ரப்பர் பந்து  

Posted by Matangi Mawley


இந்த பூமியின் மீது என்னதான் கோபமோ!? அந்த பந்தின் தாக்கத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்திருந்தால் தெரியும். பூமியை துளைத்துக்கொண்டு பிரபஞ்சத்தின் எல்லைகளை எட்டும் போன்ற ஆற்றல்- சீற்றம் அதற்கு! ஆனால் பூமி அதற்கு சம்மதிக்கவில்லை. "உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று ஏளனமாக எள்ளி நகையாடியது- அந்த பந்தைப் பார்த்து!

பூமியின் அழுத்தத்தில் காயமடைந்த பந்து- ஓய்ந்து போய்விடவில்லை! உண்மைகளைப் புரிந்து கொள்ள ஒரு சில நிரந்தரங்களை உடைத்துத்தான் ஆக வேண்டும். கோடுகளின் கோணங்களே புதிய பாதைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன! ஆனால் நிரந்தரங்கள் வலுவானவை! பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்திருக்கும் அவைகள் "உண்மைகள்" என்ற நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டு- அழிக்க முடியா- பெரும் சக்திகளாக பரவி நின்று கொண்டிருந்தன!

அரக்கனின் தலையை வெட்ட-வெட்ட, புதிய தலை முளைப்பது போல! இதன் கருத்தை அறிந்து கொள்ள முயற்சித்தால்- அவன் உயிர் அவனுள் இல்லாது- ஏழு கடல் தாண்டிய ஓர் தீவில், பல்வேறு கணக்கான வாயில்களைத் தாண்டி- அதன் மத்தியில் இருக்கும் இயந்திரக் கிளியில் இருப்பது போன்றது, நிரந்தரத்தின் உண்மை! இந்த நிரந்தரங்களுக்கு ஓய்வும் கிடையாது- அழிவும் கிடையாது! அவைகளின் சக்தி, அவைகளின் 'இருப்பதில்' இல்லை. அவைகளின் 'இருப்பதில்' நம்பிக்கையில் இருக்கிறது!

மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்! "இதன் மூச்சுக்காற்று பட்டாலே இறந்து போய் விடுவாய்"- என்று அவன் கூவுவதை நம்பி, பணத்தை வீசும் ஏமாளிகள்! நிரந்தரங்களுக்கு, இப்படிப்பட்டவர்கள் எம்மாத்திரம்?

ஒரு சில அபூர்வமான ஜீவன்களும் ஜனித்துள்ளனர். உண்மைகளை அறிய முயற்சித்துள்ளனர்! அவர்களின் முயற்சிகள் பாராட்டிற்குரியவையே! ஆனால் நிரந்தரங்களின் கோணங்கள் மிகவும் விநோதமானவை! "உண்மையை நெருங்கினோம்" என்ற எண்ணத்தில் திளைத்துக் கொண்டிருக்கையில்- நிரந்தரங்கள் அவைகளின் மற்றொரு பொய்யை, மெய் படுத்திக் காட்டிவிடுகின்றன! ஏதோ பசியால் துடிக்கும் நாய்க்கு உணவு கொடுத்து மகிழ்விப்பது போல! அந்த ஜீவன்களும் அதன் பொய்யை 'பொய்' என அறிவதற்குள் மகாத்மாக்களாக மாற்றப்பட்டு விடுகிறார்கள்! அப்படி மாற்றப் பட்டவர்கள், அவ்வாறு மாற்றப்பட்டபின், எப்பொழுதுமே- அவர்களின் 'உண்மை தேடும்' தொழிலை மறந்தே போனார்கள்!

பந்து ஓயவில்லை! அதன் இலட்சியங்களை மறக்கவும் இல்லை! பூமியின் சீற்றத்தின் ஒரு- துளியைக் கண்டு, மிரண்டும் போய்விடவில்லை! விண்ணை நோக்கி உயர்ந்தது! புதிய சக்திகளைத் தேடி! பூமியை எதிர்கொள்ள ஆற்றலைத் தேடி! அச்சக்திகளைப் பெற்று மீண்டும் புவியைத் தாக்கியது! மீண்டும் புவியின் தாக்கத்தை அனுபவித்து- அந்த வலியில் உயிர் பெற்று விண்ணை நோக்கி விரைந்தது!

இப்படியாக, அந்த பந்து- தன்னுள் சக்தி இருக்கும் வரையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, மீண்டும் - மீண்டும் முயற்சித்தது! பந்து, நிரந்தரமானதா என்ன? பாவம்! களைப்புற்றுப் போய்விட்டது! அதன் களைப்பு- அது தாக்கிய அந்த புவியின் மீதே அதை உருளச் செய்தது!

மெதுவாக நகர்ந்து, அங்கே வெயிலில் காய்ந்து கொண்டிருந்த துணிகளின் கீழ் தாழ்ந்து போனது! அந்த துணிகளிலிருந்து விழும் ஈரத்துளிகள், பந்தின் மீது சொட்ட, பந்து, மீண்டும் உயிர்பெற்றது!

This entry was posted on 14 July, 2010 at Wednesday, July 14, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

32 comments

அசத்தலான இடுகை! உங்களின் ஆங்கில பதிவுகளையும் தமிழாக்கம் செய்யலாம் :))

//கோடுகளின் கோணங்களே புதிய பாதைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன! ஆனால் நிரந்தரங்கள் வலுவானவை! பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலைத்திருக்கும் அவைகள் "உண்மைகள்" என்ற நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டு- அழிக்க முடியா- பெரும் சக்திகளாக பரவி நின்று கொண்டிருந்தன!//

// நிரந்தரத்தின் உண்மை! இந்த நிரந்தரங்களுக்கு ஓய்வும் கிடையாது- அழிவும் கிடையாது! அவைகளின் சக்தி, அவைகளின் 'இருப்பதில்' இல்லை. அவைகளின் 'இருப்பதில்' நம்பிக்கையில் இருக்கிறது!//

//மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்//

Superb!!

15 July 2010 at 00:03

@shankar...

thamizhaakkam seiyum alavirku thamizh innum payilavillai/pazhakavillai... atharku niraya thamizh padikka vaendum.. naan padiththathillai.. plans are there.. need to find time to read.. muyarchikkiraen..

15 July 2010 at 00:17

சாட்டையடி.
சம்மட்டியடி.
தத்துவக்குடி.

அந்த போதையிலேயே இத எழுதறேன்..

//உண்மைகளைப் புரிந்து கொள்ள ஒரு சில நிரந்தரங்களை உடைத்துத்தான் ஆக வேண்டும். கோடுகளின் கோணங்களே புதிய பாதைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன!//

//மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்! "இதன் மூச்சுக்காற்று பட்டாலே இறந்து போய் விடுவாய்"- என்று அவன் கூவுவதை நம்பி, பணத்தை வீசும் ஏமாளிகள்! நிரந்தரங்களுக்கு, இப்படிப்பட்டவர்கள் எம்மாத்திரம்?//

//பந்து ஓயவில்லை!//
அது வரும்
மீண்டும் வரும்
மீண்டும் மீண்டும் வரும்
மீண்டும் மீண்டு வரும்
மாண்டாலும் வரும்
மீண்டும் வரும்.

எல்லாம் ஒரு அனுவத்துல சொல்றேன்.

என்னுடைய எழுத்து இதோ...
"... மெய்யும் மெய்யில்
உய்யும் பொய்யில்
காணும் காணல்
எல்லாம் கோணல்."

"...தன்னில் உள்ளது
தண்ணீரில் எழுதியதோ?"

லைத்தளங்களில் ஊறுகாய் தேடித்தான் பழக்கம். இங்கே போதையே கிடைக்கிறது நேரடியாக. நன்றி மாதங்கி.

15 July 2010 at 02:41

excellent one.

15 July 2010 at 08:36

// "உண்மையை நெருங்கினோம்" என்ற எண்ணத்தில் திளைத்துக் கொண்டிருக்கையில்- நிரந்தரங்கள் அவைகளின் மற்றொரு பொய்யை, மெய் படுத்திக் காட்டிவிடுகின்றன! //

தத்துவ இயலில் FALLIBILISM
என்று ஒரு தியரி உண்டு. எந்த ஒரு துறையைச் சார்ந்த ஒரு பொருளிலும் முழுமையான அறிவை யாரும் எக்காலத்துமே
பெறுவதே இல்லை.

Fallibilism is the epistemological thesis that no belief (theory, view, thesis, and so on) can ever be rationally supported or justified in a conclusive way. Always, there remains a possible doubt as to the truth of the belief.

அண்டத்தில் உள்ள அனைத்தையுமே என்ன ! அதில் ஒரு சிறு துளியின் முழுப்பரிணாமத்தையும் அறிந்துவிட்டோம் என்னும் நிலை ஏற்படவில்லை. ஏற்படுமா என்ற கேள்விக்கும் பதில் சொல்ல இயலாது. இந்த தியரி முதலில் கலை சார்ந்த துறைகளுக்கு மட்டுமே பொருந்தும் என நினைத்தார்கள். பிறகு இந்த தியரி விஞ்ஞானம், டெக்னாலஜி பற்றிய துறைகளுக்கும் பொருந்துகிறது என்பது தெரிந்தது. உதாரணத்திற்குச் சொல்லப்போனால், வின்டோஸ் எக்ஸ் பி, வின்டோஸ் 8 இன்ஃபாலிபிள் என்றார்கள். ஆனால், அதிலும் தினப்படி புதுப்புது ஓட்டைகள் தெரியவருவதால்,
பாட்ச் அப் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்பது infallibility எனும் வரையறும்புகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும்.
But, the more and more we know, the more and more we know that we are yet to know more of things we think we know at this moment.

இது போல, இன்னொரு ப்ரின்ஸிபிளும் இருக்கிறது.
eno's paradox.
which says that one having started never reaches one's destination.
இதற்கு இன்னமும் ஒரு தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன ?

Simply said,
as our horizon of knowledge expands, so also expands our horizon of ignorance.

உங்கள் ரப்பர் பந்து சிந்தனையைத் தூண்டும் சிநது.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

15 July 2010 at 08:55

@சுப்பு ரத்தினம்: நன்றி :)

15 July 2010 at 10:44

excelllent

15 July 2010 at 11:31

நல்லதொரு பதிவு... மிக அருமையா எழுதி இருக்கிங்க.

15 July 2010 at 18:24

மாதங்கி-சபாஷ்.நீங்கள் தொடும் ஒவ்வொரு திசையும் அடுத்த படி நோக்கி சுவடுகளை நகர்த்த வைக்கிறது.

//மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்!//

//"உண்மையை நெருங்கினோம்" என்ற எண்ணத்தில் திளைத்துக் கொண்டிருக்கையில்- நிரந்தரங்கள் அவைகளின் மற்றொரு பொய்யை, மெய் படுத்திக் காட்டிவிடுகின்றன!//

//அந்த ஜீவன்களும் அதன் பொய்யை 'பொய்' என அறிவதற்குள் மகாத்மாக்களாக மாற்றப்பட்டு விடுகிறார்கள்!//

புத்தியால் மட்டுமே யோசிக்கும் அகந்தை மனிதனை இயற்கையின் அறியமுடியாத உண்மையின் முன்னே மீண்டும் மீண்டும் மண்டியிடவே வைக்கிறது.

ஒரு ப்ரபஞ்சத்தின் நதியில் மிதக்கும் சிறு இலை நதியின் ரகசியங்களை அறிந்ததாகக் கூறுவது போலத்தான் இதுவும்.

உங்கள் சிந்தனையின் வடிவத்தையும் மொழியையும் நமஸ்கரிக்கிறேன் மாதங்கி.

15 July 2010 at 18:58

@ramakrishnan....

wow! that was beautiful!... esp....

"...தன்னில் உள்ளது
தண்ணீரில் எழுதியதோ?"

thanks!

15 July 2010 at 22:26

@sury...


amazing Sir! I have not heard about it before! Excellent piece of information... thanks sir! thanks so much for that!!

15 July 2010 at 22:28

@ LK...


thanks!

15 July 2010 at 22:28

@ priya...

thanks!

15 July 2010 at 22:29

@sundarji...

wow.. thanks sir..

ivalo "appreciation"ku enakku thakuthi irukka/ naan atharku uzhaiththirukkaenaa/ endraal- ennai poruththa varayil illai endru thaan solla vaendum... tamizh padikka vaendum... ivalovu "appreciation"ku ennai thayaar seithu kolla vendum...


thanks!

15 July 2010 at 22:33

@ kalyan...

:) thanks!!

15 July 2010 at 22:34

@sundarji...

"புத்தியால் மட்டுமே யோசிக்கும் அகந்தை மனிதனை இயற்கையின் அறியமுடியாத உண்மையின் முன்னே மீண்டும் மீண்டும் மண்டியிடவே வைக்கிறது."...

yes... ippadiyum eduththukkollalaam... azhagu!

15 July 2010 at 22:35

போராடும் ப‌ந்தின் உயிர்ப்பு ஈர‌த்தில்.
குளிர் விட்டுப் போன‌வ‌ர்க‌ளுக்கு புரியுமா?

19 July 2010 at 16:53

பல வரிகளை எளிதாக கடந்து போய் விட முடிய வில்லை..ஸ்தம்பிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள்...

22 July 2010 at 00:44

@appaavi thangamani...

thanks! :)

25 July 2010 at 14:36

@appaavi thangamani...

thanks! :)

25 July 2010 at 14:36

@vasan..

:) puriyaatharvarkalin mel akkarai kolla ninaippatharkum neram illai!

25 July 2010 at 14:46

@kamalesh..

:) nanri!

25 July 2010 at 14:46

@kamalesh..

:) nanri!

25 July 2010 at 14:47

அற்புதமான பதிவு.. ஏன் திரட்டிகளில் இனைப்பதில்லை :)
தமிழில் நிறைய எழுதவும்..

25 July 2010 at 18:33

@prasanna...

thanks! :)

25 July 2010 at 19:15

மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்! "இதன் மூச்சுக்காற்று பட்டாலே இறந்து போய் விடுவாய்"- என்று அவன் கூவுவதை நம்பி, பணத்தை வீசும் ஏமாளிகள்! நிரந்தரங்களுக்கு, இப்படிப்பட்டவர்கள் எம்மாத்திரம்?////


great one

26 July 2010 at 12:55

@ manguni amaichchar....

thanks!

26 July 2010 at 20:11

எழுத்தில்தான் என்ன ஒரு கருத்தாழம்!! மிகவும் ரசித்தேன் மாதங்கி! உளியால் செதுக்கியது போல் ஒவ்வொரு வரியும் திருத்தமாக உள்ளது. இங்கு வருபவர்கள் சொல்லும் புகழ்ச்சிகள் உங்கள் அறிவின் வீரியத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்!...:)

27 July 2010 at 13:45

@thakkudu...

"இங்கு வருபவர்கள் சொல்லும் புகழ்ச்சிகள் உங்கள் அறிவின் வீரியத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும்.."....... thanks a ton, sir! just what I need! :)

27 July 2010 at 18:11

மனிதர்களை ஏமாற்றுவதற்கு ஓர் பாம்பாட்டியின் திறக்கப்படாத கூடை போதும்
எப்படி ஒரு வரி அனாயாசமாய் நடுவில் வந்து உட்கார்ந்திருக்கிறது..

4 August 2010 at 21:18

@rishabhan..

:) nijam engirunthaal enna!

5 August 2010 at 09:03

Post a Comment