ஜாடி  

Posted by Matangi Mawley

பச்சை இலைகளின் மத்தியில் ஆங்காங்கு மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் இலைகள்- கிளைகளைப் பற்றிக்கொண்டு வாழ முடியாத முதிர்ச்சியால்- பற்றியிருக்கும் கிளைகளை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே! மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.

சிந்தனை மனதில் தோன்றி வார்த்தையாக உருவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தருணம். வார்த்தை தேடி அலையும் அந்த சிந்தனைகள், மனதினுள் ஏற்படும் எண்ணச் சிதரல்களுக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருக்க- அதனுள் அத்தனை மாற்றங்கள்! நாம் ஏன் உதித்தோம்? நமக்கு வடிவம் கிட்டாமல் இப்படி மூலையில் ஒடுங்கிப் போய் விடுவதற்கு நாம் உதிக்காமலேயே இருந்திருக்கலாமோ? என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா'? என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சிந்தனைகள் என்னிடம் கூறியது- 'இந்த அறிவின்மையும் அந்த கூட்டத்தில் தான் சேரப்போகிறது' , என்று!

ஒரு ஜீவராசியின் சிந்தனை- அதனுடையது. உரு இல்லாது போனால்- அது வெளி வர வேறு வழி இல்லை. உடைந்த சாமான்கள், தூசு படிந்த தரையினில் சீரின்றி படர்ந்து இருந்த அந்த அறையினுள்- வருடங்கள் பல கழிந்தும் உருவம் மாறாது, இடம் தவறாது அமர்ந்திருந்தது அந்த ஜாடி. கழுத்தை உயர்த்தி, அது வலித்து உடைந்து போகும் வரையில் அந்த ஜாடியை பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. சிலந்தி வலைகளின் திரையின் மறைவில், எழிலாய் ஒளிந்து கொண்டு, களவாய் நம்மை அழைத்திருந்தது- பழமை தட்டிப் போன அந்த பீங்கான் ஜாடி.

அதனுள் என்ன இருக்கக் கூடும்? இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச்சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன? "இருட்டு"! என்றார்கள். உருவில்லா சிந்தனைகள். இருட்டு ஜாடியினுள் சிக்கிக் கொண்டிருக்கும் என்னை- அந்த ஜாடி வான மார்கமாக பறந்து சென்று, பின்பு பூமியைத் துளைத்துச் சென்று- நாகலோகத்தில் விட்டு விடுவது போன்ற உருவில்லா சிந்தனைகள்!

அலாவுதீனின் பூதம் போன்றதொரு பூதம் கிளம்பியதாம்- ஜாடியின் உள்ளிருந்து! மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது? இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே! இப்போது கேட்க என்ன இருக்கிறது? அந்த மூன்று ஆசைகள் என்ன என்று தேடி இன்னும் அலைந்திருக்கிறது என் உருவில்லா சிந்தனைகள்.

சிந்தனையின் திரையை விலக்க மனமில்லை! ஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...

This entry was posted on 08 February, 2011 at Tuesday, February 08, 2011 . You can follow any responses to this entry through the comments feed .

24 comments

//சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே! மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.//

உருக்கம் மனதை உருக்குவதாக இருந்தது, மாதங்கி!

மரத்தைப் பற்றிப் பேசுகிறோம்; அதன் கிளைகளைப் பற்றிப் பேசுகிறோம்; கிளைகளைப் பற்றியிருக்கும் இலைகளைப் பற்றி பேசுகிறோம். ஆனால், சருகுகளைப் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை..
ஏனென்றால், தனக்கு இருந்த ஒரே பற்றுக்கோடை நழுவ விட்ட, சூரியச் சுடலில் பழுப்பு பழுதாய்ப் போன சருகுகள் அவை.. எதற்கும் பயனற்ற குப்பைக் கூளங்கள்!

ஆனால் அதன் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை, இத்தனை நாட்கள் மரத்தில் இருந்த வாழ்வு, மற்றொரு வாழ்க்கையாய் பூமிக்கு மாறியிருக்கிறது-- என்று நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்து புதிதாக ஒரு செய்தியைப் படித்த பரவசம் கொண்டது என் மனம்.

மேலும் எவ்வளவு விஷயங்கள் சொல்கிறீர்கள்.. 'இங்கே இன்னும் அவை குழந்தைகளே; மக்கிப் போக நாட்கள் உள்ளன; அதுவரை இளமை உண்டு; வாழ்வு உண்டு; சருகு என்னும் பெயரும் உண்டு..' என்று படித்த பொழுது நெஞ்சம் விம்மியது.

சருகுகளை தாங்கள் ஆதுரத்துடன் பார்த்த பார்வை, அற்புதம், மாதங்கி!

8 February 2011 at 20:59

ஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...



......அபாரம்! மெருகேறி விட்ட எழுத்து நடையுடன், இந்த பதிவு ஜொலிக்கிறது

8 February 2011 at 21:05

படித்தேன்.நன்றாக உள்ளது.ஆனால் ஒன்றும் எழுத தோன்றவில்லை. உங்கள் எழுத்தின் தாக்கமோ என்னவோ

9 February 2011 at 05:35

தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் இடும் அளவுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சியை நான் அடையவில்லை என்பதால் ஆச்சர்யம் கலந்த கண்களோடு வாசித்து நகரும் ஒரு சாதாரண வாசகானாய் இருப்பதிலும் தனி சுகமே!!..:) வாழ்த்துக்கள் மாதங்கி!

9 February 2011 at 11:42

You are playing with words beautifully. Keep going.

9 February 2011 at 16:04

மாதங்கி!மனது பாரமாக இருக்கிறதம்மா.

கிளைகளைப் பற்றியிருந்த சருகுகள் அவற்றிலிருந்து மண்ணிலும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து மக்குதல் போல் உறவுகளில் பகிர யாருமற்று தன் பொறுப்புக்கள் கழிந்து மூலையில் செல்லாக் காசாக மனதில் காயங்களும் ரணங்களும் அவை விட்டு சென்ற வடுக்களும் கூட மறைந்து தானே மறைய இன்னும் எத்தனை காலமென்று தவிக்கும் உயிர்களின் தவிப்பை எழுதாத உங்கள் எழுத்தினில் கண்டேன் மாதங்கி.

9 February 2011 at 16:51

சருகுகளாய் உலர்ந்த மனம் மீண்டும் உயிர்த்தெழுமானால் மூன்று வரங்கள் கிடைக்குமா? என்ன கேட்பது? இமாலயக் கேள்வி. ரெண்டு மூணு தடவை படித்தால் வெவ்வேறு விதமாக புரிகிறது. இவ்வளவு கனமான பதிவா? யப்பாடி.....

9 February 2011 at 17:27

எழுத்து நடை அபாரம்.வாழ்த்துக்கள்.

9 February 2011 at 18:16

வாழ்த்துக்கள் மாதங்கி!

10 February 2011 at 09:10

நல்ல பதிவு .,வித்தியாசமான பார்வை
மாறுபட்ட சிந்தனை.........
வாழ்க்கையின் நோக்கம் மனநிறைவு .,மன மகிழ்ச்சி இதையே கூட வரமாக கிடைத்தாலும் நல்லது அல்லது முயற்சித்தும் பெறலாம்
வாழ்த்துக்கள் மாதங்கி

10 February 2011 at 17:40

//சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்க்கை.//

உறவுகள் என்ற மரத்திலிருந்து பிரிந்த சரகுகள் போன்ற ஒரு சில முதியோர்களின் இன்றைய நிலை போல எனக்குத் தோன்றுகிறது.

// பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே! மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு//

முதியோர் இல்லங்களில் இந்தச் சரகுகளுக்கு இனி ஏதோ ஒரு வாழ்வு உண்டு என்று சொல்வது போலவும் எனக்குத் தோன்றுகிறது.

மொத்தத்தில் இந்தப் பதிவு நன்றாக் உள்ளது. இன்று தான், நான் முதன் முதலாக உங்களின் [ஒரு லேட்டஸ்ட் படைப்பை] ஜாடியைத் திறக்க முடிந்தது.

அதுவும் தாங்கள் என் படைப்பாகிய “நகரப் பேருந்தில் ஒரு கிழவி” க்கு கருத்துக் கூறியுள்ளதால்.

தங்களின் எழுத்துக்களுக்கு என் பாராட்டுக்கள்.

10 February 2011 at 19:17

ஜாடி திறக்கப் படும் போது நாம் நாமாக இருப்போமா?!

20 February 2011 at 16:42

@ jeevi...

:) romba romba thankyou sir!

22 February 2011 at 14:41

@ chithra...

thanks! :)

22 February 2011 at 14:41

@ partha...

thanks!

22 February 2011 at 14:41

@ thakkudu...

thanks, boss!

22 February 2011 at 14:42

@ kalyan...

thanks!

22 February 2011 at 14:42

@ sundarji...

thanks a ton, sir!

22 February 2011 at 14:44

@ RVS...

thanks!

22 February 2011 at 14:44

@ ayesha...

thanks!

22 February 2011 at 14:44

@ pranavam ravi...

thanks!

22 February 2011 at 14:45

@ priya...

thanks! :)

22 February 2011 at 14:45

@ gopalakrishnan...

thanks!

22 February 2011 at 14:46

@ rishaban...

:)

22 February 2011 at 14:46

Post a Comment