ராட்டினம்  

Posted by Matangi Mawley


பஞ்சு மிட்டாய் சுழன்று-சுழன்று வரும் காட்சி. அதன் வெட்கம் என் நாவிலும் ஒட்டிக்கொண்டது! அந்த பிளாஸ்டிக் வளையல்கள் என் கைகளில் நுழையாமல் போய் விடலாம். ஆயினும் அதன் மீதிருந்து தங்கத் துகள்கள் என் கைகளில் போடிந்தது. சிரிக்கும் கோமாளியின் டமாரம் அடித்துக்கொண்டே இருக்கும். ஒரு சில சமயங்களில் நின்றும் போய்விடும். நதிகள் அங்கே நிற்கவே நிற்காது! அதற்கு ஸ்டேஷன்களும் கிடையாது. கொடிகளும் கிடையாது.

நீலம்
, சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா- இன்னும் எத்தனையோ வண்ணங்களில்அங்கு பலூன்கள். அதே போன்று பல்வேறு வண்ணங்கள் கொண்ட மூக்குக்கண்ணாடிகள். அதை இரவிலும் மாட்டிக் கொள்ளலாம். அந்த துப்பாக்கிகளில்தொட்டாவிற்கு பதில் நீர் இருக்கும். தொலைக்காட்ச்சியை கையில் வைத்துத் திருகினால் சினிமா நட்சத்திரங்களின் புகைப்படம் நம்மைப் பார்த்து சிரிக்கும். அங்கு புல்லாங்குழல்கள், பாதியில் வெட்டப்பட்டிருக்கும், விலை மலிவாகஇருக்கும். ஆனால் அதிலிருந்து இசை எழச்செய்வது என்னவோ அதைவிற்பவனால் மட்டுமே முடியும். போம்மைகளுக்கும் இனிப்புகளுக்
கும் ஏங்கித்தவித்து அழும் குழந்தைகளின் நாக்கு என்னவோ மிட்டாய் நிறத்தில் தான் இருக்கும்!

என்
கை சிவப்பாக மின்னிக்கொண்டிருந்தது- அதில் ஒரு மயில் தன
தொகையை விரித்து, அழகாகவும், ஒயிலாகவும் ஆடியிருந்தது. "இதைப் போல் வேறொன்றை நான் என் வாழ்க்கையில் கண்டதே இல்லை" என்று என்னையும் நினைக்க வைத்தது! ஓர் அடி முன்னே எடுத்து வைத்து, நான் பல வருடங்களுக்கு முன்னே கடந்து வந்த பாதைகளை எட்டினேன். பெற முடியாததை பெற்ற குழந்தையின் குதூகலத்தை உணர்ந்தேன்.

சில சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ள சிறு விஷயங்களில் பெரும்சந்தோஷங்கள் நிறைந்துள்ளது. அதை உணரும் போது- பெரும்சந்தொஷங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆழ் மனதையும் அதன்ஏக்கங்களை மறக்கச் செய்து விடுகிறது அந்த உணர்வு. அங்கு சிறுவர்களோடுசிறுமியாக, நானும் என் கையை வண்ணங்களால் நிரப்பிய போது- இந்த உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ஒரேடியாக உள் வாங்கிக் கொண்டதை உணர்ந்தேன். அதில் கனமே இல்லை! பஞ்சைப்போல- மெலிதான ஒரு உணர்வு!

"இன்னும் கொஞ்ச காலம் நீடிக்குமோ இந்த சந்தோஷம்" என்று கூறுவதில்பயனில்லை! வாழ்கையிலும் அநேக ராட்டினங்கள் மேலும்- கீழும் போய்வருவதுண்டு. நம் கைகளில் எந்த வண்ணங்கள் நன்றாக இருக்கும் என்ற முடிவு- நம் கண்களுடயது. இங்கு மிட்டாய்கள், சில கடைகளிலேயே நன்றாக இருக்கும். இங்குள்ள பல ராட்டினங்களில் நீங்களும் சற்றுப் போய்த்தான் பாருங்களேன்....!

This entry was posted on 01 August, 2010 at Sunday, August 01, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

18 comments

Anonymous  

அழகான வர்ணனை ..உங்க கூடயே நானும் வந்து பார்த்தது போல ஒரு பீலிங்க்ஸ் ..
"அங்கு சிறுவர்களோடுசிறுமியாக, நானும் என் கையை வண்ணங்களால் நிரப்பிய போது- இந்த உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ஒரேடியாக உள் வாங்கிக் கொண்டதை உணர்ந்தேன். அதில் கனமே இல்லை! பஞ்சைப்போல- மெலிதான ஒரு உணர்வு!".

இது படிச்ச பிறகு எனக்கும் அதே உணர்வு தான் ..நன்றி

1 August 2010 at 22:58

WOW!! sandhya... what a luck..

I was just now commenting on your blog!

:)

thanks!

1 August 2010 at 23:05

//வாழ்கையிலும் அநேக ராட்டினங்கள் மேலும்- கீழும் போய்வருவதுண்டு. நம் கைகளில் எந்த வண்ணங்கள் நன்றாக இருக்கும் என்ற முடிவு- நம் கண்களுடயது.//

நல்ல சிந்தனை. வாழ்க்கையை ரொம்ப படிச்சிருக்கீங்க போல.

2 August 2010 at 00:18

சில சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ள சிறு விஷயங்களில் பெரும்சந்தோஷங்கள் நிறைந்துள்ளது. அதை உணரும் போது- பெரும்சந்தொஷங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆழ் மனதையும் அதன்ஏக்கங்களை மறக்கச் செய்து விடுகிறது அந்த உணர்வு. அங்கு சிறுவர்களோடுசிறுமியாக, நானும் என் கையை வண்ணங்களால் நிரப்பிய போது- இந்த உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ஒரேடியாக உள் வாங்கிக் கொண்டதை உணர்ந்தேன். அதில் கனமே இல்லை! பஞ்சைப்போல- மெலிதான ஒரு உணர்வு!


...... உண்மை..... நான் அவ்வண்ணமே இருக்கிறேன்...... சரியான கருத்து!

2 August 2010 at 05:41

Your posts are getting cuter day by day

2 August 2010 at 08:58

சிறு சிறு விஷயங்களிலும் நம் சந்தோசம் உள்ளது .

2 August 2010 at 09:09

@ jey...

:) thanks! padikkarathukku inga enna irukku... enubhavam thaaney!

2 August 2010 at 19:58

@chithra...

:) thanks!

2 August 2010 at 19:58

@kalyan...

:D hee..he! i d take that as a compliment! :D thanks!

2 August 2010 at 19:59

@ lk..

true!!

2 August 2010 at 19:59

//அதை உணரும் போது- பெரும்சந்தொஷங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆழ் மனதையும் அதன்ஏக்கங்களை மறக்கச் செய்து விடுகிறது அந்த உணர்வு.//.... மிக அழகான ஆழமான வார்த்தைகள். நானும் நீங்கள் சொல்வதைபோலதான் சின்ன சின்ன சந்தோஷங்களை உள் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

3 August 2010 at 17:16

@ priya...

thanks! :)

4 August 2010 at 13:54

வ‌ண்ண‌க்க‌ன‌வில், வெறும் காற்று ம‌ட்டும் சீறி வ‌ரும்
புது மூங்கில் முக‌ர்ந்து, ராட்டிண‌மேறி, இற‌ங்க‌ ம‌ன‌மின்றி
நின‌வில் சுற்றிக்கொண்டே, அருமையான ந‌னவோடை.

4 August 2010 at 19:02

ஆனால் அதிலிருந்து இசை எழச்செய்வது என்னவோ அதைவிற்பவனால் மட்டுமே முடியும்.
உண்மை. கொட்டாங்கச்சி வயலின் வாங்கிக் கொண்டு வந்து என்ன முயற்சித்தாலும் இசை வரவில்லை. ஆனால் விற்றவனோ என்ன அழகாய் மீட்டினான்..

4 August 2010 at 21:15

@ vasan...

:) nanri!

5 August 2010 at 08:59

@ rishabhan..

unmai.. enakkum antha kottaankachchi violin vaasikka vaendum endru romba aasai!
aanaal.. antha oru variyil pala vishayangal thondrugirathu!

5 August 2010 at 09:01

//இங்குள்ள பல ராட்டினங்களில் நீங்களும் சற்றுப் போய்த்தான் பாருங்களேன்....!
//

இதோ ஊருக்கு வந்துன்டே இருக்கேன் மாதங்கி! அந்த மயில் போலவே ஒயிலான எழுத்து நடை உங்களுக்கு அமையப் பெற்றுள்ளது.

பிரமிப்புடன்,
தக்குடு

5 August 2010 at 12:51

@ thakkudu...

:) thnx!

5 August 2010 at 22:26

Post a Comment