ப்ளாஸ்த்ரி  

Posted by Matangi Mawley


எனக்கெல்லாம் ஒரு ஒடம்புன்னு படுத்துக்கறதே பிடிக்காது! இதுக்கு எங்கேர்ந்து தான் வருதோ இந்த புத்தி! எல்லாம் அவராத்து வகயராகள்லேர்ந்து தான் வந்துருக்கும்னு நெனைக்கறேன். எங்க பாத்தாலும் ஒரே "வீரத் தழும்புகள்". "எப்டி அடி பட்டுது"? ன்னா தெரியாது! எங்கப் பாத்தாலும் ஒரு ப்ளாஸ்த்ரி ஒண்ண ஒட்டிண்டு school கு போணும். யாராது என்ன ஆச்சுன்னு கேக்கணும். அத சொல்றதுல இதுக்கொரு பெரும!

இதுகூட ஒரு கொழந்த படிச்சுது. அது பேரு மறந்து போச்சு! இது, அத விட எதோ 2 mark அதிகமா வாங்கிடுத்தாம். அதனால அந்த பொண்ணுக்கு இது ஒரு 'Leader'. இத யாராது "நாதான் Leader" ன்னுட்டா போரும். எதோ பெரிய கிரீடம் வெச்சா மாதிரி தான். அது எதோ ஒரு நா Homework எழுதலயாம். இது ஏன் எழுதலன்னுத்தாம். அந்த பொண்ணு ஒடனே- "இத பாஆஆஆஆஆ ரூஊஊஊஊ" ன்னு எதோ தங்கச்சி sentiment dialogue பேசர Hero மாதிரி பேசிருக்கு, அது. இது ஒடனே "ஐயோ பாவம்"னு மன்னிச்சுடுத்தாம். "என்ன ஒரு நல்ல மனசு, எம்பொண்ணுக்கு"ன்னு நெனச்சிண்டிருந்தேன். ஆனா இப்போ தானே தெரியறது- இதெல்லாம் எங்கேர்ந்து வந்துதுன்னு!

இது என்ன ஒரு 2nd std. படிக்கும். யாரோ "தலவலி" ன்னு சொல்லி கேட்டுருக்கு. கெட்டியா புடிச்சுண்டுடுத்து அந்த வார்த்தைய! "Homework பண்ணுடா"ன்னா- "போ மா... ஒரே தலவலி" ங்க வேண்டியது! 2nd std. கும் தலைவலிக்கும் என்ன சம்பந்தம்னு இன்னி வரைக்கும் புறியல!

யாருக்காது அடி பட்டு ஒரு Band Aid மாட்டிண்டு வந்துட கூடாது! "எனக்கும் இப்போவே Band Aid போட்டுவிடு" ன்னு அழுது தீக்கும், அத மாட்டி விடற வரைக்கும்! இவருக்கு fever வந்து பத்து போட்டு விட்டாலும் சரி. "நானும் போட்டுப்பேன்" ன்னு ஒரே அடம். ஐவரும் அதுக்கு நெத்தில, கன்னத்துல, மூக்கு மேல ன்னு கொஞ்சம் ஈஷி விடுவார். ஒடனே கண்ணாடில வேற பாத்துக்கும் தன்ன தானே! அதுல எதோ ஒரு அல்ப சந்தோஷம் இதுக்கு!

அதுலயும் நெஜமாவே fever வந்துடப்டாது! அவ்வளவுதான்! ரெண்டு நாள்ஜம்முன்னு மட்டம் போடும் school-கு. அதுக்கப்றம் இருப்பே கொள்ளாது ஆத்துல! மூணாவது நாள்- எப்படா school- கு போய் எல்லார் முன்னாடியும் colour-colour- மாத்தர சாப்படலாம்னு உக்காண்டுருக்கும்!

இது class யாருக்கோ "Madras Eye" வந்துடுத்து. அந்த கொழந்த "cooling glass" போட்டுண்டு வந்துருக்கு, class- கு! நானும் "cooling glass" போட்டுப்பேன்-ன்னு ஒத்த கால்- நின்னு கொஞ்ச நேரம் போட்டுண்டு லாத்தித்து!

"வரேன்...வரேன்... என்ன அம்மா-க்கு"? ன்னு கேட்டுண்டே நொழஞ்சேன்- இது எதோ கூப்படரதேன்னு. "அப்பா-க்கு ஓம்பு செப்படல"-ன்னுது! ரெண்டு கஞ்சிக்கு கொதிக்க வெக்கணும்...

This entry was posted on 15 November, 2010 at Monday, November 15, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

26 comments

இப்பவும் இத மாதிரிக் காட்டிக்கிற சமத்துப் ப்ளாஸ்திரிகள் நிறையவே இருக்கா மாதங்கி.

கொழந்தயோட பாஷை ரொம்ப அருமை.

15 November 2010 at 21:48

மக்குப் ப்ளாஸ்த்ரியா இல்லாத வரைக்கும் சமத்துதான்... என்ன சொல்றேள்? ;-)

15 November 2010 at 22:59

நீங்க எழுதற மாதிரிய பார்த்தா உங்களுக்கே உள்ளூர ஒரு பெருமை இது இப்படி இருக்கறதுல நு தோணறது..இல்லாட்டா ஒரு அம்மாக்காரி அது இழுக்கற இழுப்புகெல்லாம் இப்படி விட்டுகொடுப்பாளா,என்ன? என்னமோ எனக்கு இது சரியாப்படலை.
கொஞ்சம் கவலையாகூட இருக்கு!!

16 November 2010 at 04:24

எழுத்து நடை சிறப்பு... ரசித்தேன்...

16 November 2010 at 04:46

உங்க அம்மா ரொம்ப பாவம்

16 November 2010 at 07:20

நன்றாக உள்ளது. உன் ஆங்கில ப்ளாக் போல் வித்தியாசமான பதிவுகள் எதிர்பார்கிறேன் :) வாழ்த்துக்கள்
ப்ரீத்தி

16 November 2010 at 11:38

குறுநகையுடன், என் கையில் ஒரு பிளாஸ்திரி இருக்கு. இந்த தீபாவளி விழுப்புண் :-) வீட்டுல பிளாஸ்திரியை பாத்துட்டு தலைல அடிச்சுண்டா. என்ன attention வேண்டிக்கிடக்கறதுன்னு. :-)

16 November 2010 at 13:58

romba azhaga irunthuthu

16 November 2010 at 21:28

கொஞ்ச நேரம் போட்டுண்டு லாத்தித்து!
இந்த வரியெல்லாம் இப்ப புழக்கத்துல இல்ல.. படிக்கறச்ச பழைய நினைவுகள்.. தேங்க்ஸ்

17 November 2010 at 09:19

அப்ப‌டியே பேசின்டு ம‌னசுள நின‌ச்சுன்டா, அது அப்ப‌டியே ப‌திவுல‌ ப‌திவாகிருமா?
ஆடியோ, வீடியோ ரிகார்டிங் மாதிரி, இது என்ன‌ பிளாக் ரிகார்டிங்கா? முற்ற‌த்தில்
காபி குடிச்சுண்டே...ப‌கிர்த‌லாய்...அருமையான பேச்சு!!

18 November 2010 at 15:33

@ sundarji...

:) thanks!

19 November 2010 at 19:25

@ RVS...

he..he! true! :)

19 November 2010 at 19:25

@ parthasarathy....

naan panninatha ellaam enakku nenachchu paaththaa peruma thaan! pinna?

ithula kavala pada enna irukku? nekku puriyalai!

19 November 2010 at 19:27

@ philosophy..

:) thanks!

19 November 2010 at 19:28

@ LK...

:) aahaa nijam thaan!

19 November 2010 at 19:28

@ preethi..

sure sure preethi!! anything for u! :) thanks!

19 November 2010 at 19:28

@ ramm...

ha..ha!! :D good one!

19 November 2010 at 19:29

@ kalyan...

thanks!

19 November 2010 at 19:30

@ rishaban..

engaaththula ithu adikkadi use pannara vaartha thaan!

19 November 2010 at 19:30

@ vasan..

ha..ha!! :) yathaarthamaa irukkumennu thaan ippadi ezhutharathu!

19 November 2010 at 19:31

ரசித்து படித்தேன்!;-)

20 November 2010 at 13:25

ரெண்டு கஞ்சி போட்டு மாஞ்சு போன அம்மாவை பாத்ததுல தக்குடுவுக்கு செம குஷி!...:)

22 November 2010 at 01:23

@ SK...

thanks!!

26 November 2010 at 00:17

@ thakkudu...

thanks!! :)

26 November 2010 at 00:17

எழுத்தில் என்னவொரு பாந்தம்! யதார்த்தம்..பெருமை கொள்ளாமல் தவித்து குழந்தையைப் பற்றி சலிக்கும் செல்ல அம்மாவைப் பார்க்கிறேன் மாதங்கி !

26 November 2010 at 21:49

@ mohanji....

:) thanks!!

27 November 2010 at 11:45

Post a Comment