வருவதுண்டு... பெரும்பான்மை எழும் போதே மறந்து விடும்...சில பல்லில் சிக்கிய சோம்பு துகள் போல் சில நாள் படுத்தி எடுக்கும்... நல்லா எழுதி இருக்கீங்க மாதங்கி...

படங்கள் நீங்கள் வரைந்ததுனு நினைக்கிறேன்... குட்... :)

15 February 2011 at 00:31

மாதங்கி தூரிகையோ பேனாவோ அசால்ட்டாக வரைகிறது உங்களிடம்.. அற்புதம்..
கனா பலவகை.. என்னுடைய கனா ஒன்றை நான் பதிவாகத்தான் எழுத வேண்டும்.. அவ்வளவு பெருசு.. அடிக்கடி வந்தது.. இப்போ இல்லை.. ;-)

15 February 2011 at 16:06

எனக்கு அந்த ரிக்க்ஷா வண்டியும் பேனாவும் பிடிச்சு இருக்கு! கனவுகள் ஒரு அற்புதமான வரம். வாழ்த்துக்கள்!

16 February 2011 at 00:09

//கறைகளும் அந்தச் சுவருகளில் ஒரு சித்திரம் தான் போலும்...//

..என்று வாசிக்க ஆரம்பித்தது தான் தெரியும்.. சுகமாக இழுத்துச் சென்றது.

அந்தச் சுவரில் கறையே சித்திரமாக மாறிப்போன நேர்த்தியும், சதுரங்கம், தூங்காவிளக்கு(!),ரிக்ஷாவில் சிறுவர்கள், ரிக்ஷாவை இழுக்கும் சிறுவன், 'ச்ஷ்' என்ற ஒசை வெளிப்படுத்தி பந்தாயத்திலிருந்து வெளிபடும் அரிசி நதியின் வேகம்,
ஜன்னலுக்கு வெளியே மழையினூடே ..என்று சித்திர தீட்டலுக்கிடையே கனவில் ஆழ்ந்தது அமிழ்ந்து அமிழ்ந்து அமிழ்ந்தே போயிற்று.

16 February 2011 at 14:34

பிரிய மாதங்கி! உங்கள் ஓவியங்கள் அழகாய் உள்ளன உங்கள் எழுத்தோவியம் போல்.

கனவுகள் பற்றி புதுமையாய்
சொல்கிறீர் கள். கனவுகள் நம் மனவலையில் இறைவன் பதியும் புதுமை பதிவுகள் தானே?

17 February 2011 at 22:38

padankal matrum pathivu arumai...

17 February 2011 at 23:30

@ LK...

thanks!

22 February 2011 at 14:47

@ sundarji...

:) paintings are always captivating... whever they are...

22 February 2011 at 14:48

@ GMB...

:) need to take time off for that... time- now wherever that is?

thanks, sir!

22 February 2011 at 14:49

@ sundarji...

thanks, sir!

22 February 2011 at 14:49

@ vasan!

:D ha ha! picasso vellaam vendaam... naan matangi mawley-yaave irunthukkaren...

22 February 2011 at 14:52

@ kalyaan...

thanks!

22 February 2011 at 14:52

@ santhakrishnan...

thanks!

22 February 2011 at 14:53

@ appaavi...

thanks!

22 February 2011 at 14:53

@ RVS...

thanks!

22 February 2011 at 14:54

@ thakkudu....

thanks!

22 February 2011 at 14:54

@ jeevi...

thanks a ton, sir!

22 February 2011 at 14:54

@ mohanji...

good one, sir!
thanks!

22 February 2011 at 14:55

@ kumar...

thanks!

22 February 2011 at 14:55

@ kumar...

thanks!

22 February 2011 at 14:55

Post a Comment