பொட்லம்  

Posted by Matangi Mawley


அந்த வீதிகள் முழுவதுமே- பல்வேறு விதமான மலர்களின் மணம் வீசிக்கொண்டு, மனமே ஒரு புது மணம் உணர்ந்த மகிழ்ச்சியில் அமைதி கண்டு- மகிழ்ந்திருக்கும். புடலங்காய்- கொடிகளில் தொங்கிக்கொண்டு நிற்பது போல, பூக்களும் அழகாக நாருகளில் கட்டப் பட்டு தங்களை சூடப்போகும் எஜமானர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். அது ஒரு அழகு. ஒரு சரம் சந்தன முல்லையை எடுத்து- நீர் துளிகள் படிந்த- காய்ந்து போன தாமரை இலையில் மடித்து, வாழை நாரில் கட்டிக் கொடுப்பார்கள். நிறம் இழந்த அந்த தாமரை இலையும்- அந்த சந்தன முல்லையின் வாசத்தை தழுவிக்கொண்டு- தூக்கி எறியப் படுவதற்கு முன்னர், ஒரு சில நொடிகள், அதன் பழைய நினைவுகளில் மூழ்கிப் போகும்.

அங்கே கால் எடுத்து வைத்த நொடியே- புது வெண்ணையின் மணம், ஆழ் மனம் வரை பாய்ந்து- பல ருசிகளையும் நாவில் தூண்டச் செய்யும். பல அடுக்குகளில் வெள்ளை வெளுப்பாக, ஓரிரு இடங்களில் வெளிச்சம் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த வெண்ணை. மெல்லிய தாள் ஒன்றை எடுத்து- மரத்தால் ஆன ஒரு வட்டக் கரண்டியால் வழித்து எடுத்து- அந்த வெண்ணையை தாளின் மீது வைத்து இடை பார்த்து சரி செய்வர். அந்த மெல்லிய தாளில் அந்த வெண்ணையை மடித்துக் கட்டுகையில்- அது அந்த தாளை கிழித்துக் கொண்டு வெளி வந்துவிடும் போன்ற எண்ணம் என்னைத் தழுவியதுண்டு. சணல் கொண்டு கட்டிப் போட்டு விடுவர். தாளை விட்டுப் பிரிய மனம் இல்லாத வெண்ணை- அதில் ஒட்டிக் கொள்ளும்- பிரியா விடை கொடுக்கும்.

அப்பொழுதுதான் அறைக்கப்பட்டதனால் கிளம்பியது- சூடு. அந்த சூட்டுடன் கலந்த காபி விதையின் வாசம். அந்த நிறத்திலேயே ஒரு தனித்துவம். அதை நுகர்ந்த உடனே அதைப் பருக வேண்டும் என்ற ஒரு உள் உணர்வு. பல்வேறு விஷயங்கள், மனதினுள் அங்கேயும், இங்கேயும் அலைந்து கொண்டு ஒரு விதமான வெறுப்பை உற்பத்தி செய்யும் சமயத்தில்- எங்கிருந்தோ வரும் புத்துணர்ச்சியாக, எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடும் ஒரு நறுமணம் அது. காகித போட்லத்திளிருந்து அதைத் தனியே பிரித்த பிறகும்- அந்த காகிதத்தில் ஒட்டிக் கொண்டு நிற்கும் காபி துகள்கள். அந்த நறுமணத்தை விட்டு பிரிய முடியாத காகிதம்- அதனுடையே வீசி எறியப் பட்டுவிடும்.

போட்லங்களுக்கு அதன் உள் இருப்பதின் தன்மை பற்றிக் கொண்டு விடுகிறது. ஆயினும், அந்த பொட்லங்களுக்கு தனியே மதிப்பு இல்லை. என்னதான் அது சந்தன முல்லையின் மணம் தழுவிக்கொண்ட தாமரை இலையாக இருந்தாலும்- முல்லையின் மணம் வீசுகிறதே என்று அதை யாரும் தலையில் சூடப் போவதில்லை.

ஒரு ஜீவன் ஜனித்தது என்று நாம் எப்போது கூறுகிறோம்? அந்த ஜீவனின் பிறப்பின் தருணத்தில். ஆனால்- பிறப்பு என்பது எதைக் குறிக்கிறது? கண்ணுக்குத் தெரியாத அரூப நிலையில் இருந்து ஏதோ ஒரு சக்தி அதை பற்றி வந்து- உடல் என்னும் பொட்லத்தினுள் அடைத்து விடுகிற அந்த தருணமே உண்மையான "பிறப்பு" என்று எடுத்துக் கொள்வோம். உடலினுள் அடைக்கப் படுவதற்கு முன்னர் அதன் தன்மை என்ன? அதனால் சிந்திக்க முடியுமா? பிரபஞ்சத்தின் ரகசியங்களையும், உண்மைகளையும் அது அறிந்திருக்கக் கூடுமோ என்று பல்வேறாக நினைக்கத் தோன்றுகிறது! அப்படி தெரிந்திருக்கக் கூடும் என்றே வைத்துக் கொள்வோம்.

மனிதர்களால் "பஞ்ச பூதங்கள்" என்ற சித்தாந்தத்தை மீறி சிந்திக்கவே முடியாது. எனவே- "ஜீவன்" என்ற ஒன்றை "உடல்" என்ற பொட்லத்தினைக் கொண்டே அவர்களால் அறிய முடியும். ஏனெனில் "உடல்" என்ற ஒன்றே "பஞ்ச பூதங்கள்" என்ற சித்தாந்தத்தினுள் அடங்கி நிற்கிறது. அவர்களால் புறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவர்கள் புரிந்துகொள்ளும் "ஜீவன்" எனப்படுவதை இப்படி ஒடுக்கி- நமக்கேற்றார் போன்று மாற்றிக்கொண்டு பார்ப்பதே தவறு!

"மனதை ஒரு நிலைப் படுத்த வேண்டும்" என்று சிலர் கூறுகிறார்கள். ஏனோ- இப்படிச் சொல்வது வினோதமாகத் தோன்றுகிறது! காரணம்- மனதின் இயல்பு அது கிடையாது! "மனஸ் ஸஞ்சலம் அஸ்திரம்". மனதின் தன்மையை புறிந்து கொள்ளாமல்- அதை "உடல்" என்னும் பொட்லத்தினுள் அடக்க வேண்டும் என்பது- அதனுடைய இயல்பை மீறியதொரு செயல். "மனம்" அதன் இயல்பான உருவத்தைத் தேடி அலைகிறது. அவ்வாறு தேடுகையில் அதற்க்கு பல்வேறு உண்மைகள் புலப் படுகின்றன. அதன் ஜனனத்தைத் தேடி அது அலைந்தாலே- உண்மைகளை உணரும். அதற்க்கு அதை இந்த உடல் எனும் பொட்லத்திலிருந்து விலக்க வேண்டும்.

ஆழ்ந்த ஒரு பிணைப்பு உருவானதாலோ என்னவோ- உள் மனதின் சிந்தனைக் கடலில் எந்தவித அலை அடித்தாலும்- அதன் தாக்கம் வெளியில் தேகத்திலும் தெரிகிறது. மனதை தேகத்தின் அடிமையாக்காமல் காத்தல் அவசியம்.

மனம் பறக்கட்டும். பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் அது தனக்கென்று ஒரு தனி கோட்டைக் கட்டட்டும். அதைத் தடுத்துப் போடா வேண்டாம். அதை இந்த உடல் என்ற பொட்லத்தினுள் அடைக்க வேண்டாம். அப்படி அடைத்தால்- உடல் அதைப் பற்றிக்கொள்ளும். உடல், மனதை மறக்கச் செய்யும். தன்னைப் புகழச் செய்யும். மனதை உடல் என்னும் பொட்லத்தினுள் பூட்டிப் போட்டு விட்டு விடாமல்- அதன் சிறகுகளைத் தீட்டி விட்டேன்... அது உயரப் பறக்கக் கண்டேன். களித்தேன்...

This entry was posted on 23 October, 2010 at Saturday, October 23, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

36 comments

அற்புதமான உணர்வு!சிறப்பான கட்டுரை!

23 October 2010 at 23:22

An excellent exposition.Hats off to you.Brilliant I would say.
You may like to read my post under the caption Tussle between two 'I"s in my blog 'reflections'
http://kpsarathi.blogspot.com/2009/05/tussle-between-two-is.html

24 October 2010 at 06:32

excellent post

24 October 2010 at 09:23

//பொட்லங்களுக்கு அதன் உள் இருப்பதின் தன்மை பற்றிக் கொண்டு விடுகிறது. ஆயினும், அந்த பொட்லங்களுக்கு தனியே மதிப்பு இல்லை.//

ஜீவனுள்ள பதிவு. இந்த உடலில் ஜீவன் இருக்கும்வரை தான் மதிப்பு. உடல் பொட்டலத்தில் ஜீவன். தாமரை இலை.. வெண்ணைக் காகிதம்.. இதெல்லாம் நிறைய பேருக்கு (இந்தக் காலப் பசங்களூக்கு) தெரியுமா..

24 October 2010 at 10:53

மேல்பார்வைக்கு எளிய உதாரணங்களுடன் துவங்கும் இக்கட்டுரை ஒரு கடலின் குணத்தோடு ஆழ்பரப்புக்கு இட்டுச் செல்கிறது.

இந்த எழுத்தும் மொழியும் உங்களின் சிந்தனையால் மணக்கிறது.

காற்றின் திசையில் மிதக்கும் இறகாய் மனம் மிதக்கிறது மாதங்கி.

24 October 2010 at 16:18

மாதங்கி!என்ன கோர்வையான எழுத்து ?
முல்லை,வெண்ணை,காபித்தூள்,மனஸ்...என அழகான TRANSITION. நீங்கள் எடுத்த விஷயம் ஒரு பக்கப் பதிவில் சொல்ல இயலுமா?
உடம்பு,மனசு,ஆத்மா என்று நம் முன்னோர் மிகத் துல்லியமான எல்லைகள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.
மனசு வைரமாய் வாய்த்தவர்களுக்கு, உடம்பு அதை வைக்கும் தங்கப் பேழை..
மனமே குரங்கானால்,உடம்போ அல்லாடும் மரக்கிளை!

அழகான பதிவு. வாழ்த்துக்கள்.

25 October 2010 at 00:49

Your template is looking great... where did u got it...

25 October 2010 at 03:48

எதார்த்தமாக மெருகேறிய உங்கள் தமிழ் எழுத்தை ரசித்தேன்.

உள்ளிருக்கும் சாரமான மனம் எனும் பொருளுக்கு சக்கையாய் உடல் எனும் பொட்டலம் --அருமையான உவமை.

உள்ளே தங்கமாய் மனது வெளியே காகிதமாய் உடல் .

உடலில் முக்கியத்துவமோ, கெட்டியாய் கிழியாமல் உள்ளிருக்கும் மனதை சிதறவிடாமல் பார்த்துக்கொள்வது ..

ஆனால் மனமோ தன் ஆன்மாவை காப்பற்றிக் கொண்டே தன் ஆதி நிலையை கடலும் அதன் ஒரு துளியுமாக என்றும் நின்றிருப்பது.

நன்றாக யோசித்து அதை அழகாகவும் பதிக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்.

25 October 2010 at 04:58

கமண்ட் சொல்லற அளவுக்கு ஞானம் இல்லை, தக்குடு ஒரு சாதாரண கோமாளி!

மாதங்கியோட மைத்துளிகள் ஒவ்வொன்றும் சிப்பிக்குள் சரியாக விழும் பாக்கியம் பெற்ற மழைத் துளிகள்! வாழ்த்துக்கள் மாதங்கி! நல்ல தமிழை ரசித்தேன்!

25 October 2010 at 18:07

மோகன்ஜி said...
/முல்லை,வெண்ணை,காபித்தூள்,மனஸ்...என அழகான TRANSITION. நீங்கள் எடுத்த விஷயம் ஒரு பக்கப் பதிவில் சொல்ல இயலுமா?/
//மனசு வைரமாய் வாய்த்தவர்களுக்கு, உடம்பு அதை வைக்கும் தங்கப் பேழை..
மனமே குரங்கானால்,உடம்போ அல்லாடும் மரக்கிளை!//

மோக‌ன்ஜி, கேள்வியும் கேட்டு ப‌திலையும் வைர‌ச்சுறுக்க‌மாய் சொல்லிவிட்டீர்க‌ள்.
மாத‌ங்கியின் ப‌திவு சொக்க‌த் த‌ங்க‌மெனில், மோக‌ன்ஜி பின்னோட்ட‌ம் வைர‌ம் ப‌திக்கிற‌து.

25 October 2010 at 21:50

நான் இங்கு வந்தேன்...

26 October 2010 at 08:30

நல்ல மனம் விசும் கட்டுரை,,,cheers

26 October 2010 at 18:07

Such an expressive post... many a times thought of it but never in such a expressive way...wow

27 October 2010 at 00:52

அருமையான பதிவுங்க.... ரசித்து வாசித்தேன்.

27 October 2010 at 12:24

சிறப்பான கட்டுரை மட்டுமல்ல. பயனுள்ள கட்டுரை..

27 October 2010 at 21:54

ஆன்மாவிற்கு அழிவில்லை அப்படின்னு சொல்றபோது பொட்டல உறைகள் எப்படி இருந்தா என்ன அப்படின்னு கேட்கறமாதிரி ஒரு பதிவு. ஒரே உறை பூ, வெண்ணை, காபிபொடி என்று பலவித விதமான ஐட்டங்களை கட்டுவது, இந்த உலகத்தில் மானிடர்கள்,ஜந்துக்கள் என்று பல பொட்டலங்கள் இருந்தாலும் ஆன்மா ஒன்றுதான் அதற்க்கு அழிவில்லை அப்படின்னு அத்வைத ப்ரின்சிபில் பேசறீங்க... அசத்துங்க..

இந்தப் பொட்டலம் ஒரு ஜோக்கருங்க. கெக்கே பிக்கேன்னு பல்லைக் காட்டி சிரிச்ச வாயரட்டையை எழுத்தரட்டையா போட்டுண்டு இருக்கேன். உயிர், பிரபஞ்சம், பிறப்பு, இறப்பு எல்லாம் ஒன்னுவிடாம உங்களைப் போல தெரிஞ்சவாள்ட்டேந்து கேட்டுண்டு இருக்கேன். மோகன்ஜியும் பத்மநாபனும் நம்ம சிநேகிதாள். எங்க போனாலும் ஒண்ணா போய் கும்மி கொட்டுவோம். இப்ப உங்காத்துக்கு வந்துட்டோம். அட்டகாசம். கொஞ்ச கொஞ்சமா பூ, வெண்ணை, காப்பிகொட்டைன்னு அழைச்சிண்டு போய் கடைசியில பெரிய மேட்டர் சொல்றேள். ரொம்ப சூப்பர்.


அடுத்த பதிவை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

27 October 2010 at 21:57

நல்ல பகிர்வு மாதங்கி
அதிகமாக யோசிக்க வைக்கும் மிக சில பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று
பின்னூட்டம் போடுவதற்கு முன்பு நிறைய சிந்திக்கவும் மாற்று கருத்தை சொல்லலாமா என்ற தயக்கமும் இருக்கிறது
தியான பயிற்சியின் மூலமாக தகுந்த குருவின் வழிகாட்டுதலில்
மனதை ஒரு நிலை படுத்தி ஒரு புள்ளியில் குவிய வைப்பதும் பின்னர்
அதே போல் மனதை பிரபஞ்ச அளவு விரிய வைப்பதும்
சாத்தியம் தானே மாதங்கி..

29 October 2010 at 20:13

@ SK...

:D thanks!

31 October 2010 at 01:10

@ parthasarathy...

:) thanks!

sure i d read tht!!

31 October 2010 at 01:10

@ kalyaan...

:D thanks!

31 October 2010 at 01:10

@ rishabhan...

enna saar ennayum paatti aakkittele ipdi solli!! ;)

thanks! :)

31 October 2010 at 01:11

@sundarji...

nanri sir!! :D

31 October 2010 at 01:12

@ mohanji...

true! avanga nammalukku yosikkarathukku entha vishayaththiyumey baaki vekkala! :)

thanks!

31 October 2010 at 01:13

@ prabhakaran....

from God Google! btemplates...

31 October 2010 at 01:15

@ padmanabhan..

unga comment romba azhaga korththirukkenga! thanks a ton!! :D

31 October 2010 at 01:15

@thakkudu....

komaalikku thaan circus-la irukkara ellaththa paththiyum thulliyamaa therinjirukkum theriyumo?

thanks Boss! :D

31 October 2010 at 01:16

@vasan..

:)

31 October 2010 at 01:17

@ramakrishnan..

:) thanks!

31 October 2010 at 01:17

@ jai..

:) thanks!

31 October 2010 at 01:17

@ appaavi..

thanks a ton!! :D

31 October 2010 at 01:18

@ chithra...

:) thanks!

31 October 2010 at 01:18

@kannammaa..

:) thanks!

31 October 2010 at 01:18

@RVS..

naan athvaitha mellaam padichchathilla.. etho thoniththu.. avalavuthaan... :) vishayam theinjavaa nnu enna poruththa varaikkum special-a yaarum kedayaathu! ellaarkum ellame theriyum.. therinjatha avaa evalavu etti pidikkaraa ngarathu thaan matter!

thanks for visiting my place! :D

31 October 2010 at 01:22

@priya..

:) apdi kuviya vekka vndaam apdeengarathu thaan en karuththu!

thanks a ton!!

31 October 2010 at 01:23

உயிர், பிரபஞ்சம், பிறப்பு, இறப்பு என்று எல்லாவற்றையும் இப்படி போட்டலமாக பேக் செய்து கொடுத்து இருக்கிறீர்கள். மிகப் பயனுள்ள பதிவு.. இனியும் வாசிக்கும் ஆவலுடன்..

1 November 2010 at 01:22

@aathira...

thanks! :)

1 November 2010 at 19:44

Post a Comment